Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, March 19, 2011

எலெக்சன்னா உங்களுக்கு என்ன அவ்வளவு காமெடியா போச்சா ?!

நம்ம தேர்தல் அறிக்கைதான் நாம தோக்கறதுக்கு காரணமா இருக்கப் போகுது !
ஏன் அப்புடி சொல்ற ?!
பின்ன என்ன, தலைவர் - 'நாங்க ஆட்சிக்கு வந்தா, வீட்டுக்கு ஒரு சின்ன வீடு தருவோம்' னு தேர்தல் அறிக்கை வெளியிடறார் !

#####################################################################################

'அன்பான வாக்காளர் பெருமக்களே , மாற்றுக் கட்சி வேட்பாளர் மொத்தம் ஆறு கொலைகள் செய்திருக்கிறார் ! ஆனால், எங்கள் கட்சியின் வேட்பாளர் வெறும் இரண்டு கொலைகள் மட்டுமே செய்திருக்கிறார்! ஆகவே நீங்களே சிந்தித்துப் பாருங்கள் , இருவரில் யார் நல்லவர் என்று !'


நன்றி - புகைப்பட உதவி : http://www.intell.rtaf.mi.th/newsdetail.asp?id=51010


#####################################################################################
 
தலைவர்க்கு இருந்தாலும் இவ்வளவு அவசரம் கூடாது!
ஏன் என்ன ஆச்சு ?!
தமிழ்நாட்டு சட்டசபைக்கு மொத்தம் 330 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை  அறிவிச்சுட்டார் !

Saturday, February 12, 2011

கொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் ?!


தலைவர் டிவி பார்த்து ரொம்ப கேட்டுப் போயிட்டாரா ?! ஏன் ?!
ஆமா, 'ஊழல் பண்ணுறதால நல்லது நடந்தா, ஊழல் நல்லது தானே?! ' ன்னு கேக்குறார் !


####################################################################################


தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்!
ஏன் அப்புடி சொல்ற ?!
'தேர்தல் ஆணையத்தோட கூட்டணி வெச்சா சுலபமா ஜெயிக்கலாமே' ன்னு சொல்றார் !


####################################################################################


இந்த தேர்தல்ல எந்த கட்சியுமே ஜெயிக்காதா ?! ஏன் ?!
ஆமா, பின்ன என்ன ?! எல்லாருமே 'மக்களுக்கு நல்லது பண்ற கட்சிக்கு ஒட்டு போடுங்க' ன்னு சொல்றாங்களே ?!


####################################################################################


தலைவர் ஏன் ரொம்ப கடுப்பா இருக்கார் ?!
எலெக்சன் டெபாசிட் கட்ட போகும்போது, அவுங்க வீட்டம்மா 'எதுக்குங்க இவ்ளோ பணத்த வேஸ்ட் பண்றீங்க' ன்னு கேட்டாங்களாம் !


####################################################################################

தலைவர் ரொம்ப முன்னேறிட்டார் !
எப்புடி ?!
எதிர்கட்சித் தலைவர், தேர்தல் அறிக்கையில "வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு சொன்னதும், இவர் "ஓட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு அறிக்கை விடறாரே !


####################################################################################



(படம் நானே வரைஞ்சதாக்கும் !)

18 வயது வந்த உடன் ஒரு ஓட்டு போட அனுமதிக்கும் தேர்தல் ஆணையமே ,நான் கேட்கிறேன் , 36 வயது வந்த உடன்  இரண்டு ஓட்டு போட அனுமதிக்காதது ஏன் ?


####################################################################################

Saturday, January 8, 2011

அதிமுக + தேமுதிக ?! கச்சேரி ஆரம்பம் ?!

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் !

"எல்லாம் சரி , கேப்டன் எங்க போவார் ?! " - பெரும்பாலான வாக்காளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி இதுதான் ! கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய தேர்தல்களை சந்தித்து விட்டார் கேப்டன். வர இருக்கிற தேர்தல், யாருக்கு திருப்பு முனையாக இருக்கிறதோ இல்லையோ , அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் தான் ! எனவே தனது கட்சிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான MLA க்கள் தேவை என்பதை உணர்ந்திருப்பார். மேடை தோறும் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டேன் " என்று கூறி வருகிறார் !

                                         நன்றி - புகைப்பட உதவி - www.indiasummary.com

அப்படியென்றால் ?! ஆம், அதேதான் ! அதிமுக + தேமுதிக !
நாளை சேலத்தில் தேமுதிக வின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடைபெற இருக்கிறது.அநேகமாக இந்த மாநாட்டிலேயே தனது "மக்கள் கூட்டணி" யை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் ! கொஞ்ச நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன !

'திடீரென்று' கேப்டன் டிவி பேட்டிகளில் ,
சுப்பிரமணியம் சுவாமி வருகிறார்,
சோ வருகிறார் ,
நாஞ்சில் சம்பத் வருகிறார்,
தா பாண்டியன் வருகிறார்,
ராம கிருஷ்ணன் வருகிறார் !

ஆம், கிட்டத் தட்ட 'ஜெ'வைத் தவிர்த்து அனைத்து "தோழமை"க் கட்சி பிரதிநிதிகளும் வருகின்றார்கள் !

                                       நன்றி - புகைப்பட உதவி - www.transcurrents.com

இன்று மாலை கூட, "மாலை மலரில் தேமுதிக சார்பில், அதிமுக தலைமையை விமர்சித்து வந்த விளம்பரத்திற்கும் , தேமுதிக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்று அவசர அறிக்கை வருகிறது , கேப்டனிடமிருந்து !

ஆக, கேப்டன் போயஸ் தோட்டம் பக்கம் வருகிறார் என்றுதான் தோன்றுகிறது! இந்த தேர்தல் சற்று 'இன்டரஸ்டிங்' காகவே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒருவேளை , நம்ம கணிப்பு சரியாக இருந்து, தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வராக கேப்டன் வருவாரோ என்னவோ ?! பார்ப்போம் !

Friday, June 11, 2010

தலைப்பில்லா இடுகைகள்... 06.06.2010

ஒரு அட !
கொஞ்ச நாட்களுக்கு  முன்னாடி என் தந்தை ஒரு விஷயம் சொன்னார்..
ஒரு மாதத்தின் நான்கு வாரங்களை எப்படி அழைக்கலாம் ?!



முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?

முடிந்தால் யூகித்துப் பாருங்களேன் ! விடை ( !) அப்புறம் .....

ஒரு ஒப்பீடு...
கடந்த மூன்றாம் தேதி, தமிழக முதல்வரின் 87 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது ! திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் மாபெரும் விழா எடுத்தார்கள். கிட்டத் தட்ட ஒரு வாரத்திற்கு அந்த வழியையே அடைத்து விட்டிருந்தார்கள் !
இந்த இடத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட நினைக்கிறேன் !

முதல் புகைப்படம்...
இந்த பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அடையார் இந்திரா நகர் பகுதியில் எடுத்த புகைப்படம் இது. நேரம் : இரவு  9 .30 மணி.


இரண்டாம் புகைப்படம்...
விழா முடிந்து , அரை மணி நேரம் கழித்து, திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் எடுத்த புகைப்படம் இது! நேரம் : 10 .00 மணி.



இது எப்படி இருக்கு ?! நோ கமெண்ட்ஸ்...

ஒரு நகைச்சுவை அல்லது கேள்வி ...



லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?
(டிஸ்கி : இந்த நகைச்சுவையை (!) கடந்த 2009  ஆம் ஆண்டு எழுதியது. இப்போது, "ரீமிக்ஸ் " செய்து  வெளியிடுகிறேன்.)

ஒரு தகவல்...
என்னுடைய வலைப்பதிவின் முதல் வாசகன் ( அடிக்கடி போன் பண்ணி , " BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா, BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா" னு  டார்ச்சர் பண்ணிதான் படிக்க வெச்சேன் !) , என் நண்பன் வேலை விஷயமாக வெளி நாடு சென்றிருக்கிறான் !  "அதுக்கு என்னா இப்போ ? " ன்னு கேக்கறீங்களா ?! இனி என் தளத்திற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகன் இருக்கிறான் !

ஒரு பொன்மொழி(யாமாம்!)..

ஒரு  விஷயம் உன் பெற்றோருக்கு தெரியக் கூடாதென்று  நீ நினைக்கிறாய் என்றால், நீ தப்பு செய்து கொண்டிருக்கிறாய் என்று  அர்த்தம்! 


ஒரு எதிர்பார்ப்பு...



சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது, தமிழக அரசியல் களம். அடிக்கடி, கண்டனக் கூட்டங்களும், பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. எனக்கு அரசியல் விவரம் தெரிந்து  (!) , நான் சந்திக்கும் முதல் சட்டப் பேரவை தேர்தல் வருகிற 2011  தேர்தல் தான் ! அதற்குள் எப்படியாவது, வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிட வேண்டும்!

