Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, May 3, 2011

உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)

டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
=========================================================================
   
                                      நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in

நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை  அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.



























கதை அவ்வளவுதான் ! 


"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?! 










நானும் , குமாரும் வைத்திருந்த  பிணம், என் நண்பன் குமாருடையது !

=========================================================================
டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !



Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - சிறப்பு சிறுகதை

ஒவ்வொரு இரவும் பணிமுடித்து காலத் தாமதமாக வீடு திரும்புவது என்பது எங்கள் வேலைக்கே உள்ள 'சிறப்பம்சம்'. ஆம், நான் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

சிலநாட்கள், 10 மணி,சிலநாட்கள் 12 மணி.அல்லது அடுத்தநாள் காலை 3 அல்லது 4 மணி. பெண்கள் என்றால், CAB ஏற்பாடு செய்து விடுவார்கள்.எனக்கு , சொந்தமாக ஒரு BIKE உண்டு. ஊரில் அப்பா வாங்கி வைத்திருந்தது. அதை நான் எடுத்துக் கொண்டு , அவருக்கு ஒரு புது TVS 50 வாங்கிக் கொடுத்து விட்டேன். வயசாகி விட்டதால், GEAR வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.


இரவு தாமதமாக வந்தாலும், TRAFFIC போலீஸ் எங்களை எதுவும் கேட்க மாட்டார்கள். அதிகாலை 3 மணி ஆனாலும், சட்டையை IN பண்ணிக் கொண்டும், ID CARD ஐ, வெளியில் தெரியும் படி  மாட்டிக் கொண்டு வருவோம். அவர்களும் கணித்து விடுவார்கள். சிலசமயம் 100 - 200 கொடுப்பதுண்டு.

மெயின் ரோட்டில் வரும்போதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. உள்ளே தெருவில் நுழைந்து விட்டால், 'அவர்களின்' ஆட்டம் ஆரம்பமாகிவிடும். கூட்டமாக நின்று கொண்டு வருவோர் போவோரை மிரட்டிக்  கொண்டு  இருப்பார்கள். பெண்கள் CAB இல் சென்று விடுவதால் பிரச்சினை இல்லை.கூடவே SECURITY GAURD வேறு இருப்பார்கள்.என்னைப் போன்ற மென்பொருள் 'இளைஞர்களுக்கு' தான் கஷ்டம்.


கொஞ்சம் தைரிய சாலியாக இருந்தால் , நின்று  முறைத்துப் பார்க்கலாம். அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள்.அல்லது நாம் கூட்டமாக இருக்க வேண்டும்.அப்போது அவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். ஒருத்தன் சவுண்டு கொடுத்தால் போதும், சுத்தி இருக்கிற எல்லாரும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களைத் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா ?



இவர்களால் எத்தனை பேர் ACCIDENT ஆகியிருக்கிறார்கள் ?! எத்தனை மரணங்கள் ?! எத்தனை காயங்கள் ?! ஏன் இப்படி ?! இனியும் பொறுத்திருக்கக் கூடாது.திருப்பி அடிக்க வேண்டும்.

ஆஹா, இன்றும் லேட் ஆகிவிட்டதே ?!
பயம் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினாலும், துரத்திக் கொண்டே வருவார்களே ?! "இன்றோடு நான் பயந்து ஓடுவது கடைசியாக இருக்க வேண்டும்" , என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். HELMET போட்டுக் கொண்டு வண்டி ஓட்டினால், அவர்களின் கோபம் இன்னும் அதிகமாகி விடும்.

நாளை காலை முதல் வேலையாக இதைப் பற்றி புகார் சொல்லியாக வேண்டும். அல்லது அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் செய்தியாவது அனுப்ப வேண்டும். நல்ல வேலை இன்று வெள்ளிக் கிழமை. நாளை ஆபீஸ் கிடையாது. இதுதான்  தக்க சமயம்.ACT NOW !

"என் சமூகத்திற்கு நான்" செய்யும் சிறு அல்லது பேரு உதவி இதுவாக இருக்கக் கூடும்!

சனிக்கிழமை காலை 11 மணி.
என் மொபைல் போனில் இருந்து சுழற்றினேன் - அல்லது கால் செய்தேன்.
1913 

"ஹலோ , சென்னை கார்பொரேசன் ?! நான் இங்க அடையார்ல இருந்து பேசறேன். தெரு நாய்கள் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணனும் ! ஒரே டார்ச்சரா இருக்கு சார் ! கொஞ்சம் CONNECT பண்றீங்களா ?!"



