Saturday, November 21, 2009

இடைத் தேர்தல் 2009




தமிழ் நாட்டில் தற்போது காலியாக உள்ள திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டு சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடை பெறும் தேதியை,(டிசம்பர் பத்தொன்பது அன்று ஓட்டுப்பதிவு) தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

கடந்த முறை நடை பெற்ற ஐந்து சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணித்த அ.தி.மு. க , இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் என்று , அதன் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். ஆனால் அப்போது அதனுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் கம்யுனிஸ்டுகள் இன்று பிரிந்து விட்டன. ம.தி.மு.க மட்டும் கூட்டணியில் தொடர்கிறது (புயல் போயஸ் கார்டனிலேய மையம் கொண்டுள்ளது ! ) .

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஏன் இடைத் தேர்தல் நடக்கிறது ? வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் , இறந்து விட்டார். திருசெந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் , அ.தி.மு.வில் இருந்து விலகி தி.மு.க வில் சேர்ந்து விட்டார். ஆக, திருச்செந்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அனிதா வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி இருக்கும் பட்சத்தில், போட்டி கடுமையாக இருக்கும். ஏனென்றால் , தன்னுடைய செல்வாக்கை தி.மு.க தலைமைக்கு காட்ட வேண்டிய கட்டாயம் அனிதாவிற்கு இருக்கிறது. அதே நேரத்தில், " அனிதாவின் இழப்பு தங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல " என்று அ.தி.மு. வும் காட்டியாக வேண்டும் ! பொதுவாக இடைத் தேர்தல் என்றாலே மக்களுக்கு குஷி பிறக்கும். அதுவும் , " தென் மண்டலத்தில் " நடப்பதால் , மக்களின் ' குறைகள் ' தீர்க்கப்படும் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையில் - தோழர்கள், மருத்துவர் மற்றும் கேப்டன் ஆகியோர் என்ன செய்யப் போகிறார்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை. மருத்துவர் ஐயா அநேகமாக அறிவாலயம் சென்றுவிடுவார் போலிருக்கிறது. போகும் போது தோழர்களை கூட்டிகொண்டு போவாரா என்று தெரியவில்லை. நம்ம சிங்கம் ,கேப்டன் இந்த முறையும் சிங்கிலாகத்தான் நிற்பார் போலிருக்கிறது.

மொத்தத்தில் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதி மக்கள், வேட்பாளர்களின் ' அன்பினால் ', திக்கு முக்காடப் போவதென்னவோ உண்மை ! ஆடுகள் தான் பாவம்.

குறிப்பு : இது என்னுடைய முதல் அரசியல் பதிவாகும். அப்போ இந்த பதிவு எந்தவகையை சேர்ந்தது ? னு கேக்கறீங்களா ? இது இலக்கியப் பதிவாக்கும் ! :)

No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...