Saturday, July 3, 2010

பொறியியல் கலந்தாய்வு - ஒரு பார்வை ...

இது அட்மிஷன் காலம் ! 12  ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கும் , அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏதோ என்னால் முடிந்தவரை , எனக்கு தெரிந்த தகவல்களை தெரியப்படுத்தலாம் என்ற முயற்சியில் இந்த இடுகை!



12 ஆம்  வகுப்பு முடிந்தவுடனேயே, தங்கள் கல்லூரிக்கனவுகளை காண ஆரம்பித்து விடுகின்றனர் மாணவர்கள் ! தனக்கு என்ன மதிப்பெண் வரும் என்பதை, எல்லா மாணவர்களும் ஓரளவிற்கு கணித்திருப்பார்கள் ! அதனால், அவர்களே ஒரு சில கல்லூரிகளை தேர்ந்து எடுத்து ஒரு 'லிஸ்ட்' தயார் செய்து வைத்திருப்பார்கள் !

மேலும், கண்டிப்பாக பொறியியல் தான் படிக்க வேண்டுமென்று மாணவர்களை காட்டாயப் படுத்தாதீர்கள் ! அவர்கள் என்ன விருப்பப் படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, பிறகு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் . ( எதையும் 'பிளான்' பண்ணி பண்ணனும் !)  

 அப்படி உங்கள் 'பிளான்' பொறியியல் தான் என்றால்,  


சில டிப்ஸ் :


1 . உங்கள் கலந்தாய்வு நாளுக்கு முந்திய நாளே, கலந்தாய்வு நடக்கும் ஊருக்கு (சென்னை )சென்று விடுவது நலம் .

2 . எங்கே தங்குவது என்று யோசிக்கிறீர்களா ? கவலையை விடுங்கள் ! எனக்கு தெரிந்து , தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இரண்டு குடும்பத்திற்கும் குறைந்தது ஒருவர் சென்னையில் தங்கி இருக்கிறார் ! அப்படியே போன் பண்ணி , " தம்பி , மெட்ராசுக்கு நம்ம பய கவுன்சிலிங்குக்கு வரப் போறோம் . நீ ரூம்ல , இருந்தா, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு இருக்கோம் !" என்று சொல்லி வையுங்கள் ! படிப்பு விஷயமாதலால், அவரும் OK சொல்லி விடுவார் , முழு மனதுடன் ! அப்படி இல்லா விட்டாலும், நிறைய MANSION கள் இருக்கின்றன.

3 . நீங்கள் தங்கப் போகும் அறை , கலந்தாய்வு நடக்கும் இடத்தில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் ! இல்லையென்றால், ஒரு 4 மணி மேரம் முன்னதாக கிளம்பி விடுங்கள் !



4 .நீங்கள் , அண்ணா பல்கலைக் கழக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடனேயே , நிறைய நோட்டீஸ்கள் கொடுப்பார்கள், எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள் ! எப்படியும் அரை கிலோ தேறும் ! வேறொன்றுக்கும் உபயோகப் படாது !

இந்தியாவில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 35 % கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன !ஆனால், எல்லா கல்லூரிகளிலும் தரமான கல்விக்கு உத்திரவாதம் இல்லை! தமிழ்நாட்டில்  மொத்தமுள்ள 400  (தோராயமாக ) பொறியியல் கல்லூரிகளில் , 150 க்கும் குறைவான கல்லூரிகளில் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கல்வி கொடுக்கப் படுகின்றது ! எனவே நீங்கள் தயாரித்திருக்கும் லிஸ்டில் உள்ள கல்லூரிகள் , இந்த 150 க்குள்  இருத்தல் நலம் !

4 . எல்லா சான்றிதழ்களையும் , ஒன்றுக்கு இரண்டு நகல் எடுத்து  வைத்துக் கொள்ளுங்கள்.