(நன்றி - கதைத்  தலைப்பு உதவி - கவுதம் வாசுதேவ மேனன் , புகைப்பட உதவி - www.tamilvix.com, http://www.flickr.com/photos/kxp130/229446264/)


Wednesday, January 26, 2011

2075 - ஒரு பிளாஷ் பேக் [சயின்ஸ் பிக்சன் தொடர் கதை(யாமாம் !) ] - 1


டிஸ்கி : இந்த 'தொடர்கதை' (!) யில் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் கற்பனையே.நான் படித்த கதைகளின், பார்த்த கேட்ட கதைகளின் பாதிப்புகள் இருக்கக் கூடும்.

============================================================================== 

"கிஷோர், சொன்ன மாதிரியே "SITISAN" டைம் மெசின் தானே வாங்கிட்டு வந்துருக்க ? அப்புறம் போன தடவ மாதிரி பாதி வழியிலயே நின்னுடுச்சுன்னா ரொம்ப கஷ்டமா போயிடும் !"

"ஆமாம்ப்பா, "SITISAN" மெசின் தான் வாங்கியிருக்கேன் ! வேலிடிட்டி 150 வருஷம். பழைய மாதிரியே , முன்னாடி 75 வருஷம் பின்னாடி 75 வருஷம். எந்த பிரச்சினையும் வராதுன்னு பெடரிக் மாமா சொன்னாரு. அவர் போன டைம் வாங்கினது 500  வருஷம் வேலிடிட்டி உள்ளது.ஆனா கொஞ்சம் காஸ்ட்லி. 2300 ரூபாயாம். நம்மது 870 ருபீஸ்தான்."

                                                  (படம் நானே வரைஞ்சதாக்கும் !)


"ஜெனி , எலாம் எடுத்து வெச்சிட்டியா ? எதுக்கும் ஒரு தடவ நல்லா செக் பண்ணிக்கோ. இந்தமுறை கொஞ்சம் லாங் ட்ரிப் தான் ப்ளான் பண்ணியிருக்கேன். முதல்ல 2075  வரை போறோம். முடிஞ்சா அங்க போயிட்டு வேலிடிட்டி EXTEND  பண்ணிக்கலாம். டிரைவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்."

கிரியும் , ஜெனியும் லவ் மேரேஜ். கிஷோர், மாகி என இரண்டு குழந்தைகள்.கிஷோர் - UKG , மாகி - PREKG.  ரொம்பா நாளா நச்சரிச்சு தான் இந்த TRIP க்கு கிரி சம்மதம் சொன்னான்.

"ஏன் கிரி, பாஸ் கிட்ட சொல்லிட்டுதானே எங்க கூட வர ?! அப்புறம் கிளம்புற நேரத்துல பாஸ் கூப்பிடுறார், கீஸ் கூப்பிடுறார்னு கத சொல்லிகிட்டிருக்காதே. "

"இல்ல ஜெனி, சொல்லிட்டுதான் வரேன். நீ ஒன்னும் கவலைப் படாதே !அவர் அடுத்த வருஷம்  போறதுக்கு பிளான் பண்ணியிருக்கார் ! அதான் ஒன்னும் சொல்லாம, SIGN பண்ணி கொடுத்திட்டார் !"

26  ஜனவரி , 2150 .
காலை 11 மணி 20 நிமிடம்.
இன்னும் 30 நிமிடம் 15 நொடி  120 MICRO நொடிகளில் மெசின் கிளம்பி விடும்.
அதற்கான ஆயத்த பணிகளில் இருந்தார் டிரைவர்.


"சார், ரூல்ஸ் எல்லாம் தெரியும்ல ?! பசங்களுக்கு நல்ல சொல்லிடுங்க. நான் CABIN குள்ள போயிட்டா , திரும்ப ரிடர்ன் வந்துதான் வெளிய வருவேன். மொதல்ல எங்க போறோம் ? 2075 க்கா, இல்ல 2225 க்கா ?! ஆனா, எப்புடி போனாலும் மொத்தம் 24 எடத்துல தான் எறங்க முடியும்."


"கிஷோர் , மாகி நல்ல கேட்டுக்குங்க..."

"அப்பா, ஒரே BORE  ! எத்தன தடவ இதையே திரும்ப திரும்ப சொல்லுவ ?!" மாகி கொஞ்சம் கோவமாகத்தான் கேட்டாள்.

