Sunday, May 9, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1...

"நீ ஏன் பதிவர் ஆனே ?" ன்னு நீங்க கேக்கலைனாலும், சொல்லவேண்டியது என் கடைமைங்க ! . மேல படிங்க . 


என்னங்க ? 'மேல' படிங்க ன்னா , கீழ படிக்கிறீங்க ? சரி படிச்சிட்டு போங்க !

**********************************************************************************************************************************************************

முதலாமாண்டு மாணவர் விடுதி... மதிய உணவு நேரம்... அனைவரும் அரக்க பறக்க உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது ஹாஸ்டலில் தரப்படும் அப்பளத்தை, அடுத்தவர் தட்டிலிருந்து 'ஆட்டையப் ' போடுவது ஒரு பேஷன் ! என் நெருங்கிய நண்பன் ஒருவன் , என்னுடைய அப்பளத்தை எடுக்க , தட்டில் கைவைக்க முனைந்தான் !
நான் - " முதல்ல  அப்பளம் , FRIEND எல்லாம் அப்பறம் " !

**********************************************************************************************************************************************************


அதே முதலாமாண்டு மாணவர் விடுதி. எங்கள் அறையில் எப்போதும் மாணவர் கூட்டம் கூட்டி அரட்டையடித்துக் கொண்டிருப்போம். யாராவது ஒருத்தர் மாட்டினால் போதும், அவனை கிண்டலடிப்பதுதான் அன்றைய பொழுது போக்கு ! அந்த வகையில், மாட்டிய ஒருவனை எல்லோரும் ஒட்டகத்தை சுத்தம் செய்பவன்   என்று ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவனும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தான்.

" வாரத்துக்கு எத்தன நாள் இந்த வேலை ?" இது நண்பர்கள்.
"வாரத்தில் 5  நாள் தான்"
"அப்ப மற்ற நாட்கள் ?!"
"ரெஸ்ட் தான் !"
"ரெஸ்ட் ஒட்டகதிற்க்கா ?! உனக்கா ?!" - நான் .

**********************************************************************************************************************************************************

கல்லூரி படிப்பு  முடிந்து , வேலை தேடிக்கொண்டிருந்த காலம். கல்லூரி நண்பன் ஒருவன் போன் செய்து, தான் யாரென்று சொல்லாமல் 'சஸ்பென்ஸ்' வைத்துக் கொண்டிருந்தான் .

"டேய் , நீ யாருன்னு சொல்டா . இல்ல ஒரு 'க்ளூ' வாவது கொடேன் !" - நான்.
"நீ எந்த காலேஜ்ல படிச்ச ?"
"_______ காலேஜ் ல ."
"எந்த BRANCH ?" - இது நண்பன்.
"IT "
"எந்த வருஷம் ?"
"நாலு வருஷமும் அதே BRANCH தான் ?" - அடியேன்.
அதுக்கு பிறகு அவன் கால் பண்ணவே இல்லை !

**********************************************************************************************************************************************************
அலுவலகத்தில் நண்பர்களுடன் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். நண்பர் கொண்டு வந்திருந்த தோசையில், சிறிய கல் ஒன்று இருந்தது.
"என்னப்பா , தோசையில கல் இருக்கு ?" மற்றொரு நண்பர்.
" 'கல்' தோசை கேள்விப் பட்டதில்லையா ? அதான் இது " - வேறு யார், நாந்தேன் !

**********************************************************************************************************************************************************

ஒரு வருடத்திற்கு முன்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பொருளாதார பெருமந்தம் தனது வேலையை காட்டிக் கொண்டிருந்த காலம்.உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த  நான் , தலை முடியை நன்றாக SHORT ஆக வெட்டியிருந்தேன்.
"இது என்னப்பா , புது விதமான கட்டிங் ? " - உறவினர் .
"இதுதாங்க COST CUTTING ! " - பிரபல(!) பதிவர் தேசாந்திரி - பழமை விரும்பி (அட , நாந்தாங்க , அப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது !! ).

**********************************************************************************************************************************************************
ஒருவாரம் முன்பு , அலுவலக நண்பர்களுடன்  மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பேச்சு நித்யானந்தா பற்றி திரும்பியது. அப்போது , ஒரு நண்பர் சொன்னார்,

"புட்ட பர்த்தி சாய்பாபா , ஆள் எப்படின்னு தெரியாது. ஆனால், அவர் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்கிறார். இதுமாதிரி, தனக்கும் செய்து, மற்றவருக்கும் எதாவது செய்தால் பரவாயில்லை . ஆனால், நித்தியானந்தா ?!"

"அதுக்குதான் , CD விட்டிருக்காங்களே ?!" - நான் !

**********************************************************************************************************************************************************

அரசியல் பேசிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் சொன்னார் ,
" 'மக்கள் நல திட்டம்' ங்கற பேர்ல, திட்டத்திற்கு ஒதுக்கிய  பணத்தை திருடறதுலயே எல்லாரும் குறியா இருக்கானுக !"
" 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' னு நீங்க கேள்விப் பட்டதில்ல ?!"

**********************************************************************************************************************************************************

நமக்குள்ள இவ்வளவு 'திறமை' இருக்கும் போது, நான் ஏன், வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது ?! நீங்களே சொல்லுங்க !


