Wednesday, August 31, 2011

அமெரிக்காவின் கடன் பிரச்சனைக்கு தீர்வு இதோ ! (நகைச்சுவைக்காக மட்டும் !)

 டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும்.

அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பார்களே.. அது போல அமெரிக்காவில் பொருளாதார பிரச்சினை வந்தால், உலகம் முழுவதும் திகிலடிக்கிறது. லோன் போட யோசிக்க வேண்டியிருக்கிறது. டீலக்ஸ் BUS ஐ, விட்டு விட்டு LSS BUS க்காக காத்திருக்கிறார்கள்.  அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் IT ஆசாமிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. என்ன வாழ்க்கைடா இது என்கிறார்கள்.



எதுக்கு இவ்வளவு கஷ்டம் ?!

இத்தனைக்கும்  நாம் பதிவெழுதும் இந்த தளம் ஒரு அமெரிக்க கம்பெனி தானே நமக்கு கொடுத்தது ?! ஒரு நன்றிக் கடனாக , அமெரிக்க கடன் பிரச்சினைக்கு தீர்வு  சொல்வது நம் கடமை இல்லையா ?

 இதோ, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எங்கு கடன் பிரச்சினை இருந்தாலும் , அதற்கு ஓர் அருமருந்து ! 



நன்றி புகைப்பட உதவி :
http://www.financialfacts.org/wading-through-the-recession-tips-and-advice/
http://allkavach.com/products-shri-dhan-laxmi-yantra-23.aspx

ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் !


 அமெரிக்க பதிவர்கள் யாராவது வாங்கி, வெள்ளை மாளிகையில் கொடுங்களேன் !

உடனே சமஸ்தானத்திற்கு போன் செய்யவும் !



Sunday, May 22, 2011

கனவுக் கவிதை (யாமாம் !)...

 கனவுக் கவிதை (யாமாம் !)



நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/

காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...
கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...

ஆங்காங்கே சில மனிதர்கள்...
அவர்களும், காக்கைகளால்  சுற்றி வளைத்து 
தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...

ஒரு தாய் பென்குயின் , 
தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...

பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க, 
மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...

ஆங்காங்கே கிடந்த ராட்சத  பறவைகள், அவைதம் சிறகுகளென
பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...

தங்கள் வீட்டு காம்பவுண்டில், 
சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...

குழம்பு சோறு முடித்துவிட்டு, 
மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த  போது,
"வேணுங்கறத  எடுத்துக்கோ" என்றதோர்  கிழட்டுக் காக்கை...





டிஸ்கி :
என் கனவில் வந்த காட்சிகள் இவை.

Thursday, May 5, 2011

அக்ஷய திருதியை சிறப்புக் கவிதை (யாமாம் !)




                      நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html


அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால்,
வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று,
எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,
நகைக் கடை வரிசையில்!


===========================================================================


                    நன்றி : புகைப்பட உதவி - http://flickrhivemind.net


அதிகாலையில் இருந்தே,
ஒரு எறும்பும், நானும்,
உன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கோலம் போட,  நீ அரிசி மாவை எடுத்துக் கொண்டு வருவாய் என்றும்,
கோலம் போட, அரிசி மாவை எடுத்துக் கொண்டு நீ வருவாய் என்றும் !



Tuesday, May 3, 2011

உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)

டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
=========================================================================
   
                                      நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in

நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை  அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.



























கதை அவ்வளவுதான் ! 


"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?! 










நானும் , குமாரும் வைத்திருந்த  பிணம், என் நண்பன் குமாருடையது !

=========================================================================
டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !



Saturday, March 26, 2011

2016 - தேர்தல் அறிக்கை இதோ... (பதிவர்களுக்கு பரிசு மழை !)

நமக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கும் நம்ம அரசியல் கட்சிகளுக்கு, நாம ஏதாவது செஞ்சிருக்கோமா ?! ன்னு யோசிச்சு பார்த்தப்ப தான், சரி இந்த தேர்தலை விட்டுடுவோம். வரப்போற 2016 சட்டமன்ற தேர்தலுக்கு , நானே ஒரு அறிக்கை தயார் பண்ணி குடுக்கலாம்னு ! நம்மாலான சிறு உதவி !

( முழுவதும் நகைச்சுவைக்காகவே ! யார் மனதையும் புண்படுத்த அல்ல ! )


# ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு, ஒரு பாடத்திற்கு  60 இலவச மதிப்பெண்கள் வழங்கப்படும்.

# ஒரு ஓட்டுனர், ஒரே வழித்தடத்தில் 10 வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை ஓட்டியிருந்தால், அந்த பேருந்தை அவரே வைத்துக் கொள்ளலாம். ( உபயம் - உடன் பணி புரியும் நண்பர் )

# ஒரு குடும்பம் 5 வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அந்த வீடு அவர்களுக்கே வழங்கப் படும் (நாமளும் எவ்ளோ நாள்தான் வாடகை வீட்லயே இருக்கிறது ?!). வீட்டு ஓனர் விருப்பப்பட்டால்  , 15 லட்ச ரூபாய்  (வாடகை தாரருக்கு ! ) செலுத்தி அந்த வீட்டைத் திரும்பப் பெறலாம்.

