Sunday, January 1, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ... பிம்பிளிக்கி பிளாப்பி !


இருவாரங்களாக விஜய் டிவி யில் NVOK (நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி) நிகழ்ச்சியின் விளம்பரங்கள் களை கட்டிக் கொண்டிருக்கின்றன. முதல் கேள்வி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கேட்கப் பட்டது.
SMS மூலமாக பதில் அனுப்பலாம் என்றனர் ! சரி ஒரு ட்ரை செய்துதான் பார்ப்போமே என்று , அவர்கள் கேட்ட மிகக் கடினமான (!) கேள்விக்கு மிகச்சரியான பதிலை அனுப்பினேன். ஒரு SMS க்கு 3 ரூபாய். வாய்ப்பை தவற விடக் கூடாதென்று , எங்கள் வீட்டில் 4
 பேரும் தலா 1 SMS அனுப்பினோம் ! போனா 12 ருபாய், வந்தால் 1 கோடி ! எப்படி ஐடியா ?!

பதிலை அனுப்பி விட்டு, கோடீஸ்வரக் கனவுகளுடன் தூங்கிப்  போனேன்.   மறுநாள் காலை 8 மணிக்கு எழுந்து பார்த்தால், ரிப்ளை வந்திருந்தது. நான் முதல் கட்டத் தேர்வில் தேறி விட்டதாகவும், அடுத்த படியாக நம் பாலினம், ஊர், பின் கோடு போன்றவற்றை அனுப்பவும் என்று கேட்டிருந்தார்கள். ஆஹா ! ஆண்டவன் கண்ணைத் திறந்து விட்டான் ! என்று மேலே படித்தால், 20 நிமிடங்களுக்குள் ரிப்ளை அனுப்ப வேண்டும் என்று போட்டிருந்தார்கள் ! அதனால் என்ன ?! அனுப்பிவிடவேண்டியதுதானே என்கிறீர்களா ?! நானும் அப்படிதான் நினைத்தேன் ! ஆனால் அவர்கள் ரிப்ளை அனுப்பிய நேரம், அதிகாலை 4  மணி !
நான் அந்த SMS ஐ பார்த்த நேரம் காலை 8 மணி !
 


நன்றி - புகைப்பட உதவி - kbc6.in 

 

உங்களுக்கும் இப்படிதானே நடந்திருக்கும் ?!

என் பிரதருக்கும் இதே நேரத்தில் தான் ரிப்ளை வந்திருக்கிறது. இவர்கள் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது, இது போன்று SMS களில் வரும் பணத்தைக் கொண்டுதான் என்றாலும், இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது !

விஜய் டிவி மீதான நம்பகத் தன்மையை இது குறைத்திருக்கும் என்று நினைக்கிறேன்!












Saturday, November 19, 2011

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் விரைவில் இடமாற்றம் ?!

முன் குறிப்பு : முழுவதும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல!


நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் சாராம்சம் :
கிண்டி கத்திப்பாராவில் செயல் பட்டு வரும், பெரிய மேம்பாலம் விரைவில் இட மாற்றம் செய்யப் பட உள்ளது. புதிய கத்திப்பாரா மேம்பாலம் , சென்னைக்கு மிக அருகில் உள்ள திண்டிவனத்திற்கு மாற்றம் செய்யப் படுகிறது.( சென்னையில் இருந்து, திண்டிவனத்திற்கு அடிக்கடி பருந்து வசதி உள்ளது !). தற்போது உள்ள மேம்பாலம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான 'சறுக்கல்' ஆக, மாற்றம் செய்யப் படும். இதன் மூலம், இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கில், தமிழகம் முன்னோடியாகத் திகழும்.


                         நன்றி - புகைப்பட உதவி : www.picasaweb.google.com

டிஸ்கி : சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்கிற அறிவிப்பின் 'பாதிப்பு' தான் இந்த பதிவு.

==========================================================================

இருக்கிற மருத்துவமனைகளின் நிலைமையை சீராக்கினாலே, தமிழகம் குழந்தைகள்  நலனில் மட்டுமல்ல, அனைவரின் நலனிலும் முன்னோடியாகத் திகழும் என்பதே என் எண்ணம்.அதை விடுத்து, 'இத அங்கவை , அத இங்கவை ' என்று 'மாற்று அரசியல்'  செய்வதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
எதற்கும் இடமாற்றம் செய்வதற்கு முன் ஒருமுறை பார்த்து விடலாம் என்று கடந்த வாரம் நானும், நண்பனும் போயிருந்தோம்.



                       நன்றி - புகைப்பட உதவி - www.annacentenarylibrary.blogspot.com 

ஒரு அரசு நூலகத்திற்கான எந்த ஒரு 'அறிகுறியும்' இன்றி, அட்டகாசமாக இருந்தது. ஒவ்வொரு தளமாக சுற்றிப்பார்க்கவே நான்கு மணி நேரம் ஆகிற்று.
மேலும் அங்கிருந்த வருகையர் பதிவேட்டில், எல்லாரும் நூலக மாற்றம் தேவையற்றது என்றுதான் எழுதியிருந்தார்கள். அத்துணை பெரும் திமுக வைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் குறைவுதானே ?! ஒருவர் எழுதியிருந்தது, "நாங்கள் விரும்பியது ஆட்சி மாற்றம் தான் - நூலக மாற்றம் இல்லை " !


சட்டப் பேரவையை இடமாற்றம் செவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. (அது சரியா தவறா என்பது வேறு விஷயம் !) . நீங்கள் அங்கு போவீர்கள், வருவீர்கள். நூலகத்திற்கு நீங்கள் வருவது சாத்தியமா என்ன ?! இருந்துவிட்டுத்தான் போகட்டுமே ?!