டிஸ்கி - மேலே சொன்னதெல்லாம், ஒரு தமாசுக்குதான் . உண்மையில் , இளவஞ்சி,வால்பையன் , போன்றோர்களின் வலைதளத்தை பார்த்த பிறகுதான் , பதிவுலகிற்குள் பாதம் பதிக்கும் ஆசை வந்தது. அவர்களுக்கு என் நன்றிகள். இவர்கள் மட்டுமல்லாமல், என் வலை தளத்திற்கு வந்து, FOLLOWERS ஆகியும், ஆகாமலும், பின்னூட்டங்கள் இட்டும், இடாமலும்  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும் ,GOOGLE க்கும்  மற்ற அனைவருக்கும் என் நன்றிகள் .

Friday, May 7, 2010

தலைப்பில்லாப் பதிவுகள், கலைஞருக்கு ஒரு கடிதம்,பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?

ஒரு  நல்ல விஷயம்....
இப்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் புதிய வகை சொகுசுப் பேருந்துகளை (TATA MARCOPOLO ) விட்டிருக்கிறார்கள்.உண்மையிலேயே வண்டி நல்லா  இருக்குங்க ! ஒரு SEAT -  கும் , அடுத்த SEAT கும் நல்ல இடைவெளிகள்  இருக்கிறன்றன.FREE யா கால் வெச்சி உக்காரலாம். SEAT குஷன் கூட நல்லா இருக்கு ! பழைய ASHOK LEYLAND டீலக்ஸ் வண்டி ரொம்ப மோசங்க ! டயர் மேல இருக்குற கிட்டத் தட்ட 12 SEAT ல உக்காரக் கூட முடியாது ! ஆனால் அது  போன்ற வண்டிகளில் பெரும்பான்மையானவற்றை இப்போது M சர்வீஸ் வண்டிகளாக மாற்றி வருகின்றனர். நல்ல விஷயம் தானே ?!



***********************************************************************************
கலைஞருக்கு ஒரு கடிதம்...
தங்களின் இலவச திட்டங்கள் தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளன என்று தாங்கள் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன். நல்லது.ஆனால் மக்களுக்கு தேவையான இன்னும் சிலவற்றையும் தாங்கள் செய்து கொடுத்தால், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு 'செலவு' அதிகம் இருக்காது என்பது எனது கருத்து.கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி  திட்டம், கலைஞர் வண்ணத் தொலைகாட்சி திட்டம், ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டம் , என ஏகப் பட்ட திட்டங்கள் தீட்டி மக்களுக்கு உழைக்கும் உங்களால் இன்னும் சில திட்டங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுவதால், இந்த கடிதம்.

கலைஞர்  குடிநீர்த் திட்டம் :
இப்பொழுதெல்லாம், சென்னையில் ஓரளவிற்கு நல்ல குடிநீர் வேண்டுமென்றால்,  குறைந்தது 25  ரூபாயாவது கொடுத்தால் தான் , 25 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.  "அதான் மெட்ரோ வாட்டர் வீட்டுக்கு வீடு வருகிறதே ?! " என்று நீங்கள் கேட்கும் முன்னர் நான் இன்னொரு விஷயத்தை சொல்லி விடுகின்றேன். எனக்குத் தெரிந்து , மெட்ரோ வாட்டர் தண்ணீரை மக்கள் சமைப்பதற்கு மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர். சென்னையின் அறுபது சதவிகித மக்கள் குடிப்பதற்கு மினரல் வாட்டரை மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர்.நான் உங்களை , ' கலைஞர் இலவச குடிநீர்த் திடம் ' கொண்டவர சொல்லவில்லை. 'கலைஞர் மலிவுவிலை குடிநீர்த் திட்டம் ' மாதிரி ஏதாவது செய்யுங்களேன் ! நன்கு உறுப்பினர்களை கொண்ட  சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு வாரம் மூன்று முதல் நான்கு வரை தண்ணீர் கேன்கள் தேவைப்  படுகின்றன. ஆக வாரத்திற்கு 100 ரூபாய்.மாதம் 400 ரூபாய். ஒரு மாதத்திற்கு நீங்கள் தரும் அரிசிக்கு செலவு 20 ரூபாய்.எங்கள் குடிதண்ணீர் தேவைக்கு செலவு 400 ரூபாய் !



கலைஞர் வீடு வாடகைத் திட்டம் :
நீங்கள் இப்போதைக்கு சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்திருக்கீர்களா ? சென்னையில் ஓரளவிற்கு நல்ல வீடு வாடகைக்கு வேண்டுமென்றால், நீங்கள் குறைந்தது மாதம் 8000 முதல் 10000 வரை செலவு செய்ய வேண்டும் ( இந்த அநியாயத்தை தட்டிக் கேக்க இங்க யாருமே இல்லையா ?! ). கிட்டத்தட்ட ஒரு இந்தியனின் சராசரி மாத வருமானத்தை விட அதிகம் ! இதுக்குன்னு RENT CONTROL BOARD  னு ஏதோ இருக்காமே ?
எதாவது பாத்து பண்ணுங்க சார்!

வேணும்னா , நாகநாதன் சாரையும், சண்முக நாதன் அண்ணாவையும் கேட்டுப் பாருங்க , எல்லாத்தையும் தெளிவா சொல்லுவாங்க !மேலும் வேற ஏதாவது திட்டம் எனக்கு தோன்றும் போது பதிவிடுகிறேன், பார்த்துக் கொள்ளுங்கள் !