5 . துண்டு பிரசுரங்களிலோ , அல்லது கல்லூரியின் இணைய தளத்திலோ வெளியிடப் பட்டிருக்கும் கட்டிட படங்களைப் பார்த்தோ , அவர்களின் 'SALIENT FEATURES ' என்று சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களைப் பார்த்தோ மட்டும் , எந்த கல்லூரியையும் தேர்வு செய்யாதீர்கள் ! அந்த கட்டிடங்கள் , நீங்கள் கட்டப் போகும் பணத்தில் கூட கட்டப் படலாம் !

6 . கண்டிப்பாக, CAMPUS INTERVIEW இருக்கும் கல்லூரியைத்தான் தேர்வு செய்ய வேண்டுமென்று அடம் பிடிக்காதீர்கள் ! எல்லோருக்கும் அது சாத்தியமில்லை ! 

(ஒரு மாணவன் , 60 % மதிப்பெண்களுடன் , ஓரளவிற்கு  தடையின்றி ஆங்கிலம் பேசி, சராசரியான தொழில்நுட்ப அறிவுடன் இருந்தாலே, கொஞ்சம்  தேடுதலும் இருந்தால் CAMPUS INTERVIEW இல்லையென்றாலும் , வெளியில் வந்து ஏதோ ஒரு வேலையில் சேரலாம் ! ஆனால் ,எடுத்த உடனேயே 30 ,000 ரூபாய் சம்பளத்தில், MNC யில் வேலை என்று எதிர்பார்க்க முடியாது ! அதற்கு ஓரிரு வருடங்கள் ஆகும் ! அதனால் என்ன ?! )

7 . கலந்தாய்வுக்காக நீங்கள் காத்திருக்கும் அறையில், ஒரு பெரிய திரையில் கல்லூரிகளின் காலி இட விவரங்கள் படமிட்டுக் காட்டப் படும். எனவே, நீங்கள் கலந்தாய்வுக்காக உள்ளே செல்லும் போது, மூன்று CHIOICE களை ச்சூஸ் பண்ண இது உதவியாக இருக்கும் !

8 . பெரும்பாலும் , நீங்கள் முதலில் தேர்வு செய்த கல்லூரியில், தேர்வு செய்த இடம் கிடைக்கும் .( இது கலந்தாய்வின் முதல் 10 நாட்களுக்கு  பொருந்தாது !) . இல்லாத பட்சத்தில், இரண்டாவது !


9 .IT மற்றும் ECE துறைகளில் தான், தன் மகன்/மகள் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள் ! CORE BRANCHES என்று அழைக்கப்படும்  சிவில்,ஆட்டோ மொபைல்,மெக்கானிக்கல் போன்ற துறைகள் , CIRCUIT BRANCHES என்று அழைக்கப் படும் IT ,ECE ,EEE ,CSE போன்ற துறைகள், இரண்டுமே சம அளவிலான வேலை வாய்ப்பினைத் தரக் கூடியவை !



10 . முடிந்த வரை, மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்க அனுமதியுங்கள். அங்கு அவர்கள் பொறியியலுடன் சேர்த்து வாழ்க்கையையும் கற்றுக் கொள்வார்கள் ! எதாவது ஒரு விளையாட்டில் , கல்லூரியின் சார்பிலோ அல்லது துறையின் சார்பிலோ பங்கு பெற ஊக்கப் படுத்துங்கள் ! படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல!

11 . தமிழ் வழி பொறியியல் இந்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப் பட இருக்கிறது ! அதற்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை !

மேலும் விவரங்களுக்கு - அண்ணா பலகலைக் கழக இணையதளம் - TNEA 2010 






இனிமையான கலந்தாய்வு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் !

13 comments:

  1. பயனுள்ள தகவல்கள் சார்.

    ReplyDelete
  2. @ Jey...
    நன்றி நண்பரே...
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  3. ஹலோ நண்பா ஒரு தடவை சொன்ன கேக்கமாடிங்கள இந்த இடுகை ரொம்ப போரிங்!!!
    Please post something interesting the above details are the very basic which everybody knows.
    We need some posts with more comedies.

    உண்மையாவே உங்களுக்கு காமெடி நல்ல வருது

    So please try to do that.

