Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Friday, July 16, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 2...

'நான் ஏன் பதிவரானேன்' னு ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன்...

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1 ..

நீங்கள் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே இன்னொன்று !!


****************************************************************************************
என் அம்மா எப்பொழுதுமே பால் காய்ச்சும் போது கொஞ்சம் நிறையவே ( கொஞ்சமா இல்லை நிறையவா ?! ) தண்ணீர் ஊற்றுவார்.


"ஏம்மா, பால்ல இவ்ளோ தண்ணி கலக்குற ?! "


"ரொம்ப 'திக்'க்கா பால் குடிச்சா ஹார்ட் ப்ராப்ளம் வரும்ப்பா !! "


"ஆனா, ரொம்ப தண்ணியா குடிச்சா , கிட்னி ப்ராப்ளம் வந்துடுமேமா !"


****************************************************************************************

எங்கள் அலுவலகத்தில் வாரமொருமுறை அல்லது இருமுறை மீட்டிங் போட்டு , யாராரு எவ்ளோ ஆணி புடுங்கனும், எப்பக்குள்ள புடுங்கனும்னு டீடைலா சொல்லுவாங்க !
அதுவும் காலை போன உடனே ! ஆரம்பிச்சா ஒரு ஒன்றை மணி நேரம் தாங்கும் !! ஒரு நாள், காலை 'பேருண்டி' ( கொஞ்சமா சாப்பிடுறவங்களுக்குதான் 'சிற்றுண்டி'  !) சாப்பிடாமலே போய் விட்டேன் .அந்த நேரம் பார்த்து ,

"சரி மீட்டிங் வெச்சுக்கலாமா ?!" , இது குழு தலைவர் ( TEAM LEAD ஆமாம் !!)

"மொதல்ல ஈட்டிங் முடிச்சுக்கலாம் !" - வேற யாரு , அடியேன் தான் !

****************************************************************************************

அலுவலக நண்பர்கள் , ட்ரிங்க்ஸ் அடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"என்னய்யா , இன்னிக்கு சரக்கா ?!"

"ஆமா ! அந்த பிளான்ல தான் இருக்கேன் !"

"உனக்கு பரவாயில்ல , பேட்சுலர் ரூம்ல இருக்க . நான் சரக்கடிக்குறது தெரிஞ்சா, வீடு ரெண்டாயிடும் ! "

"சரக்கடிச்சா , வீடு மட்டுமில்ல , எல்லாமே 'ரெண்டா'யிடும் !!"

 ****************************************************************************************
சின்ன வயசுல ,  'அவரு FOREIGN ல இருந்து வந்திருக்காரு' , 'இவரு அடுத்த வாரம் FOREIGN போகப் போறாரு' ன்னு  மத்தவங்க பேசுறதக் கேட்டிருக்கேன் ! அப்பவெல்லாம் நான் நெனச்சுப்பேன் ,

"அமெரிக்கா , ஜப்பான் மாதிரி 'FOREIGN ' ங்கற பேர்ல   ஒரு வெளி நாடு இருக்கும் போல !"

ஆமா, அந்த FOREIGN எங்க இருக்குங்க ?!  



 ****************************************************************************************
 டிஸ்கி : இந்த இடுகைக்கு போட வேண்டிய டிஸ்கி ஏற்கனவே பாகம் 1 க்கு போட்டதைப் போலவே இருக்குமென்பதால், அதைப் படித்துவிடுமாறு கேட்டுக் 'கொல்'கிரேன் !

Sunday, May 9, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1...

"நீ ஏன் பதிவர் ஆனே ?" ன்னு நீங்க கேக்கலைனாலும், சொல்லவேண்டியது என் கடைமைங்க ! . மேல படிங்க . 


என்னங்க ? 'மேல' படிங்க ன்னா , கீழ படிக்கிறீங்க ? சரி படிச்சிட்டு போங்க !

**********************************************************************************************************************************************************

முதலாமாண்டு மாணவர் விடுதி... மதிய உணவு நேரம்... அனைவரும் அரக்க பறக்க உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது ஹாஸ்டலில் தரப்படும் அப்பளத்தை, அடுத்தவர் தட்டிலிருந்து 'ஆட்டையப் ' போடுவது ஒரு பேஷன் ! என் நெருங்கிய நண்பன் ஒருவன் , என்னுடைய அப்பளத்தை எடுக்க , தட்டில் கைவைக்க முனைந்தான் !
நான் - " முதல்ல  அப்பளம் , FRIEND எல்லாம் அப்பறம் " !