***************************************************
பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?
கோடைக் காலத்தின் மத்தியில் இருக்கிறோம் நாம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதையே வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ! இந்த நிலையில், நமது அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் மகா கேவலமாக இருக்கிறது, வழக்கம் போலவே !

"வெயிலின் கொடுமையை கருத்தில் கொண்டு , போது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆங்காங்கே ,தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகத்தை தணிக்க வேண்டுமென்று ஆணை "

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி , எல்லா கட்சித் தலைமையகங்களும் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுவாகத்தான் இருக்கும்! உடனே , உடன் பிறப்புகளும் , இரத்தத்தின் இரத்தங்களும் , இன்ன பிற அரசியல் கட்சித் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு , தண்ணீர் பந்தல் களை அமைத்தனர். முதல் நாள் , தர்பூசணி , வெள்ளரி, நீர் மோர், ரசனா என்று கலை கட்டியிருக்கும் - புகைப்படங்களும் , வீடியோக்களும் எடுத்து முடிக்கும் வரையில் ! இப்போது கேடாரற்று கிடக்கின்றன (சென்னையின் ) அனைத்து தண்ணீர் பந்தல்களும் ! ஒரே ஆறுதல், மக்கள்,  நிழலுக்காக ஒதுங்குவதற்கு பயன்படுகின்றன இந்த தண்ணீர் பந்தல்கள் !

ஆனால், எந்த விளம்பரமும் இல்லாமல் , தண்ணீர் பந்தல் அமைத்து தொண்டாற்றும் எத்தனையோ வீடுகளை, நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன் ! மகாத்மா காந்தி சொன்னார் , 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது '. இந்தியா மட்டுமல்ல, மனிதர்களும் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள் !!



சென்னை போன்ற பெரு நகரங்களில் , நம் வீட்டிற்கு தண்ணீர் வாங்கவே , ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ஒரு ரூபாய் செலவாகும்போது  , நாம் எங்கே தண்ணீர் பந்தல் வைப்பது ?! ஆனால், ரஜினி காந்தின் கல்யாண மண்டபத்தில் தனமும் 200 லிட்டர் பால்,மோராக்கப்பட்டு , மோர் பந்தல் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது என்று அறிந்தேன். பாராட்டுக்கள் !!

Friday, April 30, 2010

ரெட்டைச் சுழி படமும் ஒரு மொக்கையும் , ஒரு அநியாயமும்...

முதலில் ரெட்டைச்  சுழி .....

கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம், அடையார் கணபதி ராம் தியேட்டரில், "ரெட்டைச் சுழி " திரைப்படம் பார்த்தேன். கல்லூரி நண்பனும், பள்ளிக்கூட நண்பனும் உடன் வந்திருந்தார்கள். கூட்டம் மிகவும் குறைவுதான் ! எந்த வித அலுப்புமின்றி டிக்கெட் கிடைத்து சுமூகமாக உள்ளே சென்று அமர்ந்தோம். மொத்தமாக ஒரு 200 பேர்தான் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 45 ரூபாய் டிக்கெட்.



ரொம்ப நாட்களுக்கு முன்னாடி , விகடனில், ரெட்டைச் சுழி பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். நான் இதற்கு முன்னாடி தாமிரா என்ற பெயரை கேள்வி கூட பட்டதில்லை. இப்போதுதான் அவர் பாலச்சந்தரின் சீடர்  என்பது தெரியும். படத்திற்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு, இயக்குனர் சிகரமும் இயக்குனர் இமயமும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதுதான். கார்த்திக் ராஜாவின் இசைக்கு , பெரிய வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல இசைஅமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை ! விளம்பரமும் அதிகம் செய்யப்பட வில்லை!



இதுவரைக்குமே , பாலச்சந்தரும் பாரதிராஜாவும் பரம எதிரிகள் என்று ஒரு மாய பிம்பம் எனக்குள்ளே இருந்தது . சமீபத்திய FM நிகழ்ச்சியில் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் அந்த மாய பிம்பம் சுக்கு நூறாய் உடைந்தது ! அப்போதிருந்தே இந்த படத்திற்கான எனது எதிர்பார்ப்புகள் தொடங்கிவிட்டன ! தமிழ் சினிமாவின் இரு மாபெரும் சிற்பிகள் தானே இவர்கள் ?! படம் ஆரம்பம் முதலே இருவரும் சிறுபிள்ளைத் தனமாக மோதிக் கொள்கிறார்கள் ! ஒன்று, இவர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறார்கள் - அல்லது , உடன் இருக்கும் குழந்தைகள் பெரிய மனுசத் தனமாக நடந்து கொள்கிறார்கள் !



