Saturday, August 15, 2009

சுதந்திர தினம்.





கிட்டத் தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின விழா ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த சுதந்திர தினத்தன்று கிடைத்தது.கடைசியாக பத்தாம் வகுப்பு படிக்கும் போது கலந்துகொண்டது.

தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வதும் இதுதான் முதல் முறை. விழாவிற்கு வந்தவர்களில் பலரது நோக்கமே கொடியற்றத் தில் இல்லாமல் வி பி க்களை பார்ப்பதில் தான் இருந்தது.(நானும் எனது நண்பனும் கூட அதற்குத்தான் போயிருந்தோம்!)

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் காம்பியரிங் (இதற்கு தமிழில் என்ன வார்த்தை உபயோகிப்பது?) கேட்ட திருப்தி.அதிலும் ஒவ்வொரு வாக்கியத்திற்க்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தார்கள்(என்னுடன் வந்த நண்பன் மேஜர் சுந்தர் ராஜனை ஞாபகப்படுத்தினான்.)

முதல்வர் உரையில் அவர் ஆட்சியின் சாதனைகளே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன.இறுதியில் அனைவருக்கும் சங்கீதா ஹோட்டலில் இருந்து சிற்றுண்டி கொடுத்தார்கள்.எப்படியும் 30 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும்.

குடியரசு தினத்தன்று வந்த கூட்டத்தில் பாதி கூட இருக்காது.
வந்தவர்களில் பெரும்பாலோனோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள் போலும்.போன வாரம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.(பில்ட் அப் கே வா?)


1 comment:

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...