Sunday, May 30, 2010

இப்போ உங்களுக்கு வயசு 13... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?

நிறைய தமிழ் படங்களில் பார்த்திருப்பீர்கள் ! கதாநாயகனையோ அல்லது வில்லனையோ சூழ்ந்து கொண்டு  ஒரு மன நல மருத்துவர்  தன் கையால்  காற்றில் வட்டமிட்டுக் கொண்டே, "இப்போ உங்களுக்கு வயசு 13 . இப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க ? " என்பது மாதிரியான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பார் ! அவ்வாறு , எனது  பால்யத்தை திடீரென்று ஞாபகப் படுத்திய ஒரு மின்னஞ்சல் இது. வெறும் புகைப் படங்களாகத்தான் வந்தது . அங்கங்கே , என்னுடைய 'கை வண்ணம்' ( வசனங்கள் தான் !)  கோர்த்து ( டேய் !) இங்கு வடித்துள்ளேன் ! (டேய் டேய் !!)

மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றிகள் !

 ******************************************************************************************************************

சில விஷயங்கள் , ஒரு புகைப்படம் போல மனதில் பதிந்து விடுகின்றன இல்லையா? அதுபோன்று நம்முடைய பால்யத்தில் நம் மனதில் பதிந்து, இப்போது புதைந்து போன சில விஷயங்களை ஞாபகப் படுத்தும் ஒரு முயற்சியாக இந்த இடுகை... (சூப்பர் பில்ட் அப்பு ! )

1 . மூன்றாம் வகுப்பு வரை ,என் பள்ளிக் கூட வாழ்கையின் முக்கிய குறிக்கோளே , ஒரு INK பேனா வாங்க வேண்டுமென்பதுதான் ! இதற்காக, பள்ளியில் கட்டாயப் படுத்துகிறார்கள் என்று பொய் கூட சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், எல்லோர் வீட்டிலும் INK பாட்டில் இருக்காது. நாங்களெல்லாம் , எங்கள் பள்ளிக் கூடத்திற்கு முன்னாடி இருக்கும் 'செல்லா ஸ்டோர்ஸ்' இல் , 10 பைசாவிற்கு BRIL INK நிரப்பிக் கொள்வோம். புதியதாக பேனா வாங்குபவர்களுக்கு INK இலவசம் !



2 . பள்ளிக் கூட ஆரம்ப  நாட்களில், புதியதாக வாங்கிய நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போட்டு, LABEL ஓட்டுவது ஒரு கலை ! எங்களூரில், 'ஜெயந்தி ஸ்டூடியோஸ்' இல் தரும் இலவச லேபில்களே என்னுடைய பெரும்பான்மையான அட்டைகளை ஆக்கிரமித்திருக்கும் ! எல்லாவற்றையும் ஓட்டுவது இந்த CAMEL GUM மூலம்தான் !



3 . CHEAP அண்ட் BEST என்றால், அந்த வயதில் ரெனால்ட்ஸ் பேனாதான் ! ஒரு பேனா வாங்கினால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாங்கும் ! (அப்போதெல்லாம், நான் இந்த அளவிற்கு 'எழுத்தாளன்' (!) இல்லீங்க ! ). அப்பிடி காலியானாலும், ரீபில்  மட்டும்தான் வாங்குவோம் ! பழைய BODY யை , அது  விரிசல் விட்டிருந்தாலும் , செல்லோ டேப் போட்டு ஒட்டி உபயோகிப்போம் !



4 . BALL POINT பேனாவிலிருந்து , INK பேனாவிற்கு மாறுவது ஒரு சந்தோஷமென்றால் , INK பேனாவிலிருந்து HERO பேனாவிற்கு மாறுவது அதைவிட சந்தோசம் ! உண்மையில், என் வகுப்பில் யார் HERO பேனா வைத்திருக்கிறானோ , அவன்தான் HERO !


5 .எங்கள் வீட்டில், வருடத்திற்கு ஒரு GEOMENTRY  BOX எல்லாம் வாங்கித் தர முடியாது !
ஒன்று வாங்கினால், அது அப்படியே 'அடுத்த வாரிசுக்கு' தரப் படும் ! எப்படியும் கணிதப் பாடத்திற்கு மட்டும் தான் தேவை என்பதால், இண்டர்வல்களிலும், உணவு இடைவேளைகளிலும் , மாற்றி மாற்றி உபயோகம் செய்வதும் நடக்கும். இப்போதும், ஏதாவது GEOMENTRY பாக்ஸ் பார்த்தால், அதை , 'கடித்துத்' திறந்தது ஞாபகத்திற்கு வருகிறது , அல்லது, கடித்துத்   திறந்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது !
மேலும் GEOMNTRY BOX என்றாலே அப்போது (இப்போதும் ?!)  NATRAJ தான் !