தென் மாவட்டங்களை சேர்ந்த  குக்கிராமங்களில் கதை நடப்பதாக சொல்லப் பட்டாலும்,  அதற்கே உரிய  வழக்கு மொழியை கையாளவில்லை என  நினைக்கிறேன். ஒளிப்பதிவாளர் கிராமங்களை காட்சிப்  படுத்திய விதம் அருமை! பாடல்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை என்றாலும், திரை அரங்கத்தில் கேட்கும்  போது நன்றாகத் தான் இருந்தது. பின்னணி இசையை கவனமாகக் கோர்த்திருக்கிறார் கார்த்திக் ராஜா.குழந்தைகள் கதாப் பாத்திரங்களுக்கான  நடிகர்கள் தேர்வு சூப்பர் ! பால்யத்தின் குறும்புகளை கொஞ்சம் ஆங்கங்கே தெளித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் படத்தின் பல இடங்களில் தர்க்கக் குறைபாடுகள் (LOGICAL MISTAKES ) ! என்ன என்று படத்தில் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். திரைக்கதையில் , கொஞ்சம் இல்லை, நிறையவே கவனம் செலுத்துங்கள் தாமிரா சார் ! வசனங்கள் ஓகே.படத்தின் பல காட்சிகள், பாலச்சந்தரின் மீசை போல், ஒட்டாமலே வருகின்றன. ஆய்த எழுத்து பாரதிராஜாதான் இதிலும் நடித்திருக்கிறார் ! "அங்காடித் தெரு" அஞ்சலி , அதை அப்படியே 'மையின் டையின்' செய்திருக்கிறார் !


பல இடங்களில் 'பசங்க' திரைப்படத்தை ஞாபகப் படுத்துகிறார்கள்.
ரெட்டைச் சுழி - இயக்குனர் இமயத்திற்க்காகவும் இயக்குனர் சிகரத்திற்க்காகவும், சிரமம் பார்க்காமல்  திரை அரங்கம் வரை போகலாம் !

ஒரு மொக்கை...

(நீ மேலே எழுதினதே மொக்கையாத்தான் இருந்ததுன்னு சொல்லப் படாது !)



IPL3 நடந்து கொண்டிருந்த போது, செஞ்சுரி அடித்த வீரர்களைப் பார்த்து ,அலுவலக நண்பன் சொன்னார் "இவனுங்க என்னா, வெறும் 100 தான் அடிக்கரானுங்க ?!, நான் 500  கூட  அடிப்பேன்!"

நான் : "அவனுங்க மட்டையை வெச்சு 100 அடிக்கறானுங்க ! நீ 500 அடிச்சிட்டு 'மட்டை' யாயிடுவ "!

ஒரு அநியாயம்...
கணபதி ராம் தியேட்டரிலும் டூ வீலர் பார்க்கிங் 10 ரூபாய் ஆக்கி விட்டார்கள். ஒரு SHED கூட இல்லை!

Monday, April 26, 2010

சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்...

அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,



        இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான  உங்கள்  ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது  நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு  உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத  ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL  விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே  போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.



அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி  சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப்  பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் -  உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !



ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011  இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய  மக்கள் காத்திருக்கிறார்கள் !



 2011 நம்ம கையிலே,  சந்திப்போண்டா  தோழா நாம WORLD CUP ல !

Sunday, April 11, 2010

பையா படமும் தலைப்பில்லாப் பதிவுகளும்... 11.04.2010

பதிவுலகப் பெரியவர்கள் எல்லாம் , வாரம் ஆனா , அவியல் ,குவியல்,டரியல்,மிக்சர்  ப்ரூட் , இட்லி தோசை வடை பொங்கல், கொத்து பரோட்டா என்று பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . அதாவது , குறிப்பிட்டு ஒரு கருத்து என்றில்லாமல் கலந்து கட்டி எழுதும் பதிவு தான் இது போன்ற தலைப்புகளைப் பெறுகின்றது. நானும் இது  போன்று ஏதாவது எழுதலாம் என்று நினைத்து , அதற்கேற்ற தலைப்பினை தேடிப் பார்த்தேன். எதுவும் சரியாக கிடைக்க வில்லை. எனவே இப்போதைக்கு தலைப்பிலாப் பதிவுகள் என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைக்கிறேன். நல்ல தலைப்பு கிடைக்கும் போது மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம்.

****************************************************************

இன்று மதியம் திருவான்மியூர் தியாகராஜா தியேட்டரில் பையா திரைப்படம் பார்த்தேன்.
ஞாயிற்றுக் கிழமை மதியம் ஷோவிற்கு கூட நல்ல கூட்டம். ரெண்டு கவுன்ட்டர்களிலும் கூட்டம் அலைமோதியது.அரை மணி நேர காத்திருப்பிற்கு பிறகு, ஒரு கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்க மாட்டார்கள் என அறிவித்தார்கள். பிறகென்ன ? மொத்த கூட்டமும் ஒரே கவுண்ட்டருக்கு முண்டியடித்து கொண்டு சென்றோம். ஒருவழியாக பால்கனி டிக்கெட் கிடைத்து உள்ளே செல்வதற்குள் படம் போட்டு விட்டார்கள். ஆகையால், ஒரு வித ஏமாற்றத்துடனேயே படம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கெல்லாம், "நன்றி - INDIAN OVERSEAS BANK , நன்றி - மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் " என்று ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து படம் பார்த்தாதான் ஒரு திருப்தி இருக்கும்.படம் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.