    Kovamana comments by
    Arun

    ReplyDelete
  4. @Arun...
    //ஹலோ நண்பா ஒரு தடவை சொன்ன கேக்கமாடிங்கள இந்த இடுகை ரொம்ப போரிங்!!!
    Please post something interesting ///
    நான் என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன் ?! :)
    நானும் எதாச்சும் நல்ல படியா காமெடியா எழுதலாம்னு நெனச்சேன்.. ஆனா :(
    //the above details are the very basic which everybody knows.////
    நூத்துல ஒருத்தருக்காவது கொஞ்சமாவது பயன் படட்டும் என்றுதான் நண்பரே இந்த இடுகை...
    //We need some posts with more comedies.///
    ஹ்ம்ம்...
    //So please try to do that.///
    ஆபீஸ்ல ஆணி கொஞ்சம் அதிகம் நண்பரே ! முடிந்த அளவு முயற்சிக்கறேன் !!
    //உண்மையாவே உங்களுக்கு காமெடி நல்ல வருது///
    இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது ?! :)
    //Kovamana comments பி Arun ///
    'அருண்' னு பேர் வெச்சிருக்கறவங்க எல்லாம் கோபப் படக் கூடாது...
    :)
    உங்கள் வருகையும், மறுமொழியும் எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது நண்பரே !

    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  5. உங்களின் அருமையான பதில் மிகவும் சந்தொஷமளிகிறது...(உண்மையில் சிரிக்க வேய்கிறது)
    நான் தான் அப்பவே ஒத்துகிட்டேனே உங்களுக்கு நல்ல காமெடி வருதுன்னு உங்க பதில்ல இருக்க காமெடியா தான் ஒவ்வொரு இடுகைளையும் கேட்கிறேன்.

    Office la romba pressure na?

    C

    செய்யணும்னு நீனைகிறவங்க செய்வாங்க
    செய்யகுடாதுன்னு நீனைகிறவங்க தான் காரணம் சொல்லுவாங்க!!!

    So We dont need any reasons...

    (Can you please let me know why my last comment has been removed)

    ReplyDelete
  6. @ Arun...
    //உங்க பதில்ல இருக்க காமெடியா தான் ஒவ்வொரு இடுகைளையும் கேட்கிறேன்.///
    ஹ்ம்ம்...
    //So We dont need any reasons...//
    ரைட்டு ......
    //(Can you please let me know why my last comment has been removed)///
    பிளாக்கர் ல பிரச்சினைன்னு நினைக்குறேன்..
    நெறைய பேரோட பிளாகுல இதே பிரச்சினைதான் நண்பரே....!
    பின்னூட்டங்கள் ஒழுங்காக DISPLAY ஆக மாட்டேங்குது !
    சீக்கிரம் கூகுளே சரி பண்ணிடும்னு நினைக்குறேன் ...!

    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  7. @Arun...
    ஆங்.... இப்போ பின்னூட்டங்கள் கரெக்டா தெரியுதுன்னு நினைக்குறேன்!
    நான் ரிமூவ் பண்ணியிருந்தா,
    "This post has been removed by the author."
    அப்படின்னு வந்திருக்கும் !!
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  8. ஹலோ!!! இந்த வார இடுகை எங்கே?

    ReplyDelete
  9. @ Arun...

    ஹ்ம்ம் :(
    உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் போடவே 3 நாள் ஆகுது நண்பரே !!!
    கொஞ்சம் ஆணி அதிகம் தான் :( ...
    ( கையில சரக்கு இல்லைனா எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு ?!)
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  10. /****முடிந்த வரை, மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்க அனுமதியுங்கள். அங்கு அவர்கள் பொறியியலுடன் சேர்த்து வாழ்க்கையையும் கற்றுக் கொள்வார்கள்*****/

    Romba Correct bhai !!! payanula thagaval...

    ReplyDelete
  11. @gumkattai...
    //
    Romba Correct bhai !!! payanula thagaval... //
    ஹ்ம்ம்... மீண்டும் விடுதி வாழ்க்கை கிடைக்காதா என்று மனம் ஏங்குகிறது பரணி !!!

    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  12. அப்படியே இதையும் பாருங்க..

    http://kudimakan.blogspot.com/2011/08/blog-post.html

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...