6 . நாம் பள்ளி வாழ்க்கையில் , பேனாவிற்கு நிகராக அல்லது அதிகமாக பயன் படுத்தியது  பென்சிலாகதான் இருக்க வேண்டும் ! என்னுடைய பால்யத்தில் , 1 ரூபாய்க்கு NATRAJ பென்சில் கிடைக்கும் ! NATRAJ பென்சில் சிகப்பும் கருப்பும் கலந்து இருக்கும் ! SHARPNER மூலம் சீவிய பிறகு இருக்கும் குப்பையை (?) எங்கள் புத்தகத்தில் சேமித்து வைப்போம் !


7 . என் பதின் வயதுகளில் , பள்ளிக் கூடமற்ற நேரங்களில் , என்னுடன் எப்போதும் இருப்பது  பக்கத்துக்கு வீட்டின் TAPE RECORDER தான்.எப்போதும், MGR தத்துவப் பாடல்களும், சிவாஜி சோகப் பாடல்களும் , 80 களில் வந்த இளைய ராஜா பாடல்களனைத்தும் ஒலித்துக் கொண்டிருக்கும்! நமக்கு தேவையான பாடல்களை கடைகளுக்கு எழுதிக் கொடுத்தால், பக்கத்திற்கு 6 பாடல்கள் என்று 12 பாடல்கள் பதிந்து தருவார்கள் !


8 . இதே போன்று VIDEO கேசெட். சுருக்கமாக 'டெக்' என்று சொல்வோம் ! பணக்கார கல்யாண வீடுகளில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு பொருள் !எங்கள் ஊரில், ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி 'மாட்டுக் கார வேலன்' உம், 'கவுரவம்' உம் , VIDEO வாடகைக்கு எடுத்து பார்த்தோம் !


9 . கணினி துறை சம்பந்தமான பொருட்களில் , கணினிக்கும் முன்பே , எனக்கு பரிச்சயமானது FLOPPY தான். இதற்குள் எப்படி தகவலை சேமிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகத் தோன்றும் ! 10 வருடங்களுக்கு முன்பு, ஆச்சர்யமளித்த ஒரு பொருள் ,இப்போது  OUT OF FASHION அல்லது OUT OF PASSION ஆகி விட்டது !




10 . புகைப் படங்கள் எப்போதும் ஆச்சர்யமளிப்பவை ! கூடவே , கேமராவும் ! நம் கண்களில் காணும் உலகத்திற்கும் , கேமரா வழியே காணும் உலகத்திற்கும் வித்தியாசங்கள் அதிகமிருப்பதாக உணர்கிறேன் நான் ! அதன் வழியே காணும் உலகம் அழகானதைத் தோன்றும் எனக்கு ! உங்களுக்கு ?!



11 . அப்போதெல்லாம்,  வீடுகளின் பொருளாதாரத்தை, அந்த வீட்டில் தொலைபேசி இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே தீர்மானிக்கப் படுவதாக நினைத்திருக்கிறேன் ! எங்கள் வீட்டிற்கு தொலை பேசி இணைப்பு கொடுத்ததை , ஒரு பண்டிகையைப் போல கொண்டாடியிருக்கிறோம் ! ஏதேனும் அழைப்பு வந்தால், அதை எடுப்பதில் எங்களுக்குள் சண்டையே நடக்கும் ! ஆனால், இப்போது செல்லிடப் பேசி ( CELL PHONE ) இல்லாத வாழ்க்கையை நினைத்துப்  பார்க்கவே பயமாக இருக்கிறது !