வீட்டிலிருந்து தியேட்டர் வரை நடந்து தான் சென்றேன்.சரி, போகும் போது நண்பனுடன் பேசிக்கொண்டே போகலாம் என பேசினால், "படம் செம மொக்க மச்சி " ன்னு அவனுடைய விமர்சனத்தை சொன்னான். நம்ம கொள்கை படி, அதையும் மீறி படம் பார்த்திருக்கிறேன் என்பது , இந்த விமர்சனத்தை எழுதுகிறேன் என்றபோதே உங்களுக்கு புரிந்திருக்கும்.டிக்கெட் வாங்க லைனில் நின்று கொண்டிருக்கும் போது , BLACK இல் டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞரைப்  பிடித்து, ' ஆபிஸ் ரூம்' க்கு கொண்டு போய் , நன்றாக 'கவனித்துக்' கொண்டிருந்தார்கள்.இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது, எனக்கு திரையரங்க ஆட்களின் மீதுதான் கோவம் வருகிறது.



" இவ்வளவு சரியானவர்களாக இருக்கும் நீங்கள், உங்கள் விஷயங்களில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் ?!. BLACK டிக்கெட் விற்கும் இளைஞரை நான்கு பேராக சேர்ந்து கொண்டு அடிக்கிறீர்களே , திரையரங்க CANTEEN இல் நீங்கள் எவ்வளவு ஞாயமாக நடந்து கொள்கிறீர்கள் ? 15 ரூபாய் கூல்டிரிங்க்ஸ் 20 ரூபாய்க்கு விற்கும் (இது ஒரு உதாரணம் தான், எல்லா தின்பண்டங்களுக்கும் விலை கிட்டத்தட்ட 30 % அதிகம் வைத்துதான் விற்கிறார்கள் !) உங்களை , எத்தனை பேர் சேர்ந்து கொண்டு அடிப்பது ?"



"இவ்வளவு கேள்வி கேக்கறியே ? இதையெல்லாம், அங்கேயே அவர்களிடத்திலேயே கேட்டிருக்க வேண்டியதுதானே ?"  னு நீங்க கேக்கறது எனக்கு காதுல விழுது ! நான் என்ன பண்றதுங்க ?! என் வீட்டிற்கு நானே ஆட்டோவில் போகமாட்டேன். வேறு சிலர் என் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவதை நான் எப்படி ஏற்க முடியும் ?! அல்லது ' தாங்க ' முடியும் ?!



இந்த கருமத்தை எல்லாம் விட்டுத் தள்ளுங்க ,பையா எப்படி ?! விறு விறு திரைக் கதைக்கு பெயர் போன சாரி பெயர் எடுத்த இயக்குனர்  லிங்குசாமியின் இந்த படத்தில், முதலில் நயன் தாராவுடன் தான் கார்த்தி ஜோடி சேர்வதாக இருந்தது. சிலபல பிரச்சனைகளால் , தமன்னா ஜோடியானார். தமன்னா கார்த்தியின் காரில் ஏறும் போது , திரைக் கதையின் வேகமும் ஏறிவிடுகிறது. அதன் பிறகு , காரிலேயே பயணிக்கிறது மீதிக் கதை, வேகம் குறையாமல் ! ஆனால், ஒரே மாதிரி வெறும் மூன்று சண்டைக் காட்சிகள் சற்றே அயர்ச்சியூடுகின்றன . பாடல்களில் ஏற்கனவே பையா வெற்றிபெற்று விட்டான். தியேட்டரில் எதேச்சையாக என் நண்பனை பார்த்தேன். "பாட்டுக்காகவே ரெண்டாவது தடவ வந்துருக்கண்டா !"  என்றான் !



ஒளிப்பதிவாளர் மதி நிறைந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். பாடல்களை காட்சிப் படுத்திய விதத்திலும், சேசிங் காட்சிகளை எடுத்த விதத்திலும் ! படம் முழுவதும் காரில் பயணித்தாலும் , கண்களை உறுத்தாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.வசனங்களும் நன்றாகவே வந்திருக்கின்றன. கார்த்திக் அடிக்கடி தத்துவங்கள் பேசுகிறார். மும்பை நண்பனாக வரும் ஜெகனும் நன்றாக நடித்திருக்கிறார். படத்திற்கு விளம்பரம் செய்யும் போது , ஆனந்தம் , ரன் , சண்டக் கோழி , பீமா வரிசையில் என்று சொல்கிறார்கள் . ' ஜி ' யை மறைக்க முயற்சிக்கிறார்கள் ! ஏன் ? ஜி படம் வெற்றி பெறவில்லை என்பதாலா அல்லது இந்த படத்தை வாங்கிய  தயாநிதி அழகிரி படத்தில் நடிக்க, ' தல ' தாமதிப்பதாலா ? ( இது நானா யோசிச்சதாக்கும் ! )

பையா - நல்ல பையா !!!

****************************************************
இந்த வார காமெடி .....

நேற்றிரவு திருவான்மியூரில் , மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அக்கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்து கொண்டு 'கண்டனம்' தெரிவித்தார்.தனது பேச்சின் நடுவே அவர் சொன்ன  காமெடி..



ஒரு சலூன் கடையில் ஷேவிங் செய்வதற்காக ஒருவர் சென்றார். சலூன் கடைக் காரர் , சோப்பில் தண்ணீருக்கு பதிலாக எச்சிலைத் துப்பினார். கடைக்கு போனவர் கேட்டாராம் - "ஏம்பா இப்படி SOAP ல  எச்சிலைத் துப்பி ஷேவ் பன்றியே இது உனக்கே நல்லா இருக்கா ? "
சலூன் கடைக் காரர் சொன்னார் - "வெளியூர்க் காரங்களுக்கு இப்படித்தான் சார் SHAVE பண்ணுவோம் !". அதுக்கு அவர் சொன்னாராம் - "தம்பி நான் வெளியூர்க் காரன் இல்லை.உள்ளூர்க் காரன்தான் !" அதுக்கு சலூன் கடைக் காரர் சொன்னாராம் - "உள்ளூர்க் காரனா இருந்தா மூஞ்சிலேயே எச்சி துப்புவோம் , பரவால்லையா சார் ?!"

