Saturday, September 26, 2009

எத்தனை நாளாச்சு...?




எத்தனை
நாளைக்குத்தான் தியரி மட்டும் எழுதுறது...?
சும்மா ஒரு தடவ, போயம் - உம் ட்ரை பண்ணலாம் என்ற நப்பாசையில் இந்த பதிவு.
அதாங்க - கவிதை எழுதி பாக்கலாமுன்னு... (என்ன கொடும சரவணன் இது..?)

முன் குறிப்பு : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் இந்த கவிதையை படிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


எத்தனை நாளாச்சு ..? (தலைப்பாமாம்.!)
-----------------------------------------------

எத்தனை நாளாச்சு...?
சைக்கிள் ஓட்டி..

எத்தனை நாளாச்சு ...?
மாலை மழையில் நனைந்து...

எத்தனை நாளாச்சு ...?
வானவில் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
அண்ணாந்து விமானம் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வீட்டில் லாந்தர் ஏத்தி...

எத்தனை நாளாச்சு...?
ஒலியும் ஒளியும் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வானொலி செய்தி கேட்டு...

எத்தனை நாளாச்சு...?
சென்னைக்கு வந்து...

(இன்னும் என்ன எதிர் பார்க்கறீங்க..? அவ்ளோதான்,கவிதை முடிஞ்சது !
ஒரு ஊர்ல ஒரு நரி , இதோட கவிதை சரி. )

பின் குறிப்பு: பின் குறிப்பு வரை படித்த தைரிய சாலிகளுக்கு ஒரு சவால்.முடிந்தால் இன்னொரு தடவை இந்த கவிதையை(!) படிக்கவும்.

Wednesday, September 16, 2009

கலைஞர்-க்கு அண்ணா விருது





கடந்த சனிக் கிழமையன்று நானும் என் நண்பனும் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தோம் . முதலமைச்சர் கலைஞர், அண்ணா விருது பெற்றதை அடுத்து அதற்கு காரணம் என்ன என்று ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள்.

கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதால் என்று தென்னவனும்,
ஏழைகளுக்கு உதவுவதால் என்று அமைச்சர் பொன்முடியும்,
பேச்சாற்றலால் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும்,
எழுத்தாற்றலால் என்று கவிபேரரசு வைரமுத்துவும்,
பகுத்தறிவுதான் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசாவும்,
இன்னுமோர் தலைப்பில் சுப.வீரபாண்டியனும் பேசினார்கள்.


கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.
இந்த கருத்தரங்கத்திற்கு கவிஞர் வாலி நடுவராக இருந்தார்.
இந்த வயதிலும் வாலியின் கவிதை வரிகள் வசீகரிக்கவே செய்கின்றன.

அவர் சொன்ன கவிதையில் இருந்து சில வரிகள்.

...
கலைஞர் -க்கு அண்ணா விருது.
அண்ணாவுக்கு..? கலைஞரே விருது !

வந்தவர்களுக்கெல்லாம் வாரி கொடுப்பதால் இது கொடை நாடு.
கொட நாடு ? (சில நொடிகள் மௌனம்....)
கொட நாடு .... அது கொடா நாடு !
......



எல்லாம் சரி ....
கருத்தரங்கத்தின் ஆறு தலைப்புகளோடு இன்னும் சிலவற்றை சேர்த்திருக்கலாம்
என்றெனக்கு தோன்றியது.

விருது கொடுப்பது தி . மு . க என்பதால்,
தி . மு . க விற்கு தலைவர் கலைஞர் என்பதால்...


Friday, September 11, 2009

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில்.



இன்று தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.
ஏன் ?சொன்னால் நம்ப மாட்டீர்கள்

(அப்புறம் எதுக்கு சொல்றன்னு கேக்கறீங்களா . வேற என்ன பண்றது. ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சி . எதையாச்சி எழுத வேணாமா? .ஒரு போஸ்ட்க்கு டாபிக் கெடைக்கறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி பாத்தாதான் தெரியும் !)

இன்றுதான் அரசி (செல்வியின் இரண்டாம் பாகம்) மெகாத் தொடர் முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக சுபம் போட்டார்கள் (இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் சுபம்).வரும் திங்கட் கிழமை முதல் அடுத்த அபத்தம் ஆரம்பம். செல்லமே என்ற புதிய மெகாத் தொடர் போடப் போகிறார்கள்.

அதிலும் ராதிகா வுக்கு தொல்லை கொடுப்பதேற்கே யாராவது வில்லன்களும், பாழாய்ப்போன விதியும் வரும். அதையெல்லாம் பல வருடங்களில் எப்படி தாண்டி வருகிறார் என்பதுதான் கதையாக (!) இருக்கும்.

அதெப்படி இவ்ளோ கரெக்டா சொல்றேன்னு பாக்கறீங்களா?
சற்றேறக்குறைய எல்ல தமிழ் மெகாத் தொடர்களிலும் இதுதான் கதையாகக் கொள்ளப் படுகிறது.இப்போது இந்த மாதிரியான தொடர்களிலும் சண்டை,பாட்டு எல்லாம் போடுகிறார்கள்.

இந்த வகையில் விஜய் டிவியும் மக்கள் டிவி, சாரி மக்கள் தொலைக்காட்சியும் கொஞ்சம் பரவாயில்லை.


Friday, August 28, 2009

இருள் ...





(இந்த பதிவை ஏற்கனவே வேறு எங்கேனும் படித்த ஞாபகம் இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
நான் படித்த படைப்புகளின் பாதிப்புகள் ( !? ) இருக்கக்கூடும் .)