12 . தொலை பேசி இல்லாத காலங்களில் ,தபால் காரரின் வருகைக்கு காத்திருப்பது சுகமான ஒரு விஷயம் ! இன்றும் பண்டிகை தவறாமல் அஞ்சல் அட்டையில் வாழ்த்து அனுப்பும் பெரியப்பா , அப்போது மாதமொருமுறை கடிதம் எழுதுவார் ! பிறகு, முழு ஆண்டு தேர்வு முடிந்து , தேர்வு முடிவுகளும் POST CARD மூலமாகத்தான் ! 'தேர்ச்சி பெற்றுள்ளான் ' என்று , எங்கள் தமிழ் ஆசிரியை எழுதி அனுப்பிய கடிதத்தை பார்த்தவுடன் , நம் பதிவிற்கு 1000 பின்னூட்டங்கள் வந்தது போன்று ஒரு மகிழ்ச்சியிருக்கும் !அப்போது  தபால் காரர் , குடும்பத்தில் ஒருவரை போன்று நெருக்கமானவரை இருந்தார்! இன்று, கடிதங்களையோ அல்லது தபால்காரர்களையோ பார்க்க முடிவதில்லை , அல்லது நாம் கடிதங்கள் எழுதுவதில்லை ! நீங்கள் கடைசியாய் யாருக்கு , எப்பொழுது கடிதம் எழுதி அதை POST செய்தீர்கள் என்று நினைவிருக்கிறதா ?!



 மேலும்  சில  புகைப்படங்கள் , பால்யத்தில் நான் உபயோகிக்காத , எனக்கு பரிச்சயமில்லாத பொருட்கள். இவை தொடர்பான உங்களின் , ஆட்டோ கிராப் கள் வரவேற்கப் படுகின்றன .







சிறந்த ஆட்டோகிராப்புகளுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த BIKE பரிசாக வழங்கப் படும். மாதிரி BIKE கீழே !







 



போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! படத்தை பெரிதாக்க , CLICK பண்ணி பாருங்கள் ! நன்றி !!
 
(குறிப்பு : ஒருவேளை உங்களுக்கு பரிசு கிடைத்தால் , உங்களின் DRIVING லைசென்சையும் கொண்டு வரவும் !)

Sunday, May 23, 2010

இப்படியும் இப்படியும்தான்.....



என்றாவது வரும் பின்னூட்டம்...
தினமும் மெயில் செக் பண்ணும் புது பதிவர்...


*****************************************************************

நெருப்பாய் டிக்கெட் பரிசோதகர் - அடுத்த நிறுத்தத்தில் ....
குளிர்ச்சியாய் திடீர் வேகத் தடை...



*****************************************************************

கலப்படக்காரன் கடையில்
ஐநூறு ருபாய் சில்லறை மாற்றும்
தாடிக் காரன் மேல் சந்தேகப் பார்வை...

*****************************************************************

ரொம்ப நேரம் யோசிச்சும் நாலாவது எழுத முடியலங்க...
யாரவது எழுதிப் போடுங்க...

*****************************************************************
'ஒரிஜினல்'  இங்கேயும் ,
'ஒரிஜினல் ஒரிஜினல்' இங்கேயும் ....

வானம்பாடிகள் ஐயாவும், ஈரோடு கதிர்  அண்ணனும் மன்னிக்கவும்.
சும்மாதான்....

Saturday, May 22, 2010

தலைப்பில்லாப் பதிவுகள்... 22 .05 .2010

ஒரு கேள்வி...


வரும் கல்வி ஆண்டு முதல் , பொறியியல் படிப்புகளை தமிழில் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது தமிழக அரசு. ஏற்கனவே , தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை படித்து விட்டு, பிறகு பொறியியல் பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் தொடர்வதற்கு கிராமப் புற மாணவர்கள் படும் பாடு , பெரும்பாடு. அப்படி தட்டுத் தடுமாறி B .E முடித்து விட்டாலும் கூட, பிறகு வேலைதேடும் போது, போதிய ஆங்கில அறிவு (COMMUNICATION SKILLS) இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில பல லட்சங்களைத் தொடும் ! இப்போது, B .E கூட தமிழில் என்றால் , பின்பு வேலைக்கு என்ன செய்வது ?! ஏற்கனவே , ஆங்கில வழி கல்வி ஆனாலும் , முழு  நேரமாக பட்டப் படிப்பு படித்திருந்தால் மட்டுமே வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கின்றன பல நிறுவனங்கள். "நான் B .E தமிழ் மீடியம் " என்று சொன்னால், வேலை யார் தருவார்கள் ? ஒருவேளை, அவ்வாறு தமிழ் வழியில் பொறியியல் படிப்பவர்களுக்கு வேலை பெற்றுத் தருவதில் , தமிழக அரசு உதவி புரியும் என்று சொன்னால் யாராவது சேருவார்கள்.இல்லையேல் , இவ்வாறான படிப்புகளில் சேர்வதற்கு எந்த மாணவனும் முன்வர மாட்டான் !  உண்மையிலேயே தமிழை வளர்க்க வேண்டுமென்று விருப்பப்பட்டால், தமிழை ஒரு பாடமாக  வேண்டுமானால்,அறிமுகம் செய்யலாம் ! மாறாக, தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை! தானாக வளரும் !அதை விடுத்து .....!  இன்றளவும், நான் தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தேன் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் !