Sunday, April 4, 2010

கவுண்ட மணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது....

" எது? நம்ம கவுண்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதா? யார் கொடுத்தாங்க ? எப்போ கொடுத்தாங்க ? " என்று கேள்விக் கணைகளுடன் நீங்கள் இந்த பதிவிற்கு வந்திருப்பது எனக்குப் புரிகிறது. இதெல்லாம் நாமளா செய்யறதுதாங்க ! அவர் ஆட்சியில் இருந்தாலாவது , மாதம் இரண்டு விருது வழங்கிக் கொள்வார். ஆனால் பாவம் , மனுஷன் ஆஸ்பத்திரியில்தானே இருக்கிறதா பேசிக்கறாங்க ?

ஆகவே," நம்ம கவுண்டருக்கு நாம விருது கொடுக்கலைனா , வேற யாரு கொடுக்கிறது ?! " என்று , நமது பதிவர் சங்கத்தின் (!) பொதுக் (?) குழுவில் கூடி முடிவு செய்தது போல , திருவாளர் கவுண்டமணி அவர்களுக்கு "வாழ் நாள் சாதனையாளர் " விருது வழங்குவதென ஒருமனதாக (?!) தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.



அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற , என்னென்ன தகுதிகள் இருக்கிறது என்று நீங்கள் கேட்டீர்களேயானால் , என்னால் தர  முடிந்த ஒரே பதில் , ( ஜெகத் இரட்சகனைப் போல !) " எங்க இஷ்டம் , நாங்க குடுப்போம் !". என்னுடைய சிறு வயதில், நான் 'கரகாட்டக் காரன் ' திரைப்ப் படத்தை மட்டும் கிட்டத் தட்ட 10 முறை பார்த்திருப்பேன் ! காரணம் நம்ம கவுண்டர் ஐயாவா அல்லது இளையராஜாவா என்பது இன்னும் எனக்கு புரியவில்லை.. அந்த வாழைப் பழ காமெடி சீனுக்காகவே படம் பார்க்கப் போனவன் நான் !



அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் TV கிடையாது. எங்காவது ,TV  இருக்கிற வீடாகப் பார்த்து அந்த வீட்டின் வாசலிலேயே நின்று, கவுண்டருக்காகவே , கதவிடுக்கின் வழியாக எட்டிப் பார்த்து , திட்டு  வாங்கியும் (என் வீட்டிலும் , அந்த TV  வீட்டிலும் ) மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்திருக்கிறேன்.இதனாலேயே, என் அப்பா கரகாட்டக்காரன் ஆடியோ கேசட் வாங்கிவந்தார். கேசட் வாங்கியாச்சு சரி - TAPE RECORDER ? ஆம், கரகாட்டக் காரன் கேசட்டுக்காக ஒரு புது TAPE RECORDER வாங்க வைத்தவன் நான்! பால்யத்தில் மிகவும் விரும்பிப் பார்த்த கவுண்டமணி செந்தில் காமெடிகள் , பதின் வயதுகளில் எரிச்சலூட்ட்டக் கூடியவையாக இருந்தன. ஆனால், இப்போது மீண்டும் அவற்றையே விரும்புகிறேன் ! இதுதான் அவர்களின் வெற்றி !!




இதுவரை அவருக்கு பெரிய அளவிலான விருதுகள் எதுவும் வழங்கப் படவில்லை என்ற எனது ஆதங்கமே இந்த பதிவின் ஆரம்பம்.வாங்க, நாம எல்லோரும்  சேர்ந்து கொடுப்போம் இந்த விருதை,

அவருடைய இடம் இன்னும் நிரப்பப் படாமலேயே இருக்கிறது.அதை நிரப்புவதும் கஷ்டம்.உண்மையில், அவர் ஒரு சாதனையாளர் தான் இல்லையா ?இனி அரசு விருதுகளில், சிறந்த நகைச்சுவை கலைஞர்களுக்கு "கவுண்டமணி விருது" வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்! நீங்க என்ன சொல்றீங்க ?!

Saturday, April 3, 2010

இந்த நூற்றாண்டின் முதல் மற்றும் கடைசி "திகில்" சம்பவம்.....

இன்று ஒரு அழகிய விடுமுறை ஞாயிறு. இருப்பினும், திருவல்லிக்கேணியின் குறுகிய சந்துக்களில் அதிகாலையிலேயே தொடங்கி விடும் இரைச்சல்கள், என்னை ஒரு நாள் கூட 6 மணிக்கு மேல் தூங்க விட்டதில்லை. இருந்தாலும், எனக்கு திருவல்லிக்கேணியில் தங்கி இருப்பது எனக்கு வெறுப்பைத் தந்ததில்லை ! (ஒரே) காரணம்? இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை ! ஷேக்ஸ்பியர்பி(ரி)யரில் இருந்து மஞ்சள் பத்திரிக்கைகள் வரை எந்த தலைப்பிலும் புத்தகங்கள் வாங்கலாம் ! ஆனால் என் மனைவி முதலில் திருவல்லிக்கேணி வருவதற்கே யோசிப்பாள்.ஆனால், இப்போது அப்படியில்லை ! நன்றாக பழகி விட்டாள்!