 *************************************************************************************************

முதலில் எழுதிய "அட"  விற்கான விடையையும், நகைச்சுவைக்கான விடையையும் அடுத்த இடுகையில் வெளியிடலாம் என நினைக்கிறேன். தங்களின் விடைகள் வரவேற்கப் படுகின்றன ! நான் நினைத்த விடைகளை சரியாக கணிப்பவர்களுக்கு,


















எந்த பரிசும் தர இயலாது ! மன்னிக்கவும்.
(சங்கமே அபராதத்துலதான் போய்கிட்டிருக்கு !!) 
;)

Saturday, May 22, 2010

தலைப்பில்லாப் பதிவுகள்... 22 .05 .2010

ஒரு கேள்வி...


வரும் கல்வி ஆண்டு முதல் , பொறியியல் படிப்புகளை தமிழில் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது தமிழக அரசு. ஏற்கனவே , தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை படித்து விட்டு, பிறகு பொறியியல் பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் தொடர்வதற்கு கிராமப் புற மாணவர்கள் படும் பாடு , பெரும்பாடு. அப்படி தட்டுத் தடுமாறி B .E முடித்து விட்டாலும் கூட, பிறகு வேலைதேடும் போது, போதிய ஆங்கில அறிவு (COMMUNICATION SKILLS) இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில பல லட்சங்களைத் தொடும் ! இப்போது, B .E கூட தமிழில் என்றால் , பின்பு வேலைக்கு என்ன செய்வது ?! ஏற்கனவே , ஆங்கில வழி கல்வி ஆனாலும் , முழு  நேரமாக பட்டப் படிப்பு படித்திருந்தால் மட்டுமே வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கின்றன பல நிறுவனங்கள். "நான் B .E தமிழ் மீடியம் " என்று சொன்னால், வேலை யார் தருவார்கள் ? ஒருவேளை, அவ்வாறு தமிழ் வழியில் பொறியியல் படிப்பவர்களுக்கு வேலை பெற்றுத் தருவதில் , தமிழக அரசு உதவி புரியும் என்று சொன்னால் யாராவது சேருவார்கள்.இல்லையேல் , இவ்வாறான படிப்புகளில் சேர்வதற்கு எந்த மாணவனும் முன்வர மாட்டான் !  உண்மையிலேயே தமிழை வளர்க்க வேண்டுமென்று விருப்பப்பட்டால், தமிழை ஒரு பாடமாக  வேண்டுமானால்,அறிமுகம் செய்யலாம் ! மாறாக, தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை! தானாக வளரும் !அதை விடுத்து .....!  இன்றளவும், நான் தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தேன் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் !

ஒரு கவிதை (யாமாம் !)......



உன் அக்கா கல்யாண ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்..
என் அப்பாவைக் காட்டி 'அப்பா' என்றேன்...
நீ 'மாமா' என்றாய்....
ஏன் அம்மாவைக் காட்டி 'அம்மா' என்றேன்...
நீ 'அத்தை' என்றேன்...
என்னைக் காட்டி 'நான்' என்றேன்...
நீயும் 'நான்' என்றாய் !

ஒரு ஜோக்...

"ச்சே... இந்த முறையும் போரில் தோற்று விட்டோமே மந்திரி..."
"பரவாயில்லை விடுங்கள் மன்னா , 2011  ல பாத்துக்கலாம் "


 ( "சரி, ஜோக் சொல்றேன்னு சொன்னியே ?! எங்க" ன்னு கேக்கப் படாது ! இந்த ஜோக்குக்கு சிரிக்காமல் செல்பவர்களின் பதிவுகளில் , இதையே பின்னூட்டமாக போடப் படும் !)



பின் குறிப்பு : மேலே உள்ள படத்திற்கும் ஜோக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை !

ஒரு உறுத்தல்....



நடந்து முடிந்த IPL 3 இல், பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடி , சென்னை அணியை அரை இறுதிக்கு அழைத்து சென்றார் தோனி . அந்த ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில் , " ஒவ்வொரு அணி முதலாளியும் , தங்கள் அணிகளை நம்பி பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்கள் . அதற்காகவாவது, நாங்கள் அரையிறுதி வரியிலாவது முன்னேற வேண்டும் " என்று சொன்னார். ஆனால், நடந்து முடிந்த மூன்றாவது 20 - 20  உலகக்கோப்பையில் , என்ன செய்தீர்கள் தோனி  ?! அணியில் ஒற்றுமை இல்லாத வரை எந்த ஒரு அணியும் வெற்றியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது !

Monday, April 26, 2010

சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்...

அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,



        இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான  உங்கள்  ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது  நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு  உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத  ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL  விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே  போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.



அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி  சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப்  பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் -  உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !



ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011  இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய  மக்கள் காத்திருக்கிறார்கள் !



 2011 நம்ம கையிலே,  சந்திப்போண்டா  தோழா நாம WORLD CUP ல !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...