ஒரு கவிதை (யாமாம் !)......



உன் அக்கா கல்யாண ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்..
என் அப்பாவைக் காட்டி 'அப்பா' என்றேன்...
நீ 'மாமா' என்றாய்....
ஏன் அம்மாவைக் காட்டி 'அம்மா' என்றேன்...
நீ 'அத்தை' என்றேன்...
என்னைக் காட்டி 'நான்' என்றேன்...
நீயும் 'நான்' என்றாய் !

ஒரு ஜோக்...

"ச்சே... இந்த முறையும் போரில் தோற்று விட்டோமே மந்திரி..."
"பரவாயில்லை விடுங்கள் மன்னா , 2011  ல பாத்துக்கலாம் "


 ( "சரி, ஜோக் சொல்றேன்னு சொன்னியே ?! எங்க" ன்னு கேக்கப் படாது ! இந்த ஜோக்குக்கு சிரிக்காமல் செல்பவர்களின் பதிவுகளில் , இதையே பின்னூட்டமாக போடப் படும் !)



பின் குறிப்பு : மேலே உள்ள படத்திற்கும் ஜோக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை !

ஒரு உறுத்தல்....



நடந்து முடிந்த IPL 3 இல், பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடி , சென்னை அணியை அரை இறுதிக்கு அழைத்து சென்றார் தோனி . அந்த ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில் , " ஒவ்வொரு அணி முதலாளியும் , தங்கள் அணிகளை நம்பி பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்கள் . அதற்காகவாவது, நாங்கள் அரையிறுதி வரியிலாவது முன்னேற வேண்டும் " என்று சொன்னார். ஆனால், நடந்து முடிந்த மூன்றாவது 20 - 20  உலகக்கோப்பையில் , என்ன செய்தீர்கள் தோனி  ?! அணியில் ஒற்றுமை இல்லாத வரை எந்த ஒரு அணியும் வெற்றியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது !

Saturday, May 15, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.... 50 வது இடுகை

என்னுடைய 10    மாத கால பதிவுலக வாழ்க்கையில் ( ! ) , இது 50 இடுகை. எப்படியோ GOOGLE புண்ணியத்தில், இலவச வலைத்தளம் ஆரம்பித்து விட்டு, இனி என்னத்தை எழுதப் போகிறோம் என்று முழித்துக் கொண்டு இருந்த நான், என்ன என்னத்தையோ எழுதி இருக்கிறேன். பிரபல பதிவரின் , 50  இடுகையில் பங்கு பெறும் பாக்கியம்  தேடிக் கொள்கிறது  'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் '  ! வாழ்த்துக்கள் !



50 வது இடுகைன்னு நெனச்சி நான் போட்ட 49 இடுகை , '"நான் ஏன் பதிவரானேன்? ".... 49 வது இடுகை ....!' . இதையும் , என்னுடைய முதல் இடுகை -முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ).

இதையும் ஒரு முறை படித்து விட்டு வந்துருங்களேன் !


 கடந்த ஞாயிற்றுக் கிழமை செகண்ட் ஷோவிற்கு
அடையார் கணபதிராம் தியேட்டரில் IKMS (IRUMBU KOTTAI MURATTU SINGAM ) படம் பார்க்க போனோம்.மொத்தம் 8 பேர். நான்தான் முதலில் டிக்கட் கவுன்ட்டரில் நின்று கொண்டிருந்தேன்.போகப் போக கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. டிக்கெட் கிடைப்பதே கஷ்டம் என்றாகிப்  போனது. நான் வழக்கமாக, எந்த படத்திற்கும் அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்க மாட்டேன். இந்த வாரம் இல்லைனா , அடுத்த வாரம் .அவ்வளவுதான் ! ஆனால், என்னையும் நம்பி ,' நீ டிக்கெட் எடுத்து வைடா, நாங்க வந்துகிட்டே இருக்கோம் ' னு சொன்ன , நம்ப பசங்களுக்காக கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன்.

