Friday, October 30, 2009

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...




எனக்கு ஒரு பழக்கம் உண்டு , இலவச இணையமும் சிறிது நேரமும் கிடைத்தால், நான் எழுதிய படைப்புகளை நானே பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொள்வது . அது மாதிரி என்னுடைய முந்தைய பதிவான 'ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி ' என்றதை கூகிள் சர்ச் இல் போட்டு நம்ம ப்ளாக் ,
ரிசல்ட் ல வருதான்னு பாக்கலாமுன்னு ஒரு நப்பாசை (தப்பாசை ?).

அப்படி தேடி பார்த்தால் கிட்டத்தட்ட நானூறு ரிசல்டுகள் வந்தன .நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.அப்போது ஒரு முடிவு எடுத்தேன் . இனி புது பதிவு போடணும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வெட்டி, ஒட்டி, பதிவு போடக் கூடாது, அவசியத் தேவை இல்லாமல் !

(இதையே காரணமா வெச்சு ஒரு புது பதிவு போட்டாச்சு ! எப்படியெலாம் யோசிக்க வேண்டியிருக்கு ?!)

அப்படியே, புது பதிவே போடக் கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்னு நீங்க சொல்றது என்னோட ஞானக் கண்ணில் தெரிகிறது. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நான் ஒரு முறை முடிவு பண்ணிட்டேன் அப்டீன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!


2 comments:

  1. Nanba unmayagave ungal blog arumaiyaga ullathu
    By Ungal pudhiya Nanban
    Arun

    ReplyDelete
  2. @ Arun...
    தங்களின் ஊக்கத்திற்கும்,வருகைக்கும் நன்றி நண்பரே.... மீண்டும் வருக.

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...