Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Saturday, December 26, 2009

சுனாமி நினைவு நாள்...




இன்றுடன் , சுனாமி தாக்கி, ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகின்றன. கடந்த இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு , இதே நாளில் , பல நாடுகளைத் தாக்கிய சுனாமி , கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களை பலி கொண்டது. எனக்கு விவரம் தெரிந்து , குஜராத் நிலநடுக்கத்திற்குப் பிறகு, நான் கேள்விப் பட்ட மிகப் பெரிய இயற்கை சீற்றம் இதுதான். அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருந்த வீட்டில் , பொங்கலை முன்னிட்டு , வெள்ளை அடிக்கும் பனி இருந்து கொண்டிருந்தது. நானும் கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டிற்கு வந்திருந்தேன். முதன் முதலில்,காலை எட்டு மணிக்கு சன் டி.வி யில் தான் ' பிளாஷ் ' நியூஸ் போட்டார்கள். " சென்னையில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது . நூற்றுக் கணக்கான மக்களை காண வில்லை " என்று. பிறகு ஆழிப் பேரலை என்று அறிவித்தார்கள். ஒரு நாள் கழித்துதான் , தொலைக் காட்சிகளில் ' சுனாமி ' என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தினார்கள். சுமத்ரா தீவில், ஏற்பட்ட நில நடுக்கம் தான் சுனாமிக்கு காரணம் என்றும் அறிவித்தனர்.

இந்தோனேசியா , இலங்கைக்கு பிறகு , சுனாமியால் அதிகம் பாதிக்கபட்ட நாடு, இந்தியாதான். தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலமும், சுனாமியால் இந்த அளவு பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் மொத்த உயிரிழப்பு ஐந்து ஆயரதிற்கும் குறைவுதான் என்று சட்டப் பூர்வமாக அறிவித்தாலும், மொத்த உயரிழப்பு , பத்தாயிரத்தைத் தொடும் என்று கூறப் படுகிறது.

உயிரிழப்புகளைத் தாண்டி உலகம் சந்தித்த பாதிப்புகள், ஏராளம். உடல் ஊனமுற்றவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலுக்கான ஆதாரங்களை இழந்தவர்கள் என்று அந்த பட்டியல் நீள்கிறது. ஆனால் , அப்போதும் , இறந்தவர்களின் உடம்பிலிருந்து , நகைகளைத் திருடிய சம்பவங்களும் நடந்தன . இந்த ஐந்தாம் ஆண்டு நினைவு நாளிலும், சுனாமியால் பாதிப்படைந்தவர்கள் தங்களுக்கான நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவதைக் காண முடிகிறது !

நான் கல்லூரி படிக்கும் போது, எங்கள் கல்லூரி சார்பில் வெளியிடப் பட்ட ஒரு புத்தகத்தில், நான் எழுதிய ஒரு கவிதையை ( ! ) பிரசுரம் செய்தார்கள்.

-------------------------------------------------------------------------
காடு மேடு வாங்கியவர்களிடம் காசு வாங்கினால் - பினாமி ,
காற்று வாங்க வந்தவர்களை காவு வாங்கினால் - சுனாமி .
-------------------------------------------------------------------------

இதைப் படித்த எனது நண்பர்கள், இது வேறு யாரோ எழுதியதைப் போல் உள்ளதாகவும், ஏற்கனவே எங்கோ படித்த ஞாபகம் இருப்பதாகவும் கூறினார்கள். உங்களுக்கு எப்படி ? எதற்கும் இந்த பக்கத்தின் மேலே உள்ள , ' டிஸ்க்ளைமர் ' ஐ, ஒருமுறை படித்து விடவும்.


Sunday, November 29, 2009

ருத்ரம்...





இன்று அடையாறு கணபதிராம் தியேட்டரில் ' ருத்ரம் ' படம் பார்க்க போயிருந்தேன். ரெண்டே முக்கா மணி ஷோவுக்கு , ஒண்ணே முக்காவுக்கே போயாச்சு . படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் ஆகியும் கூட்டம் கொறஞ்சபாடில்ல. ஆனாலும், ' நாமதான் சீக்கிரம் போய்ட்டோமே ' ன்னு நாப்பது ரூபா கியூவில நின்னேன். (பால்கனி டிக்கெட் ஐம்பது ரூபா) . கடைசியில நாற்பது ரூபா டிக்கெட் நாப்பத்தஞ்சு ரூபாக்கு குடுத்தாங்க. அதிலயும் அஞ்சு ரூபா மீதி சில்லறை இல்லன்டானுங்க.

நானெல்லாம் பஸ்ல ஐம்பது காசு மீதி குடுக்கலன்னாவே , கண்டக்டர்கிட்ட கேட்டு வாங்கற ஆளு. ஆனா இங்க என்னடான்னா , அஞ்சு ரூபாவ ஆட்டயப் போட்ட ஒடனே எனக்குள்ள இருக்குற ' அந்நியன் ' , முழிச்சுக்கப் பார்த்தான். ஆனா, படம் போட்டாச்சுனு தெரிஞ்சதும் , அந்நியன் சகிதமா, அமைதியா , உள்ள என்டர்ஆயாச்சு.

சரி இந்த கதைய விடுங்க. நம்ம , ' ருத்ரம் ' பத்தி பாப்போம்.

படம் ஆரம்பிச்ச சில நிமிஷங்களிலேயே , படத்தின் பிரம்மாண்டம் தியேட்டர் முழுவதும் வியாபிக்க ஆரம்பித்து விடுகிறது . படத்தின் கிராபிக்ஸ் கலைஞர்கள் ஒரு நிஜமான பூலோக பிரளத்தையே கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். படத்தின் நிஜமான கதாநாயகன் கிராபிக்ஸ் தான். மிரட்டி எடுக்கும் கோணங்களில் ஒளிப்பதிவும் பிரமாதம்.

ஆனால் கதாபாத்திரங்கள், தங்களுக்கு பின்னால் உலகமே அழிந்து கொண்டிருக்கும் போது , ஏதோ டிவி பார்ப்பது போன்று அதை பார்க்கிறார்கள் .

இப்படி ஒரு படம் , இந்தியத் திரை உலகில் எடுக்கப் படுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது (இப்போதைக்கு ! ) . ஆனால் நம்மவர்கள் ' டப்பிங் ' பேசிய விதம் , ஒரு தமிழ்ப் படம் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கிறது. படத்தில் ஆங்காங்கே நகைச்சுவைக்கும் இடமிருக்கிறது. தமிழில் வசன உபய தாரர் பாராட்டுக்குரியவர். சில சமயங்களில் அரங்கம் அதிரும் அளவிற்கு கைத் தட்டல்கள். முக்கியமாக இந்திய விஞ்ஞானி ஒருவரைப் பாராட்டும் போது ! சில இடங்களில் வசனமில்லாத போதும் கைதட்டல் பறக்கிறது.

படத்தில் உள்ளது போன்று இரண்டாயிரத்திப் பன்னிரெண்டில் உலகம் அழிகிறதோ இல்லையோ, ஒருவேளை அழிந்தால் இப்படி இருக்கலாமோ என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்குகின்றது. உலக வெப்பமயமாதலின் விளைவுகளில், மோசமானதாக இருக்கக் கூடிய பல இயற்கை சீற்றங்களை ஒன்றிணைத்து , படம் பண்ணியிருக்கிறார்கள்.

ருத்ரம் சொல்ல வரும் விஷயம் - ' உலகம் பத்ரம் ( பத்திரம் ) ' !


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...