Thursday, September 30, 2010

நகைச்சுவை - நேர்முகத் தேர்வுகள் நடைபெறுவது எப்படி ?!


டிஸ்கி : எதோ ரொம்ப சீரியசான இடுகைன்னு நெனைச்சு வந்தவங்க மன்னிக்கணும். வழக்கம் போல, நகைச்சுவைங்கற பேர்ல மொக்கை தான் !

*********************************************************************************************************

எங்கள் கல்லூரியில், நடைபெறும் கலைநிகழ்சிகளில் , நாங்கள் MIMING என்ற பெயரில், பல மொக்கைகள் போட்டிருக்கிறோம்.எல்லாமே "ரீமிக்ஸ்" தான். பக்கத்துக்கு கல்லூரியில் நடந்த MIMING ஐ, அப்படியே பட்டி பார்த்து, டிங்கரிங் பண்ணி மேடையேற்றினோம். முதல் முறை, நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. பின்பு அதே MIMING ஐ மூன்று முறை PERFORM பண்ணின போது, அதை விட "பயங்கர" ரெஸ்பான்ஸ் ! இந்த எல்லா MIMING க்கும், நாந்தான் டைரக்டர் ! (நாங்க எல்லாருமே இப்படித்தான் சொல்லிக்குவோம் !)


அப்படியான ஒரு கலைநிகழ்ச்சியில்,  ஒரு கம்பெனிக்கு எல்லா நடிகர்களும் நேர்காணலுக்கு வருவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. அதற்குரிய வாசனைகளை நான் எழுத, சக படைப்பாளி (!) ஒருவன், வடிவேலு போல  மிமிக்ரி செய்து அரங்கேற்றினோம் ! அந்த வசனம் இங்கே உங்கள் பார்வைக்கு !


*********************************************************************************************************


"ஏங்க , நேத்து இண்டர்வியூக்கு போனீங்களே என்ன ஆச்சு ?"




"அதா ஏம்மா கேக்குற ?"


"ஏன் என்னங்க ஆச்சு ?!"


"மொதல்ல ஒரு ரெண்டு பேருதாம்மா  கேள்வி கேட்டானுங்க. அப்புறம் அதுல ஒருத்தன், திடீர்னு MGR க்கு போன் போட்டு,
'மச்சான், இங்க ஒருத்தன் சிக்கியிருக்கான் , நீ கொஞ்சம் வர முடியுமா' ன்னு கேட்டான் !"


"எது, MGR க்கு போன் போட்டானா ?"

"ஆமாம்மா, எல்லா 'கம்பேனிலையும்' இருப்பானுங்க இல்ல ? இந்த வேலைக்கு ஆளு எடுக்குற பயலுக !"


"ஓஹோ , HR க்கு போன் போட்டாங்கன்னு சொல்லுங்க!"




"அது என்ன எழவோ தெரியலம்மா. அப்புறம் அங்க போனா, அங்க ஒரு மூணு  பேரும்மா, ஒன்ற(1 .5 ) மணிநேரம்,  அவனுங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்விம்மா, சும்மா திணறத் திணற கேட்டானுங்க."


"ஹ்ம்ம்...?!"



"நானும் சரி கேட்டுட்டு போங்கடான்னு விட்டுடேன். நானும் எவ்ளோ நேரந்தான், பதில் தெரிஞ்சா மாதிரியே நடிக்கிறது ?!"


"இவ்ளோ கேள்வி கேட்டானுங்களே, நீங்க ஒன்னும் சொல்லலையா ?!"


"ஹ்ம்ம்ஹூம்..."


"ஏங்க ?!"

"கேள்வி கேட்டிட்டுருக்கும்  போது அதுல ஒருத்தன் சொன்னான்,
'மச்சான், எவ்ளோ கேள்வி கேட்டாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்'னு ஒரு வார்த்த சொல்லிட்டாம்மா !!!"




*********************************************************************************************************
 இவ்வாறாக, ஒருவழியாக வேலை கிடைச்சாச்சு ! அப்புறம், வேறென்ன ?! "இன்கிரிமென்ட்" தானே ?!


அதுக்கும் ஒரு கதை இருக்கு, 
அதை இங்கே CLICK பண்ணி  பாத்துக்குங்க!
சம்பள உயர்வு பெறுவது எப்படி ?!
ஆனா, இங்க வடிவேலுதான் முதலாளி !

புகைப்பட உதவி : ராஜ் டிவி, YOU TUBE, iStream.in

Sunday, September 5, 2010

நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 3

நான் ரொம்பவும் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று நான் நானே நினைத்துக்  கொள்வேன் ! 

அது எப்படி என்று கேட்கிறீங்களா ?! 








முதல் வரியை மீண்டும் படிக்கவும் !


அவ்வாறு நான் நினைக்க காரணமாயிருந்த சில தருணங்களில், நான் கூறிய வசனங்களை இங்கே ஒரு தொடராக இடுகையிட்டு வருகிறேன். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன (!) .




நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 1 
நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 2

முடிந்தால், அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்களேன் ?!

 *********************************************************************************************************

அலுவலகத்தில், சூடான அரசியல் விவாதங்கள் அடிக்கடி நடக்கும். ஒருநாள், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருக்கும் (?) ,கிரீன் பீல்ட் விமான நிலையம் பற்றி பேச்சு திரும்பியது. அந்த விமான நிலையத்திற்கு ஏன் அந்த பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

"விவசாய நிலங்களில் அமைய இருப்பதால் அப்படி பேர் வெச்சிருப்பாங்க  ?! " ன்னு சொல்லி  வைத்தேன்.


 *********************************************************************************************************

அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளார் ஒருவர், இடது கையால் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஓரளவிற்கு எழுதினாலும், மெதுவாகவே எழுத முடிந்தது அவரால் ! என்னருகே வந்து அவ்வாறு எழுதிக் காண்பித்தார்.

"நான் இதவிட  வேகமா இடது  கையில் எழுதுவேன் " என்றேன்.


"நிஜமாவா ?!"

"ஆமாங்க !" - இது நான்.

20 நொடி இடைவெளி....

"ஆனா யாரும் படிக்க முடியாது !"



 *********************************************************************************************************

ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு விடுமுறைக்கு தவறாமல் ஊருக்கு சென்று விடும் நண்பனொருவன், இந்த வாரம் போகாமல், சென்னையிலேயே இருந்துவிட்டான். நான் அலைபேசியபோது இதை என்னிடம் சொன்னான்.

"ஏண்டா இந்த வாரம் ஊருக்கு போகல ?!" - நான்.

"சித்தப்பாவும், சித்தியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க டா" - நண்பன்.

"அவங்களுக்குதான் , ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே டா ?!" - நான் !

புகைப்பட உதவி - http://iconicon.net

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...