"அது சரி மாகி, இதுதான் லாஸ்ட்டு . டிரைவர் UNCLE சொல்றாருல்ல ?!"

1 . வழில யாரு என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாது.
2 . நைட் டைம்ல  மெசின் - ஐ விட்டு எறங்க கூடாது.
3 . பகல்ல இறங்கினாலும், 33 நிமிசத்துல திரும்ப உள்ள வந்துடனும்.
4 . ......

ரூல்செல்லாம் சொல்லி முடித்த பிறகு, சரியான நேரத்திற்கு, தன் இறக்கைகளை விரித்த படி கிளம்பியது  "SITISAN " TIME MACHINE  !

"டிரைவர் சார், முதல்ல 2075 க்கு போங்க" தான் மாட்டியிருக்கும் HEADPHONE இல் கிஷோர் சொல்ல, ஜெனி, கிஷோர், மாகி மூவரும் ஆர்வமானார்கள் !

- தொடரும்.

Friday, October 8, 2010

யாரடி நீ காமினி ?! ( சவால் சிறுகதை )


அறிவிப்பு : இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல. 

எச்சரிக்கை : இளகிய மனம் படைத்தவர்கள், வயதானவர்கள்  , இருதய நோய் உள்ளவர்கள்,தன்னுடன் யாராவது ஒரு தைரிய சாலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும். விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

டிஸ்கி : இப்படியெல்லாம் போட்டாதான் ஒரு கதை மாதிரி பில்ட் அப் ஆவது ,கொடுக்க முடியும் !

***************************************************
எல்லாருக்கும் வணக்கம்.நல்லாயிருக்கீங்களா ?! நம்ம பரிசல் அண்ணாச்சி ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தாரு இல்ல ?! சரி நாமளும் எழுதிதான்  பார்ப்போமே என்ற ஒரு எண்ணத்தில் உதித்தது (!) தான் இந்த சிறுகதை (!!).  சரி, உக்கார்ந்து ஒரே மணி நேரத்துல எழுதி முடிச்சிரலாம்னுதான் நெனச்சேன் ! ஆனா, உண்மையிலேயே ஒரு வாரமாச்சுங்க இத எழுதுறதுக்கு ! எதாவது லாஜிக் குறைபாடுகள் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க. செகண்ட் பார்ட்டுல (ஆஹா, இதுல இது வேறயா ?! ) திருத்திடலாம்.

பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு!
இனி, சரவெடி !!!

***************************************************
 காமினி இந்த வார்த்தைகளை  சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.ஏன், சிவாவும் தான்.சுந்தரம் எப்போதுமே இவ்வாறு பேசிப் பார்த்ததில்லை இருவரும்.
"ஐயா எவ்ளோ வாட்டி சொல்லியும், இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்களே ?! இப்படி சொதப்புவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, பேசாம செல்வத்துக்கிட்டயே  இத செய்ய சொல்லிருயிருப்பேன் ". இதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லையே ?!
இதற்கு அப்புறம் சொன்ன வார்த்தைகளுக்குத்தான் முதல் வரி.

சுந்தரம் தான் பரந்தாமனுக்கு வலது கை, வலது கண், வலது கால், வலது காது எல்லாமுமே.பரந்தாமனிடம் அவ்வப் போது  சண்டை போட்டுக் கொண்டு விருதாச்சலதிற்கு சென்று விட்டாலும் , இருப்பு கொள்ளாமல் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர் வீட்டிற்கே வந்து விடுவார். சுந்தரம் இல்லாத நாட்களில் பரந்தாமனுக்கு செல்வம் தான் சுந்தரம்.இன்றும் அப்படித்தான்.


"ஐயா, நா வேணும்னா டவுன் வரைக்கும் போய் சுந்தரத்தை இட்டுனு வந்துடட்டுங்களா ? " . செல்வத்தின் கேள்விக்கு வழக்கமான பதில்தான், பரந்தாமனிடமிருந்து. "நாயி எங்கடா போயிட  போவுது ?! ரெண்டு நாளானா, தானா வால ஆட்டிட்டு இதே வாசலுக்கு தானே வந்தாகணும் ?! விடுறா. சாயங்காலத்துக்குள்ள குடோனுக்கு போய், லோடு இறங்கிடுச்சான்னு  பாத்துட்டு போன் பண்ணு ". பதிலின் மறுமுனையில், டிராக்டர் வந்து நிற்க, செல்வம் தன்னுடன் நான்கு வேலையாட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுப் போனான்.