இருளானது தண்ணீரைப்போல் தனது இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடியது.

பால்யத்தின் மாலை நேர இருள் கூடி விளையாடவும் , மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் இருந்திருக்கிறது.பதின் பருவ , மின்சாரமில்லா முன்னிரவின் இருள் பயம் மிகுந்ததாக இருந்திருக்கிறது.அது கையில் ரேகை படர்ந்திருப்பதைப் போல பயத்தை ஊரங்கும் படரவிடக் கூடியது.கல்லூரிக் கால பின்னிரவுகளின் இருள் அரட்டைகளுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது.

இருளானது சோகம், சந்தோசம், நட்பு, துரோகம், காதல், மோதல், அன்பு, ஆக்ரோஷம் அனைத்தையும் இரட்டிப்பாகக் கூடியது. இருள், உணவுகளின் சுவையை மாற்றக் கூடியது, மனிதர்களையும் கூடத்தான் இல்லையா?

மாநகர வாழ்க்கையின் எமெர்ஜென்சி விளக்குகளில் நாம் இருளை இழந்து கொண்டிருக்கிறோம். இப்போதைய மாநகர குழந்தைகள் இருளுக்கும் இயற்கைக்கும் அந்நியர்கள்.

எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு படைப்பில் படித்துதான் ஞாபகம் வருகிறது .
ஒரு மாநகர் வாழ் குழந்தை கழுதை - யையே நேரில் பார்த்ததில்லை என்றும் அதனை பார்ப்பதற்காக அந்த குழந்தையும் அதன் தந்தையும் வெகு தூரம் தேடி அலைவதாகவும் நீள்கிறது அந்த கதை.

ஆம், நம்மில் எத்தனை பேர் சென்னையில் கழுதைகளை (நான் சொல்வது நான்கு கால் கழுதைகளை ) பார்த்திருக்கிறோம்?


Saturday, August 15, 2009

சுதந்திர தினம்.





கிட்டத் தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின விழா ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த சுதந்திர தினத்தன்று கிடைத்தது.கடைசியாக பத்தாம் வகுப்பு படிக்கும் போது கலந்துகொண்டது.

தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வதும் இதுதான் முதல் முறை. விழாவிற்கு வந்தவர்களில் பலரது நோக்கமே கொடியற்றத் தில் இல்லாமல் வி பி க்களை பார்ப்பதில் தான் இருந்தது.(நானும் எனது நண்பனும் கூட அதற்குத்தான் போயிருந்தோம்!)

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் காம்பியரிங் (இதற்கு தமிழில் என்ன வார்த்தை உபயோகிப்பது?) கேட்ட திருப்தி.அதிலும் ஒவ்வொரு வாக்கியத்திற்க்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தார்கள்(என்னுடன் வந்த நண்பன் மேஜர் சுந்தர் ராஜனை ஞாபகப்படுத்தினான்.)

முதல்வர் உரையில் அவர் ஆட்சியின் சாதனைகளே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன.இறுதியில் அனைவருக்கும் சங்கீதா ஹோட்டலில் இருந்து சிற்றுண்டி கொடுத்தார்கள்.எப்படியும் 30 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும்.

குடியரசு தினத்தன்று வந்த கூட்டத்தில் பாதி கூட இருக்காது.
வந்தவர்களில் பெரும்பாலோனோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள் போலும்.போன வாரம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.(பில்ட் அப் கே வா?)


Monday, August 10, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர்..





தற்போது விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் டூ -வை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நல்ல நிகழ்ச்சி.

தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை முதல் முறையாக ஒளிபரப்பியது விஜய் டிவி தான். அதைப் பார்த்துதான் மற்ற தொலைக்காட்சிகள் பல நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றன.
(ஆனால் விஜய் டிவி மற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில சேனல்களை பார்த்து சில நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது !)

ஆனால் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய குழந்தைகளின் ரிசல்ட் சொல்லும் முறை சற்று மாற்றியமைக்கப் பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிள்ளைகளின் முகத்தில் அறைந்தது போல 'ரிஜக்டட் ' என்று சொல்வதற்கு பதில் வேறு முறைகளில் அறிவிக்கலாமே! பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் , என்றோ ட்ரை அகைன் என்றோ.

Friday, August 7, 2009

நாடோடிகள்....





கடந்த வாரம் திருவான்மியூர் - இல் நாடோடிகள் படம் பார்த்தேன்.
வழக்கமாக நானும் என் நண்பனும் போவோம்.ஆனால் அவன் ஊருக்கு போனதால் நான் மட்டும் தனியாக போனேன்.

நாற்பது ரூபாய் டிக்கெட் .
என்னை பொறுத்த வரை சமுத்திரக்கனியை நல்ல நாடக இயக்குனராக தான் அறிந்துள்ளோம்.(அவருடைய உன்னை சரணடைந்தேன் படம் இன்னும் பார்க்க வில்லை.)

தமிழ்த் திரையுலகில் இப்போது நல்ல படங்களின் காலம் போலும்.
வாழ்த்துக்கள் சமுத்திரக்கனி.இந்த படத்தின் இசை அமைப்பாளர் சுந்தர் சி பாபு வுக்கு ஒரு நல்ல அடையாளம்.படத்தின் பல வசனங்களுக்கு அரங்குகளில் கைதட்டல் பறக்கிறது, வசனங்களின் கூர்மை திரையை கிழிக்கிறது .

யாரவது கம்பெனி க்கு கூப்பிட்டால் இன்னொரு முறை கூட பார்க்கலாம்.


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...