Showing posts with label விஜய் ஆண்டனி. Show all posts
Showing posts with label விஜய் ஆண்டனி. Show all posts

Tuesday, March 30, 2010

அங்காடித் தெரு...

கடந்த சனிக் கிழமை , நானும் நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் "அங்காடித் தெரு " திரைப்படம் பார்த்தோம். எங்கே டிக்கெட் கிடைக்காமல் போய் விடுமோ என்று 2 .30 மணி ஷோவிற்கு , 2  மணிக்கே டிக்கெட் கவுண்ட்டரில் ஆஜர் ! கிட்டத் தட்ட 10 வது ஆளாக நின்று கொண்டிருந்தேன். கூட்டம் குறைவு தான்! 25 ரூபாய் டிக்கெட்.வாங்கிக் கொண்டு உள்ளே போய் FAN க்கு கீழே இடம் போட்டு உக்காந்தாச்சு !



வசந்த பாலனுடைய  'வெயில்' திரைப்படம் எனக்கு பிடித்தமான திரைப் படங்களில் ஒன்று ! ஆனால், அந்த படத்தை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது (?!) , CD யில் பார்த்தது ! அது அறியாத வயசு ! இப்போதெல்லாம் திரைப்படங்களை  ( திருட்டு ) CD யில் பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே ஒரு வித ஆர்வம்  கலந்த எதிர்பார்ப்புடன் தான் படத்திற்கு சென்றேன்.படத்திற்கு அவ்வளவாக விளம்பரம் செய்யப் படவில்லை என்பதால் கூட கூட்டம் குறைவாக இருந்திருக்கக் கூடும் !

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இது ஒரு 'எதார்த்த' சினிமா என்று உணர்த்தி விடுகிறார்கள் . " அது என்னடா ?! ஆ, ஊன்னா எதார்த்த சினிமா , எதார்த்த சினிமா - ன்னு சொல்றீங்க ?!" ன்னு கேட்கிறீர்களா ? ஒண்ணுமில்லைங்க , படத்தில் வரும் காட்சிகள் நிஜத்திலும் நடக்க சாத்தியம் இருந்தால் , அதுதான் எதார்த்த சினிமா ! படத்தின் கதாபாத்திரங்களில் ,உங்களையும் , உங்களை சார்ந்தவர்களையும் எளிதாக பொருத்திப் பார்க்க முடிகிறதென்றால் அதுதான்  எதார்த்த சினிமா !!



நமக்கு வெறும் செய்திகளாகத் தெரியும் நிகழ்வுகள், அது சார்ந்தவர்களின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது என்பதை அழகாக , மிக அழகாக சொல்லியிருக்கிறார் வசந்த பாலன். கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் மகேஷ் , சரியான தேர்வு. அஞ்சலியும் கூட ! மகேஷின் நண்பன் - மாரிமுத்து வாக நடித்திருப்பவரும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். துணிக் கடையில் SUPERVISOR ஆக வரும் இயக்குனர் A .வெங்கடேஷ் அந்த பாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம் ! வாழ்த்துக்கள் !! இது போன்று , கதாபாதிரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்வதிலேயே வெற்றிக்கு பலமான அடித்தளம் போட்டிருக்கிறார் வசந்த பாலன் .படம் நெடுக , சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வந்து ஆச்சர்யமூடுகின்றன !


இசையமைப்பாளர்கள் இருவர் - G .V பிரகாஷ் குமார் மற்றும் விஜய் ஆண்டனி. "அவள்அப்படி ஒன்றும் அழகில்லை " தவிர மற்ற பாடல்கள் எதுவும் படம் பார்ப்பதற்கு  முன்பு தெரியாது . படம் பார்த்த பிறகும் கூட. ஆனால் , எந்த பாடலும் தேவை இல்லாத இடைச்செருகலாக தெரிய வில்லை! ஜெய மோகனின் வசனங்களும் படத்திற்கு ஒரு பலம் தான் ! ஒளிப்பதிவாளரும் வசந்த பாலனுக்கு கை கொடுக்கிறார். கலை இயக்குனருக்கும் பாராட்டுகள் !!



