Sunday, June 27, 2010

ராவணனும் பிரின்ஸ் ஆப் பெர்சியாவும்...

ஏன்...?
ஆமா...!
நெஜமாவா ?!
நீ என்ன  நம்பல ?!
எப்படி ?!
நேத்திக்குதான் !!
எத்தன பேர் ?
நான் மட்டும்தான் !
எவ்ளோ ?
45 ரூபா !
எங்க ?
தியாகராஜா !


என்னங்க எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
ஆமாங்க நேற்றைக்குதான் மணி ரத்தினத்தின் 'ராவணன்' படம் பார்த்தேன். அதைதான் , அவர் 'பாணியில்' சொல்ல 'ட்ரை' பண்ணேன் ! நீங்க டென்சன் ஆகாம மேலே ( அதாவது , 'கீழே' !) படிங்க !

'ஆக்சுவலா' (!) நான் போன வாரமே 'ராவணன்' பார்க்க போனேனுங்க ! அங்க என்னடான்னா, டிக்கட் இருந்தாதான் தியேட்டர் உள்ளயே உடுவேன்னுட்டானுங்க ! "போங்கடா நீங்களும் உங்க ராவணனும்" ன்னுட்டு, அப்படியே ரோடை கிராஸ் பண்ணி , நம்ம 'ஆஸ்தான' தியேட்டரான ஜெயந்தி தியேட்டருக்கு போய் , 'பிரின்ஸ் ஆப் பெர்சியா (தமிழில்)'  பாத்துட்டு வந்துட்டேன்! ராவணன் போயிட்டு புறமுதுகிட்டு வந்ததுல , ஒரு 20 நிமிஷம் MISS பண்ணிட்டேன் ! அந்த படத்துக்கே விமர்சனம் எழுதனும்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன் ! ஆனா, படத்துல ஒருத்தர் பேரும் தெரியாததால, 'பிரின்ஸ் ஆப் பெர்சியா' தப்பிச்சது ! மொத்ததுல, படம் அமர்க்களம் !



சரி , நம்ம ராவணன் பக்கம் வருவோம் ! என்னுடைய  'கொள்கைப்' படி, எந்த விமர்சனமும்  இதுவரை படிக்க வில்லை , யாரிடமும் கதையும் கேட்க வில்லை! என் விருப்பப் படி, படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே போய் உக்காந்தாச்சு !
( எனக்கெல்லாம், 'WELCOME' , 'முன் இருக்கையில் கால் வைத்து அசுத்தம் செய்யாதீர்' , 'புகை பிடிக்காதீர்', 'அரங்கை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் ' என்று SLIDE போடுவதிலிருந்து படம் பார்த்தால்தான் ஒரு திருப்தி !  இவையும் ஒரு படத்தின் அங்கமாகத்தான் பார்க்கிறேன் நான் !)

இதற்கு முன் , நான் தியேட்டரில் பார்த்த ஒரே மணி ரத்தினம் படம் - 'ஆய்த எழுத்து '!  அந்த படத்திற்கும் நான் போன போது கூட்டம் இல்லை! கடந்த வாரம் தியேட்டருக்கு உள்ளேயே போக முடியாத படிக்கு கூட்டம் ! இந்த வாரம் , பாதி தியேட்டர் காலி! ஏன் இந்த வித்தியாசம் ?! இணையமும் , VCD இணைத்து செய்யும் மாயமிது ! படம் வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே, அல்லது வெளியிட்ட நாளன்றே இணையத்தில் காணக் கிடைக்கின்றன அத்துணைத் திரைப்படங்களும் ! ( சில சமயங்களில் வெளியிடுவதற்கு முன்னமே ! )

இதையெல்லாம் தாண்டி இரண்டாவது வாரமும் கூட்டம் வர வேண்டுமென்று சொன்னால் ,படத்தின் விமர்சனங்கள் இந்த இடத்தில் முக்கிய பங்காற்றுகின்றன ! எதிர்மறையான எந்த ஒரு விமர்சனமும் படத்தின் வெற்றியை பெருமளவு பாதிக்கக் கூடும் !





இரண்டு வருடங்களாக பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம்.தமிழிலும் இந்தியிலும், விக்ரமும், அபிஷேக் பச்சனும் தங்களுடைய கதாப் பாத்திரங்களை மாற்றி நடிக்கிறார்கள் என்று பேசப் பட்டிருந்தாலும், தமிழில் அபிஷேக் நடிக்கவில்லை ! இந்தியில் விக்ரம் இருக்கிறாரா என்றும் தெரிய வில்லை ! ( யாராவது RAVAN பார்த்திருந்தா சொல்லுங்க ).
அதிரடியான இசையுடன் (வீரா வீரா !) பெயர் போட ஆரம்பிக்கிறார்கள் ! 'கந்தசாமி' எதிர்பார்த்த வெற்றி அளிக்காததால், விக்ரம் இந்த படத்தினை மிகவும் எதிர்பார்த்திருப்பார் ! நாமும்தானே ?! எதிர்பார்த்ததை கொடுத்திருக்கிறார் , மணி ரத்தினம் விக்ரமிற்கும், விக்ரம் நமக்கும் !


