Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Friday, May 7, 2010

தலைப்பில்லாப் பதிவுகள், கலைஞருக்கு ஒரு கடிதம்,பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?

ஒரு  நல்ல விஷயம்....
இப்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் புதிய வகை சொகுசுப் பேருந்துகளை (TATA MARCOPOLO ) விட்டிருக்கிறார்கள்.உண்மையிலேயே வண்டி நல்லா  இருக்குங்க ! ஒரு SEAT -  கும் , அடுத்த SEAT கும் நல்ல இடைவெளிகள்  இருக்கிறன்றன.FREE யா கால் வெச்சி உக்காரலாம். SEAT குஷன் கூட நல்லா இருக்கு ! பழைய ASHOK LEYLAND டீலக்ஸ் வண்டி ரொம்ப மோசங்க ! டயர் மேல இருக்குற கிட்டத் தட்ட 12 SEAT ல உக்காரக் கூட முடியாது ! ஆனால் அது  போன்ற வண்டிகளில் பெரும்பான்மையானவற்றை இப்போது M சர்வீஸ் வண்டிகளாக மாற்றி வருகின்றனர். நல்ல விஷயம் தானே ?!



***********************************************************************************
கலைஞருக்கு ஒரு கடிதம்...
தங்களின் இலவச திட்டங்கள் தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளன என்று தாங்கள் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன். நல்லது.ஆனால் மக்களுக்கு தேவையான இன்னும் சிலவற்றையும் தாங்கள் செய்து கொடுத்தால், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு 'செலவு' அதிகம் இருக்காது என்பது எனது கருத்து.கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி  திட்டம், கலைஞர் வண்ணத் தொலைகாட்சி திட்டம், ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டம் , என ஏகப் பட்ட திட்டங்கள் தீட்டி மக்களுக்கு உழைக்கும் உங்களால் இன்னும் சில திட்டங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுவதால், இந்த கடிதம்.

கலைஞர்  குடிநீர்த் திட்டம் :
இப்பொழுதெல்லாம், சென்னையில் ஓரளவிற்கு நல்ல குடிநீர் வேண்டுமென்றால்,  குறைந்தது 25  ரூபாயாவது கொடுத்தால் தான் , 25 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.  "அதான் மெட்ரோ வாட்டர் வீட்டுக்கு வீடு வருகிறதே ?! " என்று நீங்கள் கேட்கும் முன்னர் நான் இன்னொரு விஷயத்தை சொல்லி விடுகின்றேன். எனக்குத் தெரிந்து , மெட்ரோ வாட்டர் தண்ணீரை மக்கள் சமைப்பதற்கு மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர். சென்னையின் அறுபது சதவிகித மக்கள் குடிப்பதற்கு மினரல் வாட்டரை மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர்.நான் உங்களை , ' கலைஞர் இலவச குடிநீர்த் திடம் ' கொண்டவர சொல்லவில்லை. 'கலைஞர் மலிவுவிலை குடிநீர்த் திட்டம் ' மாதிரி ஏதாவது செய்யுங்களேன் ! நன்கு உறுப்பினர்களை கொண்ட  சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு வாரம் மூன்று முதல் நான்கு வரை தண்ணீர் கேன்கள் தேவைப்  படுகின்றன. ஆக வாரத்திற்கு 100 ரூபாய்.மாதம் 400 ரூபாய். ஒரு மாதத்திற்கு நீங்கள் தரும் அரிசிக்கு செலவு 20 ரூபாய்.எங்கள் குடிதண்ணீர் தேவைக்கு செலவு 400 ரூபாய் !



கலைஞர் வீடு வாடகைத் திட்டம் :
நீங்கள் இப்போதைக்கு சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்திருக்கீர்களா ? சென்னையில் ஓரளவிற்கு நல்ல வீடு வாடகைக்கு வேண்டுமென்றால், நீங்கள் குறைந்தது மாதம் 8000 முதல் 10000 வரை செலவு செய்ய வேண்டும் ( இந்த அநியாயத்தை தட்டிக் கேக்க இங்க யாருமே இல்லையா ?! ). கிட்டத்தட்ட ஒரு இந்தியனின் சராசரி மாத வருமானத்தை விட அதிகம் ! இதுக்குன்னு RENT CONTROL BOARD  னு ஏதோ இருக்காமே ?
எதாவது பாத்து பண்ணுங்க சார்!

