Saturday, November 13, 2010

மாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் !)



 நன்றி - புகைப்பட உதவி  : www.thehindu.com


பரபரக்கும் காலைப் பொழுது....

மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..

அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...

நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்

எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...

தன் மகனாகவோ, அண்ணனாகவோ , 

தந்தையாகவோ , கணவனாகவோ -

இருக்கக் கூடாதென...


நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்து

வெளிப்படும்  முகங்களைப் பார்க்கிறான்,

தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,

மகனாகவோ ,மனைவியாகவோ -

இருக்கக் கூடாதா என !

11 comments:

  1. இன்றைக்கு இருக்கும் அவசர சூழலும் நேரமின்மையும் மனிதத்தை மழுங்கடித்துவிட்டது என்பதை எடுத்துகாட்டுகிறது . நல்லா இருக்கு

    ReplyDelete
  2. @நா.மணிவண்ணன்
    வாங்க மணி வண்ணன்..
    ஊக்கத்திற்கு நன்றி...
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  3. @அருண் பிரசாத்...
    வாங்க நண்பரே !
    ஊக்கத்திற்கு நன்றி !

    ReplyDelete
  4. //தன் மகனாகவோ, அண்ணனாகவோ ,

    தந்தையாகவோ , கணவனாகவோ -
    இருக்கக் கூடாதென...//

    உண்மைலேயே கவிதை நல்லா இருக்குதுங்க ..

    ReplyDelete
  5. அருமையான மனதினை நெருடும் கவிதை

    ReplyDelete
  6. @ப.செல்வக்குமார் & nellai அண்ணாச்சி...
    வாங்க செல்வா,அண்ணாச்சி...
    ஊக்கத்திற்கு நன்றி...
    (நீங்க ரெண்டு பேராவது, இதை கவிதைன்னு சொன்னீங்க !)
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு!

    ReplyDelete
  8. @HVL...
    //நல்லாயிருக்கு! //
    வாங்க HVL...
    ஊக்கத்திற்கு நன்றி...
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  9. @gumkattai...
    //arumaiyana kavithai bhai !!!//
    ஊக்கத்திற்கு நன்றி பரணி !
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...