Showing posts with label வள்ளுவர் கோட்டம். Show all posts
Showing posts with label வள்ளுவர் கோட்டம். Show all posts

Sunday, December 20, 2009

கலைஞருக்கு தமிழ்த் தலை மகன் விருது...




இன்று மாலை , நண்பனுடன் வள்ளுவர் கோட்டத்திற்கு சென்றிருந்தேன் (ஆ ... ஊ.. ன்னா கெளம்பிர்றாங்க.... ! ) . கலைஞருக்கு , கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ' தமிழ்த் தலை மகன் ' விருது வழங்கும் விழா.

துணை முதல்வர், மத்திய - மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கட்சிக் காரர்கள் , தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், பத்திரிக்கை - ஊடகப் பணியாளர்கள் ,பொது மக்கள் என எல்லோரும் வந்திருந்தும், ஏனோ கூட்டம் குறைவாகவே இருந்தது . விழாவிற்கு , அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமை ஏற்பதாக இருந்தது. அனால் உடல் நலம் குன்றியதால் அவர் வரவில்லை. திரு . வா. செ . குழந்தைசாமி தலைமை ஏற்றார். நடிகர் சிவகுமார், கவிப் பேரரசு வைரமுத்து , முனைவர் . அவ்வை நடராசன், திரு. குமரி அனந்தன் ஆகியோர் கலைஞருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மூன்று மாதங்களில் , கலைஞருக்கு நடைபெறும் நான்காவது பாராட்டு விழா இது. வழக்கம் போல், வைரமுத்து , கலைஞரைப் பாராட்டித் தள்ளி விட்டார்.பதிலுக்கு கலைஞரும் ! சிவகுமார் பேச ஆரம்பித்த உடன் , ஏனோ தெரியவில்லை , விசில்கள் பறந்தன . விழாவின் இறுதியில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் உண்டாக உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தனர் . ஏற்புரையில், கலைஞர் , கொல்கத்தா மட்டுமல்ல - எங்கெல்லாம் தமிழ்ச் சங்கங்கள் கஷ்டப் படுகின்றனவோ , அவை எல்லாவற்றிற்கும் இந்த அரசு உதவி செய்யும் என்றார். மேலும் தன்னுடைய உதவியாளர் சண்முக நாதனைப் பற்றியும் நெகிழ்ந்து பேசினார். கலைஞர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் கொஞ்சம் பேர் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களை, சிலர் போக வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தனர். முதல் முறையாக கலைஞர் பேச்சை நேரடியாக கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது.

நிகழ்ச்சியை திருமதி.பர்வீன் சுல்தானா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அநேகமாக, கலைஞர் தொலைக் காட்சியில் இந்த விழா ஒளிபரப்பாகும் . விழா முடிந்து , எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்கும் போது , நானும் நண்பனும் , திரு . குமரி அனந்தன் அவர்களை சந்தித்து பேசினோம். மிகவும் கனிவாக பேசினார் - எளிமையான மனிதர். எங்கள் விருப்பப் படி , அவருடன் புகைப் படம் எடுக்கவும் இசைந்தார். என் நண்பனும், திரு. குமரி அனந்தனும் இருக்கும் படம் தான் , மேலே உள்ளது ! மேலும் திருமதி . பர்வீன் சுல்தானாவையும் சந்தித்து பேசினோம் . ஆனால் அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்ற வில்லை !

என்னைப் பொறுத்த வரை, கலைஞருக்கு தமிழ்மொழி தொடர்பாக எந்த விருது கொடுத்தாலும் , அதற்கு அவர் தகுதி உடையவரே!


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...