நான், எனது வழக்கமான ஞாயிறு காலை சிற்றுண்டியான - MAGGI நூடுல்சை முழுங்கி விட்டு, வழக்கம்போல ஒரு மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு காய்கறி வாங்க கிளம்பினேன்.இது மாதிரியான சமயங்களை , புத்தகங்கள் வாங்குவதற்கும் நான் பயன் படுத்திக் கொள்வது வழக்கம்.ஆனால் என் பொண்டாட்டிக்கு புத்தகங்கள் அறவே பிடிக்காமல் போனதற்கு காரணங்கள் உண்டு ! புத்தகங்கள் ,இடம் அடைப்பவை, தூசி உண்டாகக் கூடியவை என்பாள் ! அதனால் கிளம்பிக் கொண்டிருக்கும் போதே, "இன்னைக்கு வெறும் காய் கறி மட்டும் வாங்கிட்டு வாங்க , ஏற்கனவே மதனோட புக்ஸ் வைக்கறதுக்கே இடமில்ல , மதன் விளையாடக் கூட இடம் பத்த மாட்டேன்குது " என்று கத்தினாள் ! மதன், என் ஆறு வயது மகன் . "சீக்கிரம் வரப் பாருங்க - நீங்க வந்தப்புறம் தான் சமையல் செஞ்சு சாப்டனும். மதன் இன்னும் எழுந்திரிக்கல . எழும்போதே பசியோடதான் எழுந்திருப்பான்" - இது, வீட்ட விட்டு கிளம்பும் போது !



நான் வழக்கமாக செல்லும் , பழைய புத்தகக் கடைக்கே சென்றேன். புன்முறுவலுடன் என்னை வரவேற்று , புதிதாக வந்த பழைய புத்தகங்களை காட்டினார்.நான் போன வாரம் இதே கடையில் வாங்கின "Basics of Cryptology" என்ற புத்தகம் சற்று நன்றாக இருந்தது. எனவே, அது சம்பந்தமான வேறு புத்தகம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு முடிக்கும் முன்பாக, நான்கு புத்தகங்களை நீட்டினார். அவற்றுள் இரண்டை எடுத்துக் கொண்டு, 50 ரூபாயை கொடுத்து விட்டு நகர்ந்தேன்.



நான் வாங்கிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு .கண்ணகி சிலையருகே ஒரு ஓரமான இடம் தேடி ,ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம் என்று நினைத்து, ஒரு பாக்கெட் காரப் பொரியுடன் அமர்ந்தேன்.அந்த புத்தகத்திலிருந்து ஒரு PRINTOUT நழுவி கீழே விழ்ந்தது.எடுத்து பார்த்தால்- யாரோ - யாருக்கோ அனுப்பிய E Mail அது. வழக்கமான நலம் விசாரிப்புகள் ஏதுமின்றி, இரண்டே வரிகளில் இருந்தது .


18 DUCKS WILL SAIL AND REACH YOU IN A WEEK. 4 FOR W/O SHAHJAHAN ON THE EAST COAST. 5 FOR PEACOCK TEMPLE. 9 FOR LORD NEAR THE NARROW LANES ON BEACH. ROSES KEPT UNDER FLYING TRAIN. LET'S REPEAT WEST COAST.
REGARDS,
INDIAN FRIEND


பார்பதற்கு ஏதோ , விளையாட்டான விடுகதை போல இருந்தாலும், உள்ளே ஏதோ "உள்குத்து" இருப்பது போல தோன்றவே, மீண்டும் ஒருமுறை கூர்ந்து வாசிக்கலானேன்.



போன வாரம் படித்த "Basics of Cryptology" யும் , எனது சிறு மூளையும் கொஞ்சம் செயல் படத் தொடங்கின. என்னுடைய ஆராய்ச்சியின் வாயிலாக, அந்த E மெயில் ஐ , மொழி மாற்றம் (!) செய்த போது கிடைத்த செய்தி , எனக்கு பேதி வருவது போன்று ஒரு உணர்வை உண்டாக்கியதில் ஆச்சர்யமில்லை !


18 TERRORISTS ARE BEING SENT. 4 WILL SEIZE THE TAJ COROMANDEL HOTEL (W/O
SHAHJAHAN = TAJ; EAST COAST = COROMANDEL). 5 WILL SEIZE THE MYLAPORE TEMPLE  (PEACOCK TEMPLE). 9 WILL SEIZE THE SANTHOME CHURCH (LORD NEAR THE NARROW ROAD OF SANTHOME) .

!!!!!!!!!!!!!????????????!!!!!!!!!!!!!!!!!!!!



