Sunday, January 10, 2010

சென்னை புத்தகக் காட்சி...



இன்று மாலை நானும் என் நண்பனும் முப்பத்தி மூன்றாவது ( எப்படி நம்பரை டைப் பன்றதுன்னே தெரியல. நம்பர் டைப் பண்ணினாலும் , அது தமிழ் நம்பரா மாறிடுது. ஒவ்வரு முறையும் வார்த்தைகளாலேயே சொல்ல வேண்டியது இருக்கு ! ) சென்னை புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தோம். போன முறை கூட வந்த ஒருவன் , இந்த முறை கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டான்.

மூன்று மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு, இந்திய நேரப் படி நான்கு மணிக்குதான் காட்சி வளாகத்தினுள் சென்றேன். போன முறை , போகும் போதே ,
எஸ். ராமகிருஷ்ணனின் புத்தகங்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றுதான் சென்றேன். அனால் இந்த முறை அப்படி இல்லை. போன முறை வாங்கிய புத்தகங்களில் இரண்டை மட்டுமே படித்தேன் . இன்னொன்று ஆறு மாதங்களாய் தொடப் படாமலே இருக்கிறது !

கடந்த வாரம் நான்கு நாட்கள் விடுமுறை இருந்தும், சில ஆணிகள் பிடுங்கப் பட வேண்டி இருந்ததாலும், ' கம்பேனி ' க்கு ஆள் இல்லாததாலும், போகவில்லை. இன்றும் போகாமல் இருந்தால், ஒரு புதிய பதிவு போட முடியாமல் போய் விடும் என்பதால், ஒருவழியாக, இன்று போயே விட்டேன். கிட்டத் தட்ட ஆறுநூறு ஸ்டால்கள் இருந்தன. நண்பனுக்கு ஆயிரம் ரூபாயும் , எனக்கு ஐநூறு ரூபாயும் பட்ஜெட் !

பாதி சுற்றி முடிப்பதற்குள்ளாகவே, நண்பன் ' உச்ச வரம்பை ' நெருங்கி விட்டிருந்தான். நான் சில பதிப்பகங்களில் இரண்டு மூன்று புத்தகங்களை பார்த்து வைத்திருந்தேன். பின் என்னுடைய ' உச்ச வரம்பிற்குள் ' , மனதுக்கு பிடித்தமான இரண்டு கதாசிரியர்களின் சிறுகதைத் தொகுப்பினை வாங்கி வந்தேன்.

இந்த புத்தகக் காட்சியில் சில பிரபலங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பும் , பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குனர்கள் திரு.சேரன், திரு . பால சந்தர், எழுத்தாளர் சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், உதய சந்திரன் இ.ஆ.ப, திரு . பழ.நெடுமாறன்,
நடிகை சுகன்யா போன்றோர் வந்திருந்தனர். என்னுடைய கல்லூரி நண்பர்கள் இருவரைக் கூட இன்று புத்தகக் காட்சியில் பார்த்தேன்.

உயிர்மை பதிப்பகத்தில் , சாரு நிவேதிதாவும் , மனுஷ்ய புத்திரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சாருவின் பத்து புத்தகங்கள் தொகுப்பை வாங்குபவர்களுக்கும் , மேலும் கேட்பவர்களுக்கும் ஆட்டோ கிராப் போட்டுக் கொண்டிருந்தார் சாரு . விகடன் பிரசுரத்தில் வழக்கம் போல் கூட்டம். நக்கீரன் பதிப்பகமும் பிரம்மாண்டமாக அரங்கு அமைத்திருந்தனர். கடைசி நாள் என்பதால், கூட்டமும் அதிகம் !

பாதி சுற்றி முடிப்பதற்குள் , உடல் அலுப்பு கண்டு விட்டது ! மீதியை அடுத்த புத்தகக் காட்சியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தோம். அடுத்த முறையாவது ' உச்ச வரம்பை ' உயத்திக் கொண்டு போக வேண்டும் ! மக்கள் , எழுத்தாளர்களின் பெயரைக் சொல்லி , அவர்களின் புத்தகங்கள் இருக்கிறதா ? என்று கேட்பதை பார்க்கும் போது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் சரி , இந்த பதிவின் ஜென்ம சாபல்யம் இன்னும் சொல்லப் பட வில்லையே ?

நான் வாங்கிய இரண்டு புத்தகங்கள் ,

>>> கி. ராஜ நாராயணன் கதைகள்.
வெளியீடு : அகரம் .
விலை : ருபாய் இருநூறு .
( பத்து சதவீதம் தள்ளுபடி போக, ருபாய் நூற்றி எண்பது ).

>>> புதுமைப் பித்தன் கதைகள்.
வெளியீடு : புதுமைப் பித்தன் பதிப்பகம்.
விலை : ருபாய் முன்னூற்றி ஐம்பது.
(பத்து சதவீதம் தள்ளுபடி போக , ருபாய் முன்னூற்றிப் பதினைந்து ) .


இந்த பதிவுக்காக , புத்தகக் காட்சியில் ஒரு புகைப் படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அனால் , கடைசி நேர அவசரத்தில் மறந்து விட்டேன்.

புகைப்படம் உபயம் : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்சங்கம்.


No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...