இனியும், ' காந்தி ' யா இருந்தா டிக்கெட் கிடைக்காது என்பதையறிந்து , ' சுபாஷ் சந்திர போஸ் ' ஆக மாறி ( நன்றி - வல்லரசு மகாராஜன் ) நான் நாலு டிக்கெட்டும் , நண்பன் நாலு டிக்கேட்டுமாக   வாங்கி உள்ளே சென்றமர்ந்தோம் ! எனக்கு , மன்னன் படத்தில் வரும் ரஜினி- கவுண்டமணி சீன் ஞாபகம் வந்தது! நல்ல வேளை , நாங்கள் போகும் வரை படம் ஆரம்பிக்க வில்லை ! நான் இதுவரை சிம்பு தேவனின் 'இம்சை அரசன் 23 ம் புலிகேசி ' படம் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். 'அறை எண் 305 இல் கடவுள் ' படம் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.புலிகேசி படம் கூட ஏதோ லொள்ளு சபா பார்த்த பீலிங் தான் கொடுத்தது. ஆனால், லொள்ளு சபா  எனக்கு பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதைப் பார்ப்பதற்காகவே , கல்லூரி  விடுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உள்ள ஒரு மெஸ் க்கு கும்பலாக போவோம்.



முதலில் , கல்பாத்தி S அகோரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! ஒரு புதிய (பழைய ?) முயற்சிக்கு, தாராளமாக முதலீடு செய்திருப்பதே பெரிய விஷயம் தான்! அடுத்து , 'மதராசப் பட்டிணம் ' படம் கூட அவரது தயாரிப்புதான் என நினைக்கிறேன். கல்பாத்திகளுக்கு வாழ்த்துக்கள் ! படத்தின் ஆரம்பத்திலேயே சிம்பு தேவனின் கிளிஷேக்கள் நம்மை வரவேற்கின்றன.படத்தின் ஆகப் பெரும் பலம் , கலை இயக்குனர் தான். செட் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதில் இருந்து, நிகழ் காலத்தின் எந்த ஒரு பாதிப்பும் எங்கும் பட்டு விடாமல் காப்பாற்றியிருக்கிறார். அடுத்து , ஒளிப்பதிவாளர் N .அழகப்பன் அவர்கள்.கலை இயக்குனர் பட்ட கஷ்டத்தை  எல்லாம் , திரையில் கொண்டுவந்து அதற்கான பலனை உண்டாக்கி விடுகிறார். அதுவும், கடைசி அரை மணி நேர காட்சிகளுக்கான காமிரா கோணங்கள் அருமை.

 சின்ன சின்ன நகைச்சுவைகளை தன் பாணியில் கோர்த்து திரைக்கதையை  'பின்னி ' எடுத்திருக்கிறார் சிம்பு தேவன்.சில காட்சிகள், திரை அரங்கமே அதிரும் அளவிற்கு கைத் தட்டல்களை உண்டாக்கி விடுகின்றன. லாரன்ஸ், பத்மப்ரியா, லக்ஷ்மிராய்,சந்தியா,மனோரமா,V .S ராகவன்,M .S பாஸ்கர், நாசர்,இளவரசு,வையாபுரி,மௌலி,சாம், என ஒரு மாபெரும் கூட்டத்தை கொண்டுவந்து , சற்றும் போரடிக்காமல் , கதை சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் சிம்பு தேவன். கௌபாய்களுக்கே உரிய ஸ்டைல் - ஐ கொஞ்சம் கரெக்டாகவே செய்திருக்கிறார்  லாரன்ஸ். அவர் செய்யும் சில 'சாகசங்களுக்கு' நல்ல ரெஸ்பான்ஸ் ! மூன்று கதாநாயகிகளும் , 'வந்தார்கள் ,சென்றார்கள் ' ! படத்தின், முக்கிய கதா பாத்திரம் என்று சொன்னால், அது ,  செவ்விந்தியராக வரும்  MS பாஸ்கர் தாங்க ! மனுஷன் என்னமா, PERFORM பண்ணியிருக்கார் ?! உண்மையில், 'சின்ன பாப்பா , பெரிய பாப்பா ' விலிருந்து நான், MS பாஸ்கரின் ரசிகன். நிகழ் கால அரசியல் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது .



குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை, படத்தின் எந்த பாடல்களும். காட்சிகளை DISTURB பண்ணாமல்  ஒலித்துக் கொண்டிருக்கிறது பின்னணி இசை.அந்த ட்ரைலர் பாடல் ( ஒரு நல்லவன் , ஒரு கேட்டவன் , ஒரு வினோதன் ) சூப்பர் ! ஆனால், அந்த அளவுக்கு படத்தில் இல்லையே ?! ஏன் GV ? சரி விடுங்க, மதராசப் பட்டினத்துல பாத்துக்கலாம்.