" பொறுத்தது போதும் - பொங்கிஎழு " என்று நானே சொல்லிக் கொண்டு , இதன் அவசரத்தை உணர்ந்தவனாய், அருகிலிருக்கும் காவல் நிலையத்தை நோக்கி, நடக்க , இல்லை, ஓட ஆரம்பித்தேன். என் மனதுக்குள், "வேட்டை ஆரம்பமாயிடுச்சி டோய் " என்று தோன்றியதை வெளியில் சொல்லாமல், அப்போதுதான் ரோந்திலிருந்து வந்திருந்த இன்ஸ்பெக்டரை அணுகினேன். நடந்த எல்லாத்தையும் கேட்டு , பின்பு ஒரு கான்ஸ்டபிளை என்னுடன் அனுப்பி, அந்த புத்தகக் கடைக் காரரிடம் விசாரிக்கச் சொன்னார். போலீசுடன் என்னைப் பார்த்த அவர், சற்றே பயந்தது போல நடித்து , அந்த புத்தகம் எங்கிருந்து வந்ததென்பதை கூறினார். அந்த இடத்திற்கு நங்கள் மூவரும் போன போது ,மணி மதியம் 12 . நங்கள் சென்று சேர்ந்த இடம் , ஒரு குடிசை ! நானும், கடைக் காரரும் கொஞ்சம் தள்ளி நிற்க, கான்ஸ்டபில் மாட்டும் குடிசையை அணுகி, கட்டப் பட்டிருந்த திரையை விலக்கி, உள்ளே எட்டிப் பார்த்தார். திரும்பியவரின் முகத்தில், ஆயிரம் அதிர்ச்சி அலைகள் !



கான்ஸ்டபில் மெதுவாக எங்கள் காதருகே வந்து பேசினார் - "சார் , பிரச்னை வேற மாதிரிப் போகுது சார் ! " .அவர் எங்கள் இருவரையும் இங்கேயே இருக்கச் சொல்லி விட்டு , அவசரமாக உயரதிகாரிகளுக்கு சொல்வதற்காக விரைந்தார். எங்களுக்கோ , பயம்.சரியாக 40 நிமிடங்கள் கழித்து , ஒரு TATA SUMO வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஆறு பேரில், ஒருவர் எங்களுடன் வந்த கான்ஸ்டபில் ! மற்றவர்களும் போலீஸ்தான் என்பதை புரிந்து கொள்வது எனக்கு கடினமானதாக இல்லை! அவர்கள் அந்த குடிசையை சூழ்ந்து கொண்டார்கள். அந்த கான்ஸ்டபில் என்னருகே வந்து "சார், நாம ( ! ) ஒரு பெரிய OPERATION ல இருக்கோம். எங்கயும் போயிடாதீங்க - கமிஷனர் உங்களை பார்க்கணும்னு சொல்லியிருக்கார் ! " என்று முனகி விட்டுப் போனார்.




எனக்கு ஆபரேசன் னாலே அலர்ஜி. அவர்கள் அந்த குடிசையை நோக்கி சரமாரியாக சுட்டதில், ஐந்து நிமிடங்கள் போர்க்களத்தில் இருப்பது போன்று தோன்றியது எனக்கு. (இந்து வரை போரை படத்தில் தான் பார்த்திருக்கிறேன் என்பது வேறு விஷயம் !) . கந்தலாகிப் போன குடிசைகளுக்கு இடையில் , ஏராளமான துப்பாக்கிகள் , வெடிகுண்டுகள் இருந்தன. இரண்டு வாலிபர்கள் இறந்து கிடந்தார்கள். சம்பவ இடத்திலிருந்து , காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு என்னையும் கமிஷனரோடு ஏற்றிக் கொண்டு சென்றார்கள், அங்கே பத்திரிக்கை நிருபர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். செய்தி சேனல் காரர்கள் , என்னுடைய பேட்டியையும் LIVE ஆக ஒளிபரப்பினார்கள் !



எல்லாம் முடிந்து ,நான் என் வீட்டிற்கு போகும் போது மணி - மதியம் 3 ! உள்ளே நுழையும் போதே, மதன் "அப்பா ! டிவி...." என்று என் காலைக் கட்டிக் கொண்டு கொஞ்சினான். "18 பேர் கொண்ட தீவிரவாதக் கும்பல் கடலூர் அருகே படகுடன் பிடிபட்டனர் . அவர்கள் திட்டமிருந்த மூன்று தாக்குதல் சதிகள் , ஒரு IT ENGINEER இன் சமயோசித நடவடிக்கையால் முறியடிப்பு !!! ". மதனை தூக்கி வைத்துக் கொண்டு , என்னுடைய பேட்டியை டிவி யில் பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்து என் மனைவி என்னையும் டிவி யையும் மாற்றி மாற்றி முறைத்துக் கொண்டே கூறினாள் -



"நான் சொல்ற எதையுமே கேக்காதீங்க - கொண்டு போன வெறும் பையோட வந்திருக்கீங்க ?! நானும் மதனும், மதியம் BREAD தான் சாப்டோம் !!"



என் அப்பா அடிக்கடி சொல்லுவார் - " எந்த புருஷனும் பொண்டாட்டிக்கு ஹீரோ இல்லை " னு !! நீங்க என்ன சொல்றீங்க ?!?!


பின்குறிப்பு :
இது எனக்கு மெயில் - இல் நண்பன் அனுப்பியதாகும்.
என்னால் முடிந்த அளவுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறேன்.வேறு யாரவது மொழி பெயர்க்க ஆசைப் பட்டால், அந்த ஆங்கிலக் கதையையும் பதிவிடுகிறேன் அல்லது மின்னஞ்சல் செய்கிறேன்.

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...