# ஒரு பதிவர் நூறு பதிவுகளுக்கு மேல் எழுதி, ஒன்றுமே பரவலாக பேசப் படவில்லை என்றால், ரூபாய் . 50 மட்டும் செலுத்தினால்  போதும் - தெருவுக்குத் தெரு அவரின் பதிவுகள் போஸ்டர் அடித்து ஒட்டப் படும். போஸ்டர் செலவை அரசே ஏற்கும். 100 ரூபாய் செலுத்தினால், தொலைக் காட்சிகளிலும் , திரை அரங்கங்களிலும் காண்பிக்கப் படும்.

# தெருவிற்கு ஒரு 'அரசு ATM மெசின்' நிறுவப் படும். பொது மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளை SWIPE செய்து, மாதம் ருபாய் 10000 பெற்றுக் கொள்ளலாம்.

 நன்றி - புகைப்பட உதவி : http://www.travel247.tv/india/tourist-guide/indian-money

# பொது மக்களின் பொழுது போக்கிற்காக, அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஒரு கடற்கரை ஏற்படுத்தப் படும்.அவை , திங்கள் - முதல் வெள்ளி வரை காலை 4 மணிமுதல் இரவு 2 மணி வரை யும், ஞாயிற்றுக்க் கிழமைகளில், 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

# ஒருவர், ரயில் பயணத்தை  முடித்து விட்டு , அவருடைய பயணசீட்டை காட்டினால், பயணக் கட்டணத்தின் இரண்டு மடங்கு பணம் இலவசமாக வழங்கப் படும்.

# டெல்லியில் இருந்து நமக்கு வரவேடிய அதிகாரங்களை , நடுவில் இருக்கிற மாநிலங்கள் பிரித்துக் கொள்வதால், தமிழகத்தை டெல்லிக்குப் பக்கத்தில் மாற்றுவதற்கோ , அல்லது டெல்லியை தமிழகத்திற்கு பக்கத்தில் மாற்றுவதற்கோ முயற்சி மேற்கொள்ளப் படும் ( உபயம் - வடிவேலு காமெடி ).

# எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காள நண்பர்களே , நீங்கள் ஒவ்வொருவரும், தலா இரண்டு ஓட்டுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப் படும்.


                        நன்றி - புகைப்பட உதவி :http://www.secwhistleblowerprogram.org

# இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, (உதாரணத்திற்கு) உங்கள்  வீட்டில் இரண்டு குழந்தைகள் 10 , மற்றும் 8 வயதுகளில் இருப்பார்களே யானால், அவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஓட்டாக கணக்கில் கொள்ளப் படும்.


(இந்த தேர்தல் அறிக்கைக்கு  காப்புரிமை பெறலாமென்று இருக்கிறேன் ! 2016  இல்  நல்ல விலை போக வாய்ப்பிருக்கிறது !)



Saturday, March 19, 2011

எலெக்சன்னா உங்களுக்கு என்ன அவ்வளவு காமெடியா போச்சா ?!

நம்ம தேர்தல் அறிக்கைதான் நாம தோக்கறதுக்கு காரணமா இருக்கப் போகுது !
ஏன் அப்புடி சொல்ற ?!
பின்ன என்ன, தலைவர் - 'நாங்க ஆட்சிக்கு வந்தா, வீட்டுக்கு ஒரு சின்ன வீடு தருவோம்' னு தேர்தல் அறிக்கை வெளியிடறார் !

#####################################################################################

'அன்பான வாக்காளர் பெருமக்களே , மாற்றுக் கட்சி வேட்பாளர் மொத்தம் ஆறு கொலைகள் செய்திருக்கிறார் ! ஆனால், எங்கள் கட்சியின் வேட்பாளர் வெறும் இரண்டு கொலைகள் மட்டுமே செய்திருக்கிறார்! ஆகவே நீங்களே சிந்தித்துப் பாருங்கள் , இருவரில் யார் நல்லவர் என்று !'


நன்றி - புகைப்பட உதவி : http://www.intell.rtaf.mi.th/newsdetail.asp?id=51010


#####################################################################################
 
தலைவர்க்கு இருந்தாலும் இவ்வளவு அவசரம் கூடாது!
ஏன் என்ன ஆச்சு ?!
தமிழ்நாட்டு சட்டசபைக்கு மொத்தம் 330 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை  அறிவிச்சுட்டார் !

Saturday, February 26, 2011

சச்சின் டெண்டுல்கருக்கு (மீண்டும்) ஒரு பகிரங்கக் கடிதம்...

(மீள்பதிவு)
 அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,



        இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான  உங்கள்  ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது  நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு  உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத  ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL  விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே  போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.



அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி  சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப்  பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் -  உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !



ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011  இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய  மக்கள் காத்திருக்கிறார்கள் !



 2011 நம்ம கையிலே,  சந்திப்போண்டா  தோழா நாம WORLD CUP ல !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...