Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Sunday, April 4, 2010

கவுண்ட மணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது....

" எது? நம்ம கவுண்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதா? யார் கொடுத்தாங்க ? எப்போ கொடுத்தாங்க ? " என்று கேள்விக் கணைகளுடன் நீங்கள் இந்த பதிவிற்கு வந்திருப்பது எனக்குப் புரிகிறது. இதெல்லாம் நாமளா செய்யறதுதாங்க ! அவர் ஆட்சியில் இருந்தாலாவது , மாதம் இரண்டு விருது வழங்கிக் கொள்வார். ஆனால் பாவம் , மனுஷன் ஆஸ்பத்திரியில்தானே இருக்கிறதா பேசிக்கறாங்க ?

ஆகவே," நம்ம கவுண்டருக்கு நாம விருது கொடுக்கலைனா , வேற யாரு கொடுக்கிறது ?! " என்று , நமது பதிவர் சங்கத்தின் (!) பொதுக் (?) குழுவில் கூடி முடிவு செய்தது போல , திருவாளர் கவுண்டமணி அவர்களுக்கு "வாழ் நாள் சாதனையாளர் " விருது வழங்குவதென ஒருமனதாக (?!) தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.



அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற , என்னென்ன தகுதிகள் இருக்கிறது என்று நீங்கள் கேட்டீர்களேயானால் , என்னால் தர  முடிந்த ஒரே பதில் , ( ஜெகத் இரட்சகனைப் போல !) " எங்க இஷ்டம் , நாங்க குடுப்போம் !". என்னுடைய சிறு வயதில், நான் 'கரகாட்டக் காரன் ' திரைப்ப் படத்தை மட்டும் கிட்டத் தட்ட 10 முறை பார்த்திருப்பேன் ! காரணம் நம்ம கவுண்டர் ஐயாவா அல்லது இளையராஜாவா என்பது இன்னும் எனக்கு புரியவில்லை.. அந்த வாழைப் பழ காமெடி சீனுக்காகவே படம் பார்க்கப் போனவன் நான் !



அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் TV கிடையாது. எங்காவது ,TV  இருக்கிற வீடாகப் பார்த்து அந்த வீட்டின் வாசலிலேயே நின்று, கவுண்டருக்காகவே , கதவிடுக்கின் வழியாக எட்டிப் பார்த்து , திட்டு  வாங்கியும் (என் வீட்டிலும் , அந்த TV  வீட்டிலும் ) மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்திருக்கிறேன்.இதனாலேயே, என் அப்பா கரகாட்டக்காரன் ஆடியோ கேசட் வாங்கிவந்தார். கேசட் வாங்கியாச்சு சரி - TAPE RECORDER ? ஆம், கரகாட்டக் காரன் கேசட்டுக்காக ஒரு புது TAPE RECORDER வாங்க வைத்தவன் நான்! பால்யத்தில் மிகவும் விரும்பிப் பார்த்த கவுண்டமணி செந்தில் காமெடிகள் , பதின் வயதுகளில் எரிச்சலூட்ட்டக் கூடியவையாக இருந்தன. ஆனால், இப்போது மீண்டும் அவற்றையே விரும்புகிறேன் ! இதுதான் அவர்களின் வெற்றி !!




இதுவரை அவருக்கு பெரிய அளவிலான விருதுகள் எதுவும் வழங்கப் படவில்லை என்ற எனது ஆதங்கமே இந்த பதிவின் ஆரம்பம்.வாங்க, நாம எல்லோரும்  சேர்ந்து கொடுப்போம் இந்த விருதை,

அவருடைய இடம் இன்னும் நிரப்பப் படாமலேயே இருக்கிறது.அதை நிரப்புவதும் கஷ்டம்.உண்மையில், அவர் ஒரு சாதனையாளர் தான் இல்லையா ?இனி அரசு விருதுகளில், சிறந்த நகைச்சுவை கலைஞர்களுக்கு "கவுண்டமணி விருது" வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்! நீங்க என்ன சொல்றீங்க ?!

Wednesday, September 16, 2009

கலைஞர்-க்கு அண்ணா விருது





கடந்த சனிக் கிழமையன்று நானும் என் நண்பனும் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தோம் . முதலமைச்சர் கலைஞர், அண்ணா விருது பெற்றதை அடுத்து அதற்கு காரணம் என்ன என்று ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள்.

கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதால் என்று தென்னவனும்,
ஏழைகளுக்கு உதவுவதால் என்று அமைச்சர் பொன்முடியும்,
பேச்சாற்றலால் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும்,
எழுத்தாற்றலால் என்று கவிபேரரசு வைரமுத்துவும்,
பகுத்தறிவுதான் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசாவும்,
இன்னுமோர் தலைப்பில் சுப.வீரபாண்டியனும் பேசினார்கள்.


கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.
இந்த கருத்தரங்கத்திற்கு கவிஞர் வாலி நடுவராக இருந்தார்.
இந்த வயதிலும் வாலியின் கவிதை வரிகள் வசீகரிக்கவே செய்கின்றன.

அவர் சொன்ன கவிதையில் இருந்து சில வரிகள்.

...
கலைஞர் -க்கு அண்ணா விருது.
அண்ணாவுக்கு..? கலைஞரே விருது !

வந்தவர்களுக்கெல்லாம் வாரி கொடுப்பதால் இது கொடை நாடு.
கொட நாடு ? (சில நொடிகள் மௌனம்....)
கொட நாடு .... அது கொடா நாடு !
......



எல்லாம் சரி ....
கருத்தரங்கத்தின் ஆறு தலைப்புகளோடு இன்னும் சிலவற்றை சேர்த்திருக்கலாம்
என்றெனக்கு தோன்றியது.

விருது கொடுப்பது தி . மு . க என்பதால்,
தி . மு . க விற்கு தலைவர் கலைஞர் என்பதால்...


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...