***************************************************

ந்தமுறை எப்படியாவது அந்த வைரத்தை எடுத்தாக வேண்டும். சுந்தரத்திற்கு பரந்தாமனின் வார்த்தைகள் தான் வேதம். நான்கு முறை தவறவிட்டாகிவிட்டது. இன்னொருமுறை ஐயா பொறுமையாக இருக்க மாட்டார். ஆகவே தான், எவ்வளவு செலவானாலும் தேவலை,கிஷோரிடம் சொல்லி மெட்ராசிலிருந்து ஆட்களை இறக்கி விடலாமென்று யோசித்தான்.அந்த யோசனை தான் காமினியும் சிவாவும் இன்று விருதாச்சலதிற்கு வரக் காரணம். இருவரும் கிஷோரின் நண்பர்கள் தான். கிஷோர் சுந்தரத்தின் மகன் என்பது உங்களுக்கும், எனக்கும் பரந்தாமனுக்கும் மட்டும் தான் தெரியும் ! அவர்தான், மெட்ராஸ் காலேஜில்  சீட் வாங்கிக் கொடுத்து கிஷோரை படிக்க வைத்தார். ஆனால், ஏற்கனவே ஒருமுறை இவர்கள் நேரடியாக களத்தில் இறங்க, கொஞ்சம் எசகுப் பிசகாகிப் போனதால், "இந்த முறை குறி கரெக்டா இருக்கணும் ! " என்று சொல்லிக் கொண்டாள் காமினி .


***************************************************

ந்த வைரம் பரந்தாமனின் சேர்த்து வைத்திருந்த நகைகளில்  மிக முக்கியமானது. போனமுறை கரும்புத் தோப்புக்கு அருகில் கிணறு வெட்டும் போது கிடைத்த புதையலில் இருந்த ஒரே வைர நகை அது ஒன்றுதான். கோவில் திருவிழாவிற்காக பரந்தாமன் பக்கத்து ஊருக்கு போயிட்டு வருவதற்குள் , தர்ம கர்த்தா பெரிய நாயகம் தனது வேலையை காட்டி விட்டார். இப்போது அது இருப்பதும்  அவர் வீட்டில் தான்! ஆனால், அவ்வளவு ஈசியாக அவர் வீட்டிற்குள் போய்விட முடியாது. தனது பாதுகாப்புக்கென்று, போலீஸ் பாதுகாப்பை காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார் பெரியநாயகம் . பெரிய நாயகம்தான் அவர்களுக்கு DSP , IG , எல்லாமுமே !



ப்படி உள்ளே போவது ?!


பெரியநாயகம் ஒடம்புக்கு முடியாத நிலையில், ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.
எல்லாம் இந்த வெத்தல பாக்கு போடறதால வந்தது.ஏற்கனவே கேன்சர் முத்திப் போயிருந்தது. டாக்டரும், கண்ணாடியை கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே சொல்லி விட்டார் - "எதையும் ஒரு 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும் ! ".

"சரி அப்போ 24 மணி நேரம் கழிச்சு வரோம் எசமான்" என்று பெரிய நாயகத்தின் ஆட்கள் கழன்று கொண்டார்கள்.

மளிகை சாமானுக்கே காசில்லாத போது, இடைத் தேர்தல் வந்தால் எப்படி இருக்கும் ?! இந்த செய்தியும் அப்படிதான் இருந்தது சிவாவிற்கும் காமினிக்கும்.செய்தி கேட்டவுடன், காமினி தன் கையை அறுத்துக் கொண்டாள். எதற்கா ? அப்போதானே, பெரிய நாயகம் இருக்கும் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியும் ?! காமினி எப்போதுமே இப்படித்தான்.

***************************************************
விசாலம் மருத்துவ மனை
அறை எண் 392 .
காலை 11 . 30 மணி.

இன்று டிஸ்சார்ஜ் என்று சொன்னதால், பெரிய நாயகம், வண்டியை வர சொல்லியிருந்தார். யாரோ புது டிரைவர் என்று சொன்னார்கள்.

அதே விசாலம் மருத்துவ மனை ,
அதே அறை அல்ல , பக்கத்து அறை எண் 393 .
காலை 11 . 35 மணி.