வேணும்னா , நாகநாதன் சாரையும், சண்முக நாதன் அண்ணாவையும் கேட்டுப் பாருங்க , எல்லாத்தையும் தெளிவா சொல்லுவாங்க !மேலும் வேற ஏதாவது திட்டம் எனக்கு தோன்றும் போது பதிவிடுகிறேன், பார்த்துக் கொள்ளுங்கள் !

***************************************************
பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?
கோடைக் காலத்தின் மத்தியில் இருக்கிறோம் நாம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதையே வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ! இந்த நிலையில், நமது அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் மகா கேவலமாக இருக்கிறது, வழக்கம் போலவே !

"வெயிலின் கொடுமையை கருத்தில் கொண்டு , போது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆங்காங்கே ,தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகத்தை தணிக்க வேண்டுமென்று ஆணை "

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி , எல்லா கட்சித் தலைமையகங்களும் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுவாகத்தான் இருக்கும்! உடனே , உடன் பிறப்புகளும் , இரத்தத்தின் இரத்தங்களும் , இன்ன பிற அரசியல் கட்சித் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு , தண்ணீர் பந்தல் களை அமைத்தனர். முதல் நாள் , தர்பூசணி , வெள்ளரி, நீர் மோர், ரசனா என்று கலை கட்டியிருக்கும் - புகைப்படங்களும் , வீடியோக்களும் எடுத்து முடிக்கும் வரையில் ! இப்போது கேடாரற்று கிடக்கின்றன (சென்னையின் ) அனைத்து தண்ணீர் பந்தல்களும் ! ஒரே ஆறுதல், மக்கள்,  நிழலுக்காக ஒதுங்குவதற்கு பயன்படுகின்றன இந்த தண்ணீர் பந்தல்கள் !

ஆனால், எந்த விளம்பரமும் இல்லாமல் , தண்ணீர் பந்தல் அமைத்து தொண்டாற்றும் எத்தனையோ வீடுகளை, நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன் ! மகாத்மா காந்தி சொன்னார் , 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது '. இந்தியா மட்டுமல்ல, மனிதர்களும் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள் !!



சென்னை போன்ற பெரு நகரங்களில் , நம் வீட்டிற்கு தண்ணீர் வாங்கவே , ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ஒரு ரூபாய் செலவாகும்போது  , நாம் எங்கே தண்ணீர் பந்தல் வைப்பது ?! ஆனால், ரஜினி காந்தின் கல்யாண மண்டபத்தில் தனமும் 200 லிட்டர் பால்,மோராக்கப்பட்டு , மோர் பந்தல் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது என்று அறிந்தேன். பாராட்டுக்கள் !!

Sunday, April 4, 2010

கவுண்ட மணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது....

" எது? நம்ம கவுண்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதா? யார் கொடுத்தாங்க ? எப்போ கொடுத்தாங்க ? " என்று கேள்விக் கணைகளுடன் நீங்கள் இந்த பதிவிற்கு வந்திருப்பது எனக்குப் புரிகிறது. இதெல்லாம் நாமளா செய்யறதுதாங்க ! அவர் ஆட்சியில் இருந்தாலாவது , மாதம் இரண்டு விருது வழங்கிக் கொள்வார். ஆனால் பாவம் , மனுஷன் ஆஸ்பத்திரியில்தானே இருக்கிறதா பேசிக்கறாங்க ?

ஆகவே," நம்ம கவுண்டருக்கு நாம விருது கொடுக்கலைனா , வேற யாரு கொடுக்கிறது ?! " என்று , நமது பதிவர் சங்கத்தின் (!) பொதுக் (?) குழுவில் கூடி முடிவு செய்தது போல , திருவாளர் கவுண்டமணி அவர்களுக்கு "வாழ் நாள் சாதனையாளர் " விருது வழங்குவதென ஒருமனதாக (?!) தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.



அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற , என்னென்ன தகுதிகள் இருக்கிறது என்று நீங்கள் கேட்டீர்களேயானால் , என்னால் தர  முடிந்த ஒரே பதில் , ( ஜெகத் இரட்சகனைப் போல !) " எங்க இஷ்டம் , நாங்க குடுப்போம் !". என்னுடைய சிறு வயதில், நான் 'கரகாட்டக் காரன் ' திரைப்ப் படத்தை மட்டும் கிட்டத் தட்ட 10 முறை பார்த்திருப்பேன் ! காரணம் நம்ம கவுண்டர் ஐயாவா அல்லது இளையராஜாவா என்பது இன்னும் எனக்கு புரியவில்லை.. அந்த வாழைப் பழ காமெடி சீனுக்காகவே படம் பார்க்கப் போனவன் நான் !



அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் TV கிடையாது. எங்காவது ,TV  இருக்கிற வீடாகப் பார்த்து அந்த வீட்டின் வாசலிலேயே நின்று, கவுண்டருக்காகவே , கதவிடுக்கின் வழியாக எட்டிப் பார்த்து , திட்டு  வாங்கியும் (என் வீட்டிலும் , அந்த TV  வீட்டிலும் ) மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்திருக்கிறேன்.இதனாலேயே, என் அப்பா கரகாட்டக்காரன் ஆடியோ கேசட் வாங்கிவந்தார். கேசட் வாங்கியாச்சு சரி - TAPE RECORDER ? ஆம், கரகாட்டக் காரன் கேசட்டுக்காக ஒரு புது TAPE RECORDER வாங்க வைத்தவன் நான்! பால்யத்தில் மிகவும் விரும்பிப் பார்த்த கவுண்டமணி செந்தில் காமெடிகள் , பதின் வயதுகளில் எரிச்சலூட்ட்டக் கூடியவையாக இருந்தன. ஆனால், இப்போது மீண்டும் அவற்றையே விரும்புகிறேன் ! இதுதான் அவர்களின் வெற்றி !!




இதுவரை அவருக்கு பெரிய அளவிலான விருதுகள் எதுவும் வழங்கப் படவில்லை என்ற எனது ஆதங்கமே இந்த பதிவின் ஆரம்பம்.வாங்க, நாம எல்லோரும்  சேர்ந்து கொடுப்போம் இந்த விருதை,

அவருடைய இடம் இன்னும் நிரப்பப் படாமலேயே இருக்கிறது.அதை நிரப்புவதும் கஷ்டம்.உண்மையில், அவர் ஒரு சாதனையாளர் தான் இல்லையா ?இனி அரசு விருதுகளில், சிறந்த நகைச்சுவை கலைஞர்களுக்கு "கவுண்டமணி விருது" வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்! நீங்க என்ன சொல்றீங்க ?!

Monday, February 15, 2010

நன்றிப் பெருவிழா ... நற்றமிழ்த் திருவிழா...

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் , காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, கலைஞருக்கு பாராட்டு விழா (எத்தன ? )எடுக்கும் நோக்கத்தில் , மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் (ஆமா, அவரேதான் !! ) ஏற்பாடு செய்திருந்த, " நன்றிப் பெருவிழா... நற்றமிழ்த் திருவிழா " என்ற பெயரில் ஒரு விழா எடுத்தார்கள்! காலைமுதலே , கருத்தரங்கம் ,அது இது என்று 'களை' கட்டத் தொடங்கியிருந்தது வள்ளுவர் கோட்டம் !



நான் மதியம் 3  மணிக்குதான் போய் சேர்ந்தேன். நண்பன் வருவதற்கு , கொஞ்சம் தாமதமானதால் , கொஞ்ச நேரம் அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்தேன். சரி உள்ள போய் பார்க்கலாமுன்னு , தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே நுழைந்தவுடன், 'டாஸ்மாக்' வாசனை தூக்கியது. ஆங்காங்கே, உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து , தாக சாந்தி செய்து கொண்டிருந்தார்கள் ! வள்ளுவர் கோட்டம் அருகே இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் நல்ல வருமானம் கிடைத்திருக்கும்.


