Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, May 22, 2011

கனவுக் கவிதை (யாமாம் !)...

 கனவுக் கவிதை (யாமாம் !)



நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/

காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...
கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...

ஆங்காங்கே சில மனிதர்கள்...
அவர்களும், காக்கைகளால்  சுற்றி வளைத்து 
தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...

ஒரு தாய் பென்குயின் , 
தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...

பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க, 
மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...

ஆங்காங்கே கிடந்த ராட்சத  பறவைகள், அவைதம் சிறகுகளென
பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...

தங்கள் வீட்டு காம்பவுண்டில், 
சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...

குழம்பு சோறு முடித்துவிட்டு, 
மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த  போது,
"வேணுங்கறத  எடுத்துக்கோ" என்றதோர்  கிழட்டுக் காக்கை...





டிஸ்கி :
என் கனவில் வந்த காட்சிகள் இவை.

Thursday, May 5, 2011

அக்ஷய திருதியை சிறப்புக் கவிதை (யாமாம் !)




                      நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html


அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால்,
வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று,
எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,
நகைக் கடை வரிசையில்!


===========================================================================


                    நன்றி : புகைப்பட உதவி - http://flickrhivemind.net


அதிகாலையில் இருந்தே,
ஒரு எறும்பும், நானும்,
உன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கோலம் போட,  நீ அரிசி மாவை எடுத்துக் கொண்டு வருவாய் என்றும்,
கோலம் போட, அரிசி மாவை எடுத்துக் கொண்டு நீ வருவாய் என்றும் !



Saturday, November 13, 2010

மாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் !)



 நன்றி - புகைப்பட உதவி  : www.thehindu.com


பரபரக்கும் காலைப் பொழுது....

மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..

அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...

நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்

எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...

தன் மகனாகவோ, அண்ணனாகவோ , 

தந்தையாகவோ , கணவனாகவோ -

இருக்கக் கூடாதென...


நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்து

வெளிப்படும்  முகங்களைப் பார்க்கிறான்,

தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,

மகனாகவோ ,மனைவியாகவோ -

இருக்கக் கூடாதா என !

Tuesday, October 5, 2010

என்ன செய்ய ? - கவிதை(யாமாம் !)

 டிஸ்கி : கீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.





இன்றைக்கு அலுவலகம் போவோமா ?

இல்லை வேண்டாமா ?

ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!

சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.

அது சரி... 


ஆனால்....

பூ விழுந்தால்  போவதா ?

இல்லை தலை விழுந்தால் போவதா ?!



புகைப்பட உதவி - www.delawareonline.com

************************************************************************************************
இந்த கவிதையை(!) எழுதும் போது எனக்கு நண்பன் ஒருவன் அனுப்பிய குறுந்தகவல் ஞாபகம் வருகிறது.

முடிவெடுக்க சிரமமாய் இருக்கும் போது, பூவா தலையா போட்டுப் பாருங்கள். அதன் முடிவுக்காக இல்லை. நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !

Sunday, May 23, 2010

இப்படியும் இப்படியும்தான்.....



என்றாவது வரும் பின்னூட்டம்...
தினமும் மெயில் செக் பண்ணும் புது பதிவர்...


*****************************************************************

நெருப்பாய் டிக்கெட் பரிசோதகர் - அடுத்த நிறுத்தத்தில் ....
குளிர்ச்சியாய் திடீர் வேகத் தடை...



*****************************************************************

கலப்படக்காரன் கடையில்
ஐநூறு ருபாய் சில்லறை மாற்றும்
தாடிக் காரன் மேல் சந்தேகப் பார்வை...

*****************************************************************

ரொம்ப நேரம் யோசிச்சும் நாலாவது எழுத முடியலங்க...
யாரவது எழுதிப் போடுங்க...

*****************************************************************
'ஒரிஜினல்'  இங்கேயும் ,
'ஒரிஜினல் ஒரிஜினல்' இங்கேயும் ....

