Showing posts with label கே.எஸ். ரவிக்குமார். Show all posts
Showing posts with label கே.எஸ். ரவிக்குமார். Show all posts

Sunday, November 1, 2009

ஆதவன்





போன வாரம் நண்பனோட அக்கா கல்யாணத்துக்காக மேலூர் வரைக்கும் போயிருந்தேன்.போன எடத்துல கைய கால வெச்சிக்கிட்டு சும்மா இருந்தாதானே ?! பசங்க கூப்டாங்கன்னு 'ஆதவன்' படம் பாக்கலாமுன்னு போனேனுங்க.

என்னுடைய கொள்கைப் ( ! ) படி, படத்தோட கதைய கேக்காமதான் போனேன்.
இருந்தாலும் நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா? ' படம் செம மொக்க டா ' ன்னு (நம்மள விடவா ?!) சொல்லியும் கேக்காம போனேன்.போனதே பத்து நிமிஷம் லேட். என் நேரம் பார்த்து சூர்யாவ சேஸ் பண்ற சீன்ல இருந்துதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா சொல்லக்கூடாதுங்க , மனுஷன் என்னமா பறந்து பறந்து எஸ்கேப் ஆகறார் தெரியுமா? நம்ம சிலந்திப் பயபுள்ளயவே (அட ... ஸ்பைடர் மேன் தாங்க !) மிஞ்சிட்டார் போங்க.

படத்தின் முதல் பாதியில் வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில இடங்களில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வாராயோ , அசிலி பிசிலி, டமக்கு டமக்கு பாடல்கள் ஹாரிஸ் பெயரை பறை சாற்றுகின்றன. பின்னணி இசைக்கு அவ்வளவாக வேலை இருப்பதாக தெரிய வில்லை.

கேமரா வும் ஓகே.ஆனால் நயன் தாராவின் க்ளோசப் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோ ?

வழக்கம் போல (ஒவ்வொரு படத்திற்கும் ) சூர்யா நடிப்பில் ஒரு மெருகு கூடியிருக்கிறது.பிளாஷ் பேக்கில் வரும் பத்து வயது சூர்யா,முதலில் திரையை உறுத்தினாலும், பிறகு பழகி விடுகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் எதோ அவசரத்தில் படத்தை எடுத்தது போலிருக்கிறது.
(தரணி 'குருவி' யை எடுத்து போல்!). கதை ரமேஷ் கண்ணா வாமே?

ஆதவன் - லாஜிக் பார்க்கா - ஆதவன்.
ஆனால் பிளாப் - ஆகா - ஆதவன்.


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...