Wednesday, September 16, 2009

கலைஞர்-க்கு அண்ணா விருது





கடந்த சனிக் கிழமையன்று நானும் என் நண்பனும் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தோம் . முதலமைச்சர் கலைஞர், அண்ணா விருது பெற்றதை அடுத்து அதற்கு காரணம் என்ன என்று ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள்.

கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதால் என்று தென்னவனும்,
ஏழைகளுக்கு உதவுவதால் என்று அமைச்சர் பொன்முடியும்,
பேச்சாற்றலால் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும்,
எழுத்தாற்றலால் என்று கவிபேரரசு வைரமுத்துவும்,
பகுத்தறிவுதான் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசாவும்,
இன்னுமோர் தலைப்பில் சுப.வீரபாண்டியனும் பேசினார்கள்.


கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.
இந்த கருத்தரங்கத்திற்கு கவிஞர் வாலி நடுவராக இருந்தார்.
இந்த வயதிலும் வாலியின் கவிதை வரிகள் வசீகரிக்கவே செய்கின்றன.

அவர் சொன்ன கவிதையில் இருந்து சில வரிகள்.

...
கலைஞர் -க்கு அண்ணா விருது.
அண்ணாவுக்கு..? கலைஞரே விருது !

வந்தவர்களுக்கெல்லாம் வாரி கொடுப்பதால் இது கொடை நாடு.
கொட நாடு ? (சில நொடிகள் மௌனம்....)
கொட நாடு .... அது கொடா நாடு !
......



எல்லாம் சரி ....
கருத்தரங்கத்தின் ஆறு தலைப்புகளோடு இன்னும் சிலவற்றை சேர்த்திருக்கலாம்
என்றெனக்கு தோன்றியது.

விருது கொடுப்பது தி . மு . க என்பதால்,
தி . மு . க விற்கு தலைவர் கலைஞர் என்பதால்...


1 comment:

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...