**********************************************************************************************************************************************************


அதே முதலாமாண்டு மாணவர் விடுதி. எங்கள் அறையில் எப்போதும் மாணவர் கூட்டம் கூட்டி அரட்டையடித்துக் கொண்டிருப்போம். யாராவது ஒருத்தர் மாட்டினால் போதும், அவனை கிண்டலடிப்பதுதான் அன்றைய பொழுது போக்கு ! அந்த வகையில், மாட்டிய ஒருவனை எல்லோரும் ஒட்டகத்தை சுத்தம் செய்பவன்   என்று ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவனும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தான்.

" வாரத்துக்கு எத்தன நாள் இந்த வேலை ?" இது நண்பர்கள்.
"வாரத்தில் 5  நாள் தான்"
"அப்ப மற்ற நாட்கள் ?!"
"ரெஸ்ட் தான் !"
"ரெஸ்ட் ஒட்டகதிற்க்கா ?! உனக்கா ?!" - நான் .

**********************************************************************************************************************************************************

கல்லூரி படிப்பு  முடிந்து , வேலை தேடிக்கொண்டிருந்த காலம். கல்லூரி நண்பன் ஒருவன் போன் செய்து, தான் யாரென்று சொல்லாமல் 'சஸ்பென்ஸ்' வைத்துக் கொண்டிருந்தான் .

"டேய் , நீ யாருன்னு சொல்டா . இல்ல ஒரு 'க்ளூ' வாவது கொடேன் !" - நான்.
"நீ எந்த காலேஜ்ல படிச்ச ?"
"_______ காலேஜ் ல ."
"எந்த BRANCH ?" - இது நண்பன்.
"IT "
"எந்த வருஷம் ?"
"நாலு வருஷமும் அதே BRANCH தான் ?" - அடியேன்.
அதுக்கு பிறகு அவன் கால் பண்ணவே இல்லை !

**********************************************************************************************************************************************************
அலுவலகத்தில் நண்பர்களுடன் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். நண்பர் கொண்டு வந்திருந்த தோசையில், சிறிய கல் ஒன்று இருந்தது.
"என்னப்பா , தோசையில கல் இருக்கு ?" மற்றொரு நண்பர்.
" 'கல்' தோசை கேள்விப் பட்டதில்லையா ? அதான் இது " - வேறு யார், நாந்தேன் !

**********************************************************************************************************************************************************

ஒரு வருடத்திற்கு முன்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பொருளாதார பெருமந்தம் தனது வேலையை காட்டிக் கொண்டிருந்த காலம்.உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த  நான் , தலை முடியை நன்றாக SHORT ஆக வெட்டியிருந்தேன்.
"இது என்னப்பா , புது விதமான கட்டிங் ? " - உறவினர் .
"இதுதாங்க COST CUTTING ! " - பிரபல(!) பதிவர் தேசாந்திரி - பழமை விரும்பி (அட , நாந்தாங்க , அப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது !! ).

**********************************************************************************************************************************************************
ஒருவாரம் முன்பு , அலுவலக நண்பர்களுடன்  மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பேச்சு நித்யானந்தா பற்றி திரும்பியது. அப்போது , ஒரு நண்பர் சொன்னார்,

"புட்ட பர்த்தி சாய்பாபா , ஆள் எப்படின்னு தெரியாது. ஆனால், அவர் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்கிறார். இதுமாதிரி, தனக்கும் செய்து, மற்றவருக்கும் எதாவது செய்தால் பரவாயில்லை . ஆனால், நித்தியானந்தா ?!"

"அதுக்குதான் , CD விட்டிருக்காங்களே ?!" - நான் !

**********************************************************************************************************************************************************

அரசியல் பேசிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் சொன்னார் ,
" 'மக்கள் நல திட்டம்' ங்கற பேர்ல, திட்டத்திற்கு ஒதுக்கிய  பணத்தை திருடறதுலயே எல்லாரும் குறியா இருக்கானுக !"
" 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' னு நீங்க கேள்விப் பட்டதில்ல ?!"

**********************************************************************************************************************************************************

நமக்குள்ள இவ்வளவு 'திறமை' இருக்கும் போது, நான் ஏன், வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது ?! நீங்களே சொல்லுங்க !


டிஸ்கி - மேலே சொன்னதெல்லாம், ஒரு தமாசுக்குதான் . உண்மையில் , இளவஞ்சி,வால்பையன் , போன்றோர்களின் வலைதளத்தை பார்த்த பிறகுதான் , பதிவுலகிற்குள் பாதம் பதிக்கும் ஆசை வந்தது. அவர்களுக்கு என் நன்றிகள். இவர்கள் மட்டுமல்லாமல், என் வலை தளத்திற்கு வந்து, FOLLOWERS ஆகியும், ஆகாமலும், பின்னூட்டங்கள் இட்டும், இடாமலும்  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும் ,GOOGLE க்கும்  மற்ற அனைவருக்கும் என் நன்றிகள் .

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...