4  மணி வரை, "லக்ஷ்மன் ஸ்ருதி" இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. உடன் பிறப்புகள் ஆங்காங்கே 'உற்சாக நடனமாடி' க்கொண்டிருந்தார்கள் . எல்லோரும், அவரவர் ஊர்களில் இருந்து , வேன் ,லாரி மூலம் கும்பலாக வந்திருந்தார்கள். 6  மணி போல, V .I .P கள் வரத் தொடங்கியிருந்தார்கள். துணை முதல்வர் முதலாவதாக வந்து சேர்ந்தார்.கொஞ்ச நேரம் கழித்து, அஞ்ச நெஞ்சனும் வந்து சேர, விழா இனிதே ஆரம்பமாகியது. எக்கச் சக்க செலவு செய்திருந்தார்கள். உபயம் : ஜெகத் ரட்சகன்.


ஏதோ சினிமா செட் போல அமைத்திருந்தார்கள். ராஜா காலத்து செட். வந்திருந்த அனைவரையும் (V .I .P  களுக்கு தான், நமக்கல்ல !) வழி நெடுக சேவகர்கள் நின்று வரவேற்றார்கள். ராஜ நர்த்தகி யின் நடனம் கூட இருந்தது. பின்பு , அரசவையில் அனைவரும் உட்கார்ந்து , புகழ் பாட ஆரம்பித்தார்கள். இரண்டு மத்திய அமைச்சர்கள், ரஜினி , கமல் என்று ' பழைய ' ஆட்கள் தான் இந்த முறையும் !

ரஜினி, கமல் உடன் மம்மூட்டியும் வந்திருந்தார்கள். யாரும் மிரட்டியதாகத் தெரியவில்லை! நானும், அ.தி.மு.க MLA யாரவது தி.மு.க வில் சேர வந்திருக்கிறார்களா என்று பார்த்தேன்.கண்ணுக்கு யாரும் புலப் படவில்லை!!! கொஞ்ச நாள் WAIT பண்ணுவோம்! " என்னடா வருஷம் ஆரம்பிச்சு , இன்னும் ரெண்டு பாராட்டு விழாதான் நடந்திருக்கு ?" ன்னு நெனைக்கறதுக்குள்ள , இந்த விழா!!

ஒரு வேளை ,கலைஞரே , "இனிமே , எனக்கு பாராட்டு விழாவே எடுக்கக் கூடாது " ன்னு சொன்னாலும் , "பாராட்டு விழாவே வேண்டாமென்று சொன்ன பெருந்தலைவா !!! " என்று அடுத்த விழா நடத்தி விடுவார் ஜகத் ரட்சகன்  !!!

Sunday, December 20, 2009

கலைஞருக்கு தமிழ்த் தலை மகன் விருது...




இன்று மாலை , நண்பனுடன் வள்ளுவர் கோட்டத்திற்கு சென்றிருந்தேன் (ஆ ... ஊ.. ன்னா கெளம்பிர்றாங்க.... ! ) . கலைஞருக்கு , கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ' தமிழ்த் தலை மகன் ' விருது வழங்கும் விழா.

துணை முதல்வர், மத்திய - மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கட்சிக் காரர்கள் , தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், பத்திரிக்கை - ஊடகப் பணியாளர்கள் ,பொது மக்கள் என எல்லோரும் வந்திருந்தும், ஏனோ கூட்டம் குறைவாகவே இருந்தது . விழாவிற்கு , அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமை ஏற்பதாக இருந்தது. அனால் உடல் நலம் குன்றியதால் அவர் வரவில்லை. திரு . வா. செ . குழந்தைசாமி தலைமை ஏற்றார். நடிகர் சிவகுமார், கவிப் பேரரசு வைரமுத்து , முனைவர் . அவ்வை நடராசன், திரு. குமரி அனந்தன் ஆகியோர் கலைஞருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மூன்று மாதங்களில் , கலைஞருக்கு நடைபெறும் நான்காவது பாராட்டு விழா இது. வழக்கம் போல், வைரமுத்து , கலைஞரைப் பாராட்டித் தள்ளி விட்டார்.பதிலுக்கு கலைஞரும் ! சிவகுமார் பேச ஆரம்பித்த உடன் , ஏனோ தெரியவில்லை , விசில்கள் பறந்தன . விழாவின் இறுதியில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் உண்டாக உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தனர் . ஏற்புரையில், கலைஞர் , கொல்கத்தா மட்டுமல்ல - எங்கெல்லாம் தமிழ்ச் சங்கங்கள் கஷ்டப் படுகின்றனவோ , அவை எல்லாவற்றிற்கும் இந்த அரசு உதவி செய்யும் என்றார். மேலும் தன்னுடைய உதவியாளர் சண்முக நாதனைப் பற்றியும் நெகிழ்ந்து பேசினார். கலைஞர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் கொஞ்சம் பேர் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களை, சிலர் போக வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தனர். முதல் முறையாக கலைஞர் பேச்சை நேரடியாக கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது.