SO , IKMS -  சிம்பு தேவன் வெச்ச குறி தப்பாது மாமு !

Sunday, May 9, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1...

"நீ ஏன் பதிவர் ஆனே ?" ன்னு நீங்க கேக்கலைனாலும், சொல்லவேண்டியது என் கடைமைங்க ! . மேல படிங்க . 


என்னங்க ? 'மேல' படிங்க ன்னா , கீழ படிக்கிறீங்க ? சரி படிச்சிட்டு போங்க !

**********************************************************************************************************************************************************

முதலாமாண்டு மாணவர் விடுதி... மதிய உணவு நேரம்... அனைவரும் அரக்க பறக்க உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது ஹாஸ்டலில் தரப்படும் அப்பளத்தை, அடுத்தவர் தட்டிலிருந்து 'ஆட்டையப் ' போடுவது ஒரு பேஷன் ! என் நெருங்கிய நண்பன் ஒருவன் , என்னுடைய அப்பளத்தை எடுக்க , தட்டில் கைவைக்க முனைந்தான் !
நான் - " முதல்ல  அப்பளம் , FRIEND எல்லாம் அப்பறம் " !

**********************************************************************************************************************************************************


அதே முதலாமாண்டு மாணவர் விடுதி. எங்கள் அறையில் எப்போதும் மாணவர் கூட்டம் கூட்டி அரட்டையடித்துக் கொண்டிருப்போம். யாராவது ஒருத்தர் மாட்டினால் போதும், அவனை கிண்டலடிப்பதுதான் அன்றைய பொழுது போக்கு ! அந்த வகையில், மாட்டிய ஒருவனை எல்லோரும் ஒட்டகத்தை சுத்தம் செய்பவன்   என்று ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவனும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தான்.

" வாரத்துக்கு எத்தன நாள் இந்த வேலை ?" இது நண்பர்கள்.
"வாரத்தில் 5  நாள் தான்"
"அப்ப மற்ற நாட்கள் ?!"
"ரெஸ்ட் தான் !"
"ரெஸ்ட் ஒட்டகதிற்க்கா ?! உனக்கா ?!" - நான் .

**********************************************************************************************************************************************************

கல்லூரி படிப்பு  முடிந்து , வேலை தேடிக்கொண்டிருந்த காலம். கல்லூரி நண்பன் ஒருவன் போன் செய்து, தான் யாரென்று சொல்லாமல் 'சஸ்பென்ஸ்' வைத்துக் கொண்டிருந்தான் .

"டேய் , நீ யாருன்னு சொல்டா . இல்ல ஒரு 'க்ளூ' வாவது கொடேன் !" - நான்.
"நீ எந்த காலேஜ்ல படிச்ச ?"
"_______ காலேஜ் ல ."
"எந்த BRANCH ?" - இது நண்பன்.
"IT "
"எந்த வருஷம் ?"
"நாலு வருஷமும் அதே BRANCH தான் ?" - அடியேன்.
அதுக்கு பிறகு அவன் கால் பண்ணவே இல்லை !

**********************************************************************************************************************************************************
அலுவலகத்தில் நண்பர்களுடன் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். நண்பர் கொண்டு வந்திருந்த தோசையில், சிறிய கல் ஒன்று இருந்தது.
"என்னப்பா , தோசையில கல் இருக்கு ?" மற்றொரு நண்பர்.
" 'கல்' தோசை கேள்விப் பட்டதில்லையா ? அதான் இது " - வேறு யார், நாந்தேன் !

**********************************************************************************************************************************************************

ஒரு வருடத்திற்கு முன்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பொருளாதார பெருமந்தம் தனது வேலையை காட்டிக் கொண்டிருந்த காலம்.உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த  நான் , தலை முடியை நன்றாக SHORT ஆக வெட்டியிருந்தேன்.
"இது என்னப்பா , புது விதமான கட்டிங் ? " - உறவினர் .
"இதுதாங்க COST CUTTING ! " - பிரபல(!) பதிவர் தேசாந்திரி - பழமை விரும்பி (அட , நாந்தாங்க , அப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது !! ).

