Showing posts with label ராதிகா. Show all posts
Showing posts with label ராதிகா. Show all posts

Friday, September 11, 2009

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில்.



இன்று தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.
ஏன் ?சொன்னால் நம்ப மாட்டீர்கள்

(அப்புறம் எதுக்கு சொல்றன்னு கேக்கறீங்களா . வேற என்ன பண்றது. ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சி . எதையாச்சி எழுத வேணாமா? .ஒரு போஸ்ட்க்கு டாபிக் கெடைக்கறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி பாத்தாதான் தெரியும் !)

இன்றுதான் அரசி (செல்வியின் இரண்டாம் பாகம்) மெகாத் தொடர் முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக சுபம் போட்டார்கள் (இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் சுபம்).வரும் திங்கட் கிழமை முதல் அடுத்த அபத்தம் ஆரம்பம். செல்லமே என்ற புதிய மெகாத் தொடர் போடப் போகிறார்கள்.

அதிலும் ராதிகா வுக்கு தொல்லை கொடுப்பதேற்கே யாராவது வில்லன்களும், பாழாய்ப்போன விதியும் வரும். அதையெல்லாம் பல வருடங்களில் எப்படி தாண்டி வருகிறார் என்பதுதான் கதையாக (!) இருக்கும்.

அதெப்படி இவ்ளோ கரெக்டா சொல்றேன்னு பாக்கறீங்களா?
சற்றேறக்குறைய எல்ல தமிழ் மெகாத் தொடர்களிலும் இதுதான் கதையாகக் கொள்ளப் படுகிறது.இப்போது இந்த மாதிரியான தொடர்களிலும் சண்டை,பாட்டு எல்லாம் போடுகிறார்கள்.

இந்த வகையில் விஜய் டிவியும் மக்கள் டிவி, சாரி மக்கள் தொலைக்காட்சியும் கொஞ்சம் பரவாயில்லை.


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...