Wednesday, December 30, 2009

கந்த கோட்டை - விமர்சனம்




கடந்த சனிக் கிழமை அன்று திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில், ' கந்த கோட்டை ' படம் பார்த்தேன். வழக்கம் போல இருபது ரூபா டிக்கெட்டுதான் ! (வேற வழி ?)!. போறதுக்கு முன்னாடி, நம்ம பசங்க எவனாவது வரானுங்களான்னு கேட்டேன். ' எந்த படத்துக்கு போறடா ? ' னு கேட்டாங்க. ஒண்ணு, வேட்டைக் காரன் .இல்லாட்டி கந்த கோட்டை-க்கு போவேன்னு சொன்னேன்.

' வேட்டைக் காரன் சி.டி ரூம்லேயே இருக்கு மச்சி ' அப்டின்னாங்க. (நான் திருட்டு சி.டி பார்ப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் !) .சரி, கந்த கோட்டை வரியாடானு கேட்டதுக்கு, இல்லடா னுட்டாங்க. தியாக ராஜாவுலதான் வேட்டைக் காரன் போட்டிருந்தாங்க. மக்கா , என்ன கூட்டம் ? இது வேலைக்கு ஆவதுன்னுட்டு, நாம கந்த கோட்டைக்கே போயாச்சு.

நான் பார்க்கும் முதல் நகுலன் படம் இதுதான். தன் பெற்றோர் காதல் திருமணம் செய்தாலும், அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, காதலையே சுத்தமாக வெறுக்கிறார் நகுலன். அனால் அவரையே, காதல் செய்ய வைக்கும் அளவுக்கு நாயகி பூர்ணா என்ன செய்கிறார் , அல்லது என்ன நடக்கிறது , அவர்களின் காதலுக்கு என்ன ஆச்சு என்பதை சொல்லும் படம் தான் இந்த கோட்டை.

ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற , நகுலன் முயற்சி செய்திருக்கிறார். அதற்கேற்றார் போல், ஒரு அறிமுகப் பாடலும்,இரண்டு சண்டைக் காட்சிகளும் சேர்க்கப் பட்டுள்ளன. நகுலனின் நண்பனாக நம்ம சந்தானம் வழக்கம் போல் கலக்கி இருக்கிறார்.சந்தானம் வரும் இடங்களில் தியேட்டரில் கைத் தட்டல்கள். பாடல்களில், ' உனைக் காதலி என்று சொல்வதா ?' மட்டும் கொஞ்ச நேரம் ஞாபகத்தில் இருக்கிறது. முதல் பாதியில், அடிக்கடி குறுக்கிடுகின்றன பாடல்கள்.

திரையில் தோன்றும் போதெல்லாம், கத்தி கூப்பாடு பொட்டு , காதை செவிடாக்க முயற்சிக்கிறார் சம்பத். பழைய காலத்து தமிழ் சினிமா வில்லன் கதாப் பாத்திரம்.
அவ்வளவு பெரிய தாதாவிடம் , ' ப்ளே பாய் ' போன்று இருக்கும் நகுலன் சவால் விடுவது , கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களுக்கு இடையில், சற்றே பழைய படங்களை ஞாபகப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் . அதிலும் , அந்த கிளைமாக்ஸ் ! (ஆஹா , இயக்குனர் பேர் மறந்து போச்சே !? , ஆங் , சக்திவேல் (நன்றி : மேலே உள்ள போஸ்டர்). இதுக்கு தான், படம் பார்த்த உடனே விமர்சனம் எழுதிடனுங்கிறது ! நிறைய விஷயம் மறந்து போச்சு !)

கந்த கோட்டை - கொஞ்சம் ஓட்டை.


No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...