**********************************************************************************************************************************************************
ஒருவாரம் முன்பு , அலுவலக நண்பர்களுடன்  மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பேச்சு நித்யானந்தா பற்றி திரும்பியது. அப்போது , ஒரு நண்பர் சொன்னார்,

"புட்ட பர்த்தி சாய்பாபா , ஆள் எப்படின்னு தெரியாது. ஆனால், அவர் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்கிறார். இதுமாதிரி, தனக்கும் செய்து, மற்றவருக்கும் எதாவது செய்தால் பரவாயில்லை . ஆனால், நித்தியானந்தா ?!"

"அதுக்குதான் , CD விட்டிருக்காங்களே ?!" - நான் !

**********************************************************************************************************************************************************

அரசியல் பேசிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் சொன்னார் ,
" 'மக்கள் நல திட்டம்' ங்கற பேர்ல, திட்டத்திற்கு ஒதுக்கிய  பணத்தை திருடறதுலயே எல்லாரும் குறியா இருக்கானுக !"
" 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' னு நீங்க கேள்விப் பட்டதில்ல ?!"

**********************************************************************************************************************************************************

நமக்குள்ள இவ்வளவு 'திறமை' இருக்கும் போது, நான் ஏன், வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது ?! நீங்களே சொல்லுங்க !


டிஸ்கி - மேலே சொன்னதெல்லாம், ஒரு தமாசுக்குதான் . உண்மையில் , இளவஞ்சி,வால்பையன் , போன்றோர்களின் வலைதளத்தை பார்த்த பிறகுதான் , பதிவுலகிற்குள் பாதம் பதிக்கும் ஆசை வந்தது. அவர்களுக்கு என் நன்றிகள். இவர்கள் மட்டுமல்லாமல், என் வலை தளத்திற்கு வந்து, FOLLOWERS ஆகியும், ஆகாமலும், பின்னூட்டங்கள் இட்டும், இடாமலும்  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும் ,GOOGLE க்கும்  மற்ற அனைவருக்கும் என் நன்றிகள் .

Friday, May 7, 2010

தலைப்பில்லாப் பதிவுகள், கலைஞருக்கு ஒரு கடிதம்,பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?

ஒரு  நல்ல விஷயம்....
இப்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் புதிய வகை சொகுசுப் பேருந்துகளை (TATA MARCOPOLO ) விட்டிருக்கிறார்கள்.உண்மையிலேயே வண்டி நல்லா  இருக்குங்க ! ஒரு SEAT -  கும் , அடுத்த SEAT கும் நல்ல இடைவெளிகள்  இருக்கிறன்றன.FREE யா கால் வெச்சி உக்காரலாம். SEAT குஷன் கூட நல்லா இருக்கு ! பழைய ASHOK LEYLAND டீலக்ஸ் வண்டி ரொம்ப மோசங்க ! டயர் மேல இருக்குற கிட்டத் தட்ட 12 SEAT ல உக்காரக் கூட முடியாது ! ஆனால் அது  போன்ற வண்டிகளில் பெரும்பான்மையானவற்றை இப்போது M சர்வீஸ் வண்டிகளாக மாற்றி வருகின்றனர். நல்ல விஷயம் தானே ?!



***********************************************************************************
கலைஞருக்கு ஒரு கடிதம்...
தங்களின் இலவச திட்டங்கள் தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளன என்று தாங்கள் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன். நல்லது.ஆனால் மக்களுக்கு தேவையான இன்னும் சிலவற்றையும் தாங்கள் செய்து கொடுத்தால், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு 'செலவு' அதிகம் இருக்காது என்பது எனது கருத்து.கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி  திட்டம், கலைஞர் வண்ணத் தொலைகாட்சி திட்டம், ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டம் , என ஏகப் பட்ட திட்டங்கள் தீட்டி மக்களுக்கு உழைக்கும் உங்களால் இன்னும் சில திட்டங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுவதால், இந்த கடிதம்.