நிகழ்ச்சியை திருமதி.பர்வீன் சுல்தானா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அநேகமாக, கலைஞர் தொலைக் காட்சியில் இந்த விழா ஒளிபரப்பாகும் . விழா முடிந்து , எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்கும் போது , நானும் நண்பனும் , திரு . குமரி அனந்தன் அவர்களை சந்தித்து பேசினோம். மிகவும் கனிவாக பேசினார் - எளிமையான மனிதர். எங்கள் விருப்பப் படி , அவருடன் புகைப் படம் எடுக்கவும் இசைந்தார். என் நண்பனும், திரு. குமரி அனந்தனும் இருக்கும் படம் தான் , மேலே உள்ளது ! மேலும் திருமதி . பர்வீன் சுல்தானாவையும் சந்தித்து பேசினோம் . ஆனால் அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்ற வில்லை !

என்னைப் பொறுத்த வரை, கலைஞருக்கு தமிழ்மொழி தொடர்பாக எந்த விருது கொடுத்தாலும் , அதற்கு அவர் தகுதி உடையவரே!


Saturday, November 21, 2009

இடைத் தேர்தல் 2009




தமிழ் நாட்டில் தற்போது காலியாக உள்ள திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டு சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடை பெறும் தேதியை,(டிசம்பர் பத்தொன்பது அன்று ஓட்டுப்பதிவு) தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

கடந்த முறை நடை பெற்ற ஐந்து சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணித்த அ.தி.மு. க , இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் என்று , அதன் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். ஆனால் அப்போது அதனுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் கம்யுனிஸ்டுகள் இன்று பிரிந்து விட்டன. ம.தி.மு.க மட்டும் கூட்டணியில் தொடர்கிறது (புயல் போயஸ் கார்டனிலேய மையம் கொண்டுள்ளது ! ) .

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஏன் இடைத் தேர்தல் நடக்கிறது ? வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் , இறந்து விட்டார். திருசெந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் , அ.தி.மு.வில் இருந்து விலகி தி.மு.க வில் சேர்ந்து விட்டார். ஆக, திருச்செந்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அனிதா வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி இருக்கும் பட்சத்தில், போட்டி கடுமையாக இருக்கும். ஏனென்றால் , தன்னுடைய செல்வாக்கை தி.மு.க தலைமைக்கு காட்ட வேண்டிய கட்டாயம் அனிதாவிற்கு இருக்கிறது. அதே நேரத்தில், " அனிதாவின் இழப்பு தங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல " என்று அ.தி.மு. வும் காட்டியாக வேண்டும் ! பொதுவாக இடைத் தேர்தல் என்றாலே மக்களுக்கு குஷி பிறக்கும். அதுவும் , " தென் மண்டலத்தில் " நடப்பதால் , மக்களின் ' குறைகள் ' தீர்க்கப்படும் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையில் - தோழர்கள், மருத்துவர் மற்றும் கேப்டன் ஆகியோர் என்ன செய்யப் போகிறார்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை. மருத்துவர் ஐயா அநேகமாக அறிவாலயம் சென்றுவிடுவார் போலிருக்கிறது. போகும் போது தோழர்களை கூட்டிகொண்டு போவாரா என்று தெரியவில்லை. நம்ம சிங்கம் ,கேப்டன் இந்த முறையும் சிங்கிலாகத்தான் நிற்பார் போலிருக்கிறது.