படம் பார்ப்பதற்கு முன்பு நண்பனின் கருத்தை கேட்ட போது, "மெகா சீரியல் மாதிரி இருக்குடா " ன்னு சொன்னான் ! எனக்கொன்றும் அப்படித் தோன்ற வில்லை.எனக்கு மெகா சீரியல்கள் பிடிப்பதில்லை , நான் பார்ப்பதுமில்லை !! எனக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கையில் , இன்னுமொன்றை கூட்டியிருக்கிறார் வசந்த பாலன்.

அங்காடித் தெரு - தி.நகர் ரங்கநாதன் தெரு !!

மேலும் விவரங்களுக்கு ,

அங்காடித் தெரு - திரைபடத்தின் இணையதளம் CLICK க்குங்க

Saturday, January 2, 2010

வேட்டைக் காரன்




இந்த புது வருடத்தை , ஒரு நல்ல படத்துடன் தொடங்கிய திருப்தியில் (அட , நெஜம்மாத்தாங்க !!) , ' வேட்டைக் காரன் ' விமர்சனத்தை எழுதுகிறேன் .

விஜய்யை பற்றியும் , வேட்டைக்காரன் பற்றியும் எக்கச் சக்கமாக , சர்தார்ஜி ரேஞ்சுக்கு எஸ்.எம்.எஸ் களும், மின்னஞ்சல்களும் ( நான் இப்போதெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளை ரசிப்பதில்லை ) வந்தாலும், படத்தை தியேட்டரில் தான் பார்ப்பது என்று முடிவு செய்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு திருவான்மியூர் தியாகராஜாவில் நேற்று இரவு ' வேட்டைக் காரன் ' பார்த்தேன்.

ஏற்கனவே ஹிட் - ஆன பாடல்கள் படத்திற்கு பெரும் பலம் ( உபயம் - சன் தொலைக்காட்சி குழுமம் மற்றும் விஜய் ஆண்டனி ) . ஏற்கனவே தொடர்த் தோல்விகளால் ( குருவி , வில்லு ) துவண்டு போயிருந்த இளைய தளபதிக்கும், அவர் ரசிகர்களுக்கும் சற்று ஆறுதல் தரக் கூடிய படம் இது. விஜயின் அரசியல் பிரவேசம் இந்த படத்தின் மூலம் தெளிவாகிவிடும் என்று நினைத்தவர்களுக்கு, படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியவுடன் சூட்சுமம் புரிந்திருக்கும்.

தீபாவளிக்கு வரவண்டிய படமிது. தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக( ! ) டிசம்பரில்தான் வெளியிட முடிந்தது.

செல்லாவாக வரும் வில்லன் , தமிழுக்கு ஒரு நல்ல அறிமுகம் . வேத நாயகமாக வருவது , அட , நம்ம சக்கரக் கவுண்டர் ! அனுஷ்காவுக்கு, பாடல்களில் மட்டும் திறமைக்கு சவால். முதல் பாதியில் காதலும், காமெடியுமாக கலக்கும் விஜய், இரண்டாம் பாதியில், ஆக்சனில் வெளுத்து வாங்குகிறார். படத்தில், ஆங்காங்கே சில தர்க்க ( லாஜிக் ) குறைபாடுகள் இருந்தாலும், வேகமான திரைக்கதை அந்த குறைகளை பூர்த்தி செய்து விடுகின்றது.

சரி , விமர்சனத்தின் இறுதியில், படத்தின் பெயரை பயன் படுத்தி ஒரு பன்ச் வைக்க வேண்டும் என்று , விதி ஒன்றும் இல்லையே ?!

---------------------------------------------------------------------------------------------
கீழே உள்ள படங்களில் வித்தியாசமான ஒன்றை தேர்ந்தெடுங்கள் . (ஆங்கிலத்தில் சொன்னால் , ' ஆட் மேன் அவுட் ! )

>> குருவி ,
>> வில்லு ,
>> வேட்டைக் காரன்.

---------------------------------------------------------------------------------------------

மேலே உள்ள கேள்விக்கு என்னுடைய பதில், " வேட்டைக் காரன் " !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...