கலைஞர்  குடிநீர்த் திட்டம் :
இப்பொழுதெல்லாம், சென்னையில் ஓரளவிற்கு நல்ல குடிநீர் வேண்டுமென்றால்,  குறைந்தது 25  ரூபாயாவது கொடுத்தால் தான் , 25 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.  "அதான் மெட்ரோ வாட்டர் வீட்டுக்கு வீடு வருகிறதே ?! " என்று நீங்கள் கேட்கும் முன்னர் நான் இன்னொரு விஷயத்தை சொல்லி விடுகின்றேன். எனக்குத் தெரிந்து , மெட்ரோ வாட்டர் தண்ணீரை மக்கள் சமைப்பதற்கு மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர். சென்னையின் அறுபது சதவிகித மக்கள் குடிப்பதற்கு மினரல் வாட்டரை மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர்.நான் உங்களை , ' கலைஞர் இலவச குடிநீர்த் திடம் ' கொண்டவர சொல்லவில்லை. 'கலைஞர் மலிவுவிலை குடிநீர்த் திட்டம் ' மாதிரி ஏதாவது செய்யுங்களேன் ! நன்கு உறுப்பினர்களை கொண்ட  சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு வாரம் மூன்று முதல் நான்கு வரை தண்ணீர் கேன்கள் தேவைப்  படுகின்றன. ஆக வாரத்திற்கு 100 ரூபாய்.மாதம் 400 ரூபாய். ஒரு மாதத்திற்கு நீங்கள் தரும் அரிசிக்கு செலவு 20 ரூபாய்.எங்கள் குடிதண்ணீர் தேவைக்கு செலவு 400 ரூபாய் !



கலைஞர் வீடு வாடகைத் திட்டம் :
நீங்கள் இப்போதைக்கு சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்திருக்கீர்களா ? சென்னையில் ஓரளவிற்கு நல்ல வீடு வாடகைக்கு வேண்டுமென்றால், நீங்கள் குறைந்தது மாதம் 8000 முதல் 10000 வரை செலவு செய்ய வேண்டும் ( இந்த அநியாயத்தை தட்டிக் கேக்க இங்க யாருமே இல்லையா ?! ). கிட்டத்தட்ட ஒரு இந்தியனின் சராசரி மாத வருமானத்தை விட அதிகம் ! இதுக்குன்னு RENT CONTROL BOARD  னு ஏதோ இருக்காமே ?
எதாவது பாத்து பண்ணுங்க சார்!

வேணும்னா , நாகநாதன் சாரையும், சண்முக நாதன் அண்ணாவையும் கேட்டுப் பாருங்க , எல்லாத்தையும் தெளிவா சொல்லுவாங்க !மேலும் வேற ஏதாவது திட்டம் எனக்கு தோன்றும் போது பதிவிடுகிறேன், பார்த்துக் கொள்ளுங்கள் !

***************************************************
பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?
கோடைக் காலத்தின் மத்தியில் இருக்கிறோம் நாம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதையே வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ! இந்த நிலையில், நமது அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் மகா கேவலமாக இருக்கிறது, வழக்கம் போலவே !

"வெயிலின் கொடுமையை கருத்தில் கொண்டு , போது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆங்காங்கே ,தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகத்தை தணிக்க வேண்டுமென்று ஆணை "

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி , எல்லா கட்சித் தலைமையகங்களும் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுவாகத்தான் இருக்கும்! உடனே , உடன் பிறப்புகளும் , இரத்தத்தின் இரத்தங்களும் , இன்ன பிற அரசியல் கட்சித் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு , தண்ணீர் பந்தல் களை அமைத்தனர். முதல் நாள் , தர்பூசணி , வெள்ளரி, நீர் மோர், ரசனா என்று கலை கட்டியிருக்கும் - புகைப்படங்களும் , வீடியோக்களும் எடுத்து முடிக்கும் வரையில் ! இப்போது கேடாரற்று கிடக்கின்றன (சென்னையின் ) அனைத்து தண்ணீர் பந்தல்களும் ! ஒரே ஆறுதல், மக்கள்,  நிழலுக்காக ஒதுங்குவதற்கு பயன்படுகின்றன இந்த தண்ணீர் பந்தல்கள் !

ஆனால், எந்த விளம்பரமும் இல்லாமல் , தண்ணீர் பந்தல் அமைத்து தொண்டாற்றும் எத்தனையோ வீடுகளை, நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன் ! மகாத்மா காந்தி சொன்னார் , 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது '. இந்தியா மட்டுமல்ல, மனிதர்களும் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள் !!



சென்னை போன்ற பெரு நகரங்களில் , நம் வீட்டிற்கு தண்ணீர் வாங்கவே , ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ஒரு ரூபாய் செலவாகும்போது  , நாம் எங்கே தண்ணீர் பந்தல் வைப்பது ?! ஆனால், ரஜினி காந்தின் கல்யாண மண்டபத்தில் தனமும் 200 லிட்டர் பால்,மோராக்கப்பட்டு , மோர் பந்தல் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது என்று அறிந்தேன். பாராட்டுக்கள் !!

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...