வானம்பாடிகள் ஐயாவும், ஈரோடு கதிர்  அண்ணனும் மன்னிக்கவும்.
சும்மாதான்....

Saturday, May 22, 2010

தலைப்பில்லாப் பதிவுகள்... 22 .05 .2010

ஒரு கேள்வி...


வரும் கல்வி ஆண்டு முதல் , பொறியியல் படிப்புகளை தமிழில் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது தமிழக அரசு. ஏற்கனவே , தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை படித்து விட்டு, பிறகு பொறியியல் பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் தொடர்வதற்கு கிராமப் புற மாணவர்கள் படும் பாடு , பெரும்பாடு. அப்படி தட்டுத் தடுமாறி B .E முடித்து விட்டாலும் கூட, பிறகு வேலைதேடும் போது, போதிய ஆங்கில அறிவு (COMMUNICATION SKILLS) இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில பல லட்சங்களைத் தொடும் ! இப்போது, B .E கூட தமிழில் என்றால் , பின்பு வேலைக்கு என்ன செய்வது ?! ஏற்கனவே , ஆங்கில வழி கல்வி ஆனாலும் , முழு  நேரமாக பட்டப் படிப்பு படித்திருந்தால் மட்டுமே வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கின்றன பல நிறுவனங்கள். "நான் B .E தமிழ் மீடியம் " என்று சொன்னால், வேலை யார் தருவார்கள் ? ஒருவேளை, அவ்வாறு தமிழ் வழியில் பொறியியல் படிப்பவர்களுக்கு வேலை பெற்றுத் தருவதில் , தமிழக அரசு உதவி புரியும் என்று சொன்னால் யாராவது சேருவார்கள்.இல்லையேல் , இவ்வாறான படிப்புகளில் சேர்வதற்கு எந்த மாணவனும் முன்வர மாட்டான் !  உண்மையிலேயே தமிழை வளர்க்க வேண்டுமென்று விருப்பப்பட்டால், தமிழை ஒரு பாடமாக  வேண்டுமானால்,அறிமுகம் செய்யலாம் ! மாறாக, தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை! தானாக வளரும் !அதை விடுத்து .....!  இன்றளவும், நான் தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தேன் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் !

ஒரு கவிதை (யாமாம் !)......



உன் அக்கா கல்யாண ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்..
என் அப்பாவைக் காட்டி 'அப்பா' என்றேன்...
நீ 'மாமா' என்றாய்....
ஏன் அம்மாவைக் காட்டி 'அம்மா' என்றேன்...
நீ 'அத்தை' என்றேன்...
என்னைக் காட்டி 'நான்' என்றேன்...
நீயும் 'நான்' என்றாய் !

ஒரு ஜோக்...

"ச்சே... இந்த முறையும் போரில் தோற்று விட்டோமே மந்திரி..."
"பரவாயில்லை விடுங்கள் மன்னா , 2011  ல பாத்துக்கலாம் "


 ( "சரி, ஜோக் சொல்றேன்னு சொன்னியே ?! எங்க" ன்னு கேக்கப் படாது ! இந்த ஜோக்குக்கு சிரிக்காமல் செல்பவர்களின் பதிவுகளில் , இதையே பின்னூட்டமாக போடப் படும் !)



பின் குறிப்பு : மேலே உள்ள படத்திற்கும் ஜோக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை !

ஒரு உறுத்தல்....



நடந்து முடிந்த IPL 3 இல், பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடி , சென்னை அணியை அரை இறுதிக்கு அழைத்து சென்றார் தோனி . அந்த ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில் , " ஒவ்வொரு அணி முதலாளியும் , தங்கள் அணிகளை நம்பி பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்கள் . அதற்காகவாவது, நாங்கள் அரையிறுதி வரியிலாவது முன்னேற வேண்டும் " என்று சொன்னார். ஆனால், நடந்து முடிந்த மூன்றாவது 20 - 20  உலகக்கோப்பையில் , என்ன செய்தீர்கள் தோனி  ?! அணியில் ஒற்றுமை இல்லாத வரை எந்த ஒரு அணியும் வெற்றியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...