கனவுக் கவிதை (யாமாம் !)
நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/
நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/
காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...
கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...
ஆங்காங்கே சில மனிதர்கள்...
அவர்களும், காக்கைகளால் சுற்றி வளைத்து
தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...
ஒரு தாய் பென்குயின் ,
தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...
பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க,
மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...
ஆங்காங்கே கிடந்த ராட்சத பறவைகள், அவைதம் சிறகுகளென
பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...
தங்கள் வீட்டு காம்பவுண்டில்,
சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...
குழம்பு சோறு முடித்துவிட்டு,
மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த போது,
"வேணுங்கறத எடுத்துக்கோ" என்றதோர் கிழட்டுக் காக்கை...
டிஸ்கி :
என் கனவில் வந்த காட்சிகள் இவை.