காமினியின் கையை சுற்றியிருந்த குளுக்கோஸ் வயர்கள் இன்னும் கழற்றப் படவில்லை. இன்னும் ஒரு நாள் வரைக்கும் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று டாகடர் சொல்லி விட்டார். டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, காமினியின் கண்களும், காதுகளும் பக்கத்துக்கு அறையை உற்றுப் பார்த்துக் கொண்டும், ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தன .



டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றி விட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

நாம் எதிர் பார்த்தது போலவே ( எதிர்பார்த்தீர்கள் தானே ?!) அவள் குதித்த இடம் , பெரிய நாயத்தின் ஜீப் தான் ! அசந்து தூங்கிக் கொண்டிருந்த நாயகம் இதை கவனிக்க வில்லை ! ஆனால், டிரைவர் பார்த்து விட்டான் !ஆனால் ஒன்றும் சொல்லவில்லை . ஏனென்றால், அவன் பெயர் சிவா ! வண்டியை நேரே பெரிய நாயகத்தின் பங்களாவிற்கு விரட்டினான்.

***************************************************

ன்னதான் பிளான் போட்டாலும், வில்லனின் வீட்டிற்குள் அவனுக்கே தெரியாமல் புகுந்த கதா நாயகி , ஒரு சமயம் அவனிடம்  மாட்டிக் கொள்ள  வேண்டும் இல்லையா ?! காமினிக்கும் அதுதான் நடந்தது . ஹாலில் நடுநாயகமாக , படுத்திருந்த பெரிய நாயகம் சற்று சோர்ந்து போய்தான் காணப் பட்டார்.அவர்  புது டிரைவரைப் பார்த்து கண்ணசைக்க, அவன் தலையசைத்தான். அசைத்து  முடிக்கையில், அவன் கையிலிருந்து துப்பாக்கி வெளிப்பட்டது !



 “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


"சாரி எனக்கும்  வேற வழி தெரியல" என்று சொன்ன காமினி , கண்ணிமைக்கும் நேரத்தில், பெரிய நாயகத்தை சுட்டு விட்டு, டிரைவர் சிவாவுடன் பங்களாவிலிருந்து வெளியேறினாள்.



காவலுக்கு இருந்த போலீஸ் காரர்கள் , "ஐயாவுக்கு திரும்ப ஒடம்புக்கு முடியாமப் போயிடிச்சு . டவுன் வரைக்கும் போய் , டாக்டர் ஐயாவைக் கூட்டினு வந்திடுறோம்" என்று அவர்கள் சொன்னதை நம்பித்தான் ஆக வேண்டும் !ஜீப்பை வேகமாக விரட்டிய படி,அவர்கள் வந்து நின்ற இடம், பரந்தாமனின் பங்களா.

 “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

எதிர்பார்த்த பாராட்டுதான் என்றாலும், காமினி, செயற்கை சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சிவாவைப் பார்த்தாள். "ஐ ஆம் சாரி மிஸ்டர் பரந்தாமன். இந்த வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்கறதுக்காக நாங்க இத மீட்கல ! ஞாயப்படி,சட்டப் படி, (இந்த கதைப் படி !) இதை  அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும் ! அதை செய்யத்தான் நாங்க இங்க வந்தோம். இந்த வைரத்தோட கெடைச்ச மத்த நகைகள் ஏங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் !" என்று தங்களின் அடையாள அட்டையை சிவாவும் காமினியும் காண்பித்தனர். அந்த அடையாள அட்டைகளில் அச்சிடப் பட்ட  "தமிழ் நாடு - காவல் துறை" என்ற  எழுத்துக்கள் பரந்தாமனின் கண்களில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியதில் ஆச்சர்யம் இல்லை  !

கிஷோரின் வேண்டுகோளுக்கிணங்க, பரந்தாமன் மேல் வழக்கு ஏதும் போடாமல், புதையலுடன் சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் சிவாவும், காமினியும்  !

கிஷோர் சொன்ன போதே, புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கத் தேவையில்லை! பெரியநாயகமும் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கத் தேவையில்லை !


**************முற்றும்**************


"அதெல்லாம்  சரி, சிறுகதை எழுதிருக்கேன்னு சொன்னியே , அது எங்க ?" என்று கேட்பவர்களுக்கு, அவர்களின் இடுகைக்கு வந்து இதையே பின்னூட்டமாகப் போடப் படும் என்று ஒச்சரிக்கிரேன்  ! ச்சீ .... எச்சரிக்கிறேன் !

புகைப்பட உதவி : http://paadumeen.blogspot.com, http://view.fdu.edu, http://agnosticnihilist.wordpress.com/

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...