மொத்தத்தில் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதி மக்கள், வேட்பாளர்களின் ' அன்பினால் ', திக்கு முக்காடப் போவதென்னவோ உண்மை ! ஆடுகள் தான் பாவம்.

குறிப்பு : இது என்னுடைய முதல் அரசியல் பதிவாகும். அப்போ இந்த பதிவு எந்தவகையை சேர்ந்தது ? னு கேக்கறீங்களா ? இது இலக்கியப் பதிவாக்கும் ! :)

Wednesday, September 16, 2009

கலைஞர்-க்கு அண்ணா விருது





கடந்த சனிக் கிழமையன்று நானும் என் நண்பனும் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தோம் . முதலமைச்சர் கலைஞர், அண்ணா விருது பெற்றதை அடுத்து அதற்கு காரணம் என்ன என்று ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள்.

கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதால் என்று தென்னவனும்,
ஏழைகளுக்கு உதவுவதால் என்று அமைச்சர் பொன்முடியும்,
பேச்சாற்றலால் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும்,
எழுத்தாற்றலால் என்று கவிபேரரசு வைரமுத்துவும்,
பகுத்தறிவுதான் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசாவும்,
இன்னுமோர் தலைப்பில் சுப.வீரபாண்டியனும் பேசினார்கள்.


கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.
இந்த கருத்தரங்கத்திற்கு கவிஞர் வாலி நடுவராக இருந்தார்.
இந்த வயதிலும் வாலியின் கவிதை வரிகள் வசீகரிக்கவே செய்கின்றன.

அவர் சொன்ன கவிதையில் இருந்து சில வரிகள்.

...
கலைஞர் -க்கு அண்ணா விருது.
அண்ணாவுக்கு..? கலைஞரே விருது !

வந்தவர்களுக்கெல்லாம் வாரி கொடுப்பதால் இது கொடை நாடு.
கொட நாடு ? (சில நொடிகள் மௌனம்....)
கொட நாடு .... அது கொடா நாடு !
......



எல்லாம் சரி ....
கருத்தரங்கத்தின் ஆறு தலைப்புகளோடு இன்னும் சிலவற்றை சேர்த்திருக்கலாம்
என்றெனக்கு தோன்றியது.

விருது கொடுப்பது தி . மு . க என்பதால்,
தி . மு . க விற்கு தலைவர் கலைஞர் என்பதால்...


Saturday, August 15, 2009

சுதந்திர தினம்.





கிட்டத் தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின விழா ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த சுதந்திர தினத்தன்று கிடைத்தது.கடைசியாக பத்தாம் வகுப்பு படிக்கும் போது கலந்துகொண்டது.

தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வதும் இதுதான் முதல் முறை. விழாவிற்கு வந்தவர்களில் பலரது நோக்கமே கொடியற்றத் தில் இல்லாமல் வி பி க்களை பார்ப்பதில் தான் இருந்தது.(நானும் எனது நண்பனும் கூட அதற்குத்தான் போயிருந்தோம்!)

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் காம்பியரிங் (இதற்கு தமிழில் என்ன வார்த்தை உபயோகிப்பது?) கேட்ட திருப்தி.அதிலும் ஒவ்வொரு வாக்கியத்திற்க்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தார்கள்(என்னுடன் வந்த நண்பன் மேஜர் சுந்தர் ராஜனை ஞாபகப்படுத்தினான்.)

முதல்வர் உரையில் அவர் ஆட்சியின் சாதனைகளே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன.இறுதியில் அனைவருக்கும் சங்கீதா ஹோட்டலில் இருந்து சிற்றுண்டி கொடுத்தார்கள்.எப்படியும் 30 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும்.

குடியரசு தினத்தன்று வந்த கூட்டத்தில் பாதி கூட இருக்காது.
வந்தவர்களில் பெரும்பாலோனோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள் போலும்.போன வாரம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.(பில்ட் அப் கே வா?)


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...