நன்றி - புகைப்பட உதவி : www.thehindu.com
பரபரக்கும் காலைப் பொழுது....
மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..
அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்
எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...
தன் மகனாகவோ, அண்ணனாகவோ ,
தந்தையாகவோ , கணவனாகவோ -
தந்தையாகவோ , கணவனாகவோ -
இருக்கக் கூடாதென...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்து
வெளிப்படும் முகங்களைப் பார்க்கிறான்,
தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,
மகனாகவோ ,மனைவியாகவோ -
மகனாகவோ ,மனைவியாகவோ -
இருக்கக் கூடாதா என !
