Showing posts with label மாநகரம். Show all posts
Showing posts with label மாநகரம். Show all posts

Saturday, September 26, 2009

எத்தனை நாளாச்சு...?




எத்தனை
நாளைக்குத்தான் தியரி மட்டும் எழுதுறது...?
சும்மா ஒரு தடவ, போயம் - உம் ட்ரை பண்ணலாம் என்ற நப்பாசையில் இந்த பதிவு.
அதாங்க - கவிதை எழுதி பாக்கலாமுன்னு... (என்ன கொடும சரவணன் இது..?)

முன் குறிப்பு : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் இந்த கவிதையை படிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


எத்தனை நாளாச்சு ..? (தலைப்பாமாம்.!)
-----------------------------------------------

எத்தனை நாளாச்சு...?
சைக்கிள் ஓட்டி..

எத்தனை நாளாச்சு ...?
மாலை மழையில் நனைந்து...

எத்தனை நாளாச்சு ...?
வானவில் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
அண்ணாந்து விமானம் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வீட்டில் லாந்தர் ஏத்தி...

எத்தனை நாளாச்சு...?
ஒலியும் ஒளியும் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வானொலி செய்தி கேட்டு...

எத்தனை நாளாச்சு...?
சென்னைக்கு வந்து...

(இன்னும் என்ன எதிர் பார்க்கறீங்க..? அவ்ளோதான்,கவிதை முடிஞ்சது !
ஒரு ஊர்ல ஒரு நரி , இதோட கவிதை சரி. )

பின் குறிப்பு: பின் குறிப்பு வரை படித்த தைரிய சாலிகளுக்கு ஒரு சவால்.முடிந்தால் இன்னொரு தடவை இந்த கவிதையை(!) படிக்கவும்.

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...