ஐஸ்வர்யா ராயை பார்க்கும் போது, ஏதோ இந்திப் படம் பார்க்கும் 'பீலிங்'  ! அவர் பேசும் தமிழும் ஒட்டவில்லை ! இந்தியில் பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ! ( எந்திரன் என்ன செய்யப் போகிறார் ?! ) பழைய மணிரத்தினம் ஹீரோக்களான , கார்த்தி , பிரபுவும் நடித்திருக்கிறார்கள் ! படம் முழுவதும் காட்டுப் பகுதியில் தான் ! அதற்கேற்றவாறு ஒளிப் பதிவில் அசத்தியிருக்கிறார்கள் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் ! கலை இயக்குனருக்கு சற்று சவாலான வேலைதான் ! சமாளித்திருக்கிறார் ! கொச்சியில் இருக்கும் என் நண்பனொருவன் , அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு போன போது, அந்த கோவில் செட் - ஐ பார்த்ததாகவும், மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும்  சொன்னான்! நானும் படம் வெளிவருவதற்கு முன்னரே  புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன் !



வசனங்கள் - சுஹாசினி. படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் வசனங்கள் என்னவென்று புரியவில்லை! காரணம் அவரா , அல்லது ஒலிப் பதிவா, இல்லை தியேட்டர் ஸ்பீக்கரா, இல்லை நம்ம காதா என்று புரிவதற்குள் அடுத்தடுத்த  வசனங்கள் ! ஆனால் கொஞ்ச நேரம் கழித்து புரிய ஆரம்பித்து விடுகின்றன ! நடுவே வரும் ப்ரியாமணி செக்மென்ட்டில் மட்டுமே கொஞ்சம் காடுகளில் இருந்து வெளிவந்திருக்கிறது கேமரா !

இசை - A . R ரஹ்மான் ! வேறென்ன சொல்ல ?! சூப்பரப்பு ! ( இருந்தாலும் 'செம்மொழி' பாட்டு மாதிரி இல்லையே என்று சொல்லப் படாது !) ' உசுரே போகுது ' பாட்டு முழுவதுமாக வருவதில்லை போன்ற ஒரு தோற்றம் !

திரைக்கதை & இயக்கம்  - மணி ரத்னம். இவரின் ஓரிரு படங்களைத் தவிர மற்ற அனைத்திலும் எதாவது ஒரு உண்மை  சம்பவமோ , அல்லது இதிகாசமோ தான் "BASE LINE" ஆக இருக்கும் ! இந்த வகையில் , இப்படத்தின்  கதாப் பாத்திரங்கள், யாரைக் குறிக்கின்றன என்று ராமாயணம் அறிந்த அனைவரும்  எளிதில் ஊகிக்க முடியும் ! இருப்பினும் பெயர் போடும் போது , " இப்படத்தில் வரும் கதாப் பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல ! " என்றுதான் போடுகிறார்கள் !

எது எப்படி இருந்தாலும், 'படம் நல்லா  இருந்துச்சு ' என்று சொல்ல வைத்து விடுகிறார் மணிரத்னம் !

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ?! பிருத்விராஜ் ! கதா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்கிறார் ! வாழ்த்துக்கள் பிருத்வி !

Friday, June 18, 2010

கடந்த இடுகைக்கான விடைகள்...

கடந்த இடுகையில் , கேள்விகள்  மாதிரி இரண்டு கேட்டிருந்தேன். அதற்கான விடைகள்  இந்த இடுகையின் கடைசியில். முயற்சிக்க விரும்புபவர்கள் , அங்கே கொஞ்சம் போயிட்டு வந்துடுங்க !

*********************************************************************************************
நம் வாழ்க்கையில் பல நேரங்களில் , 'பேசாம, பள்ளிக் கூட பையனாகவே இருந்திருக்கலாம்' என்று தோன்றும் இல்லையா ? அது போன்று , கடந்த வாரம் எனக்கு தோன்றியது ! 'ஏன்?' என்கிறீர்களா ?


 " உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி , தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை " என்ற செய்திதான் அதற்கு காரணம் !

இந்த மாநாடு தேவையா, இல்லையா என்கிற வாத, பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும் ! இந்த மாநாட்டுக்காக வெளியிடப்  பட்டிருக்கும் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது ! பார்க்கவும் , கேட்கவும் !


********************************************************************************************

கேள்வி மாதிரி - 1 :


முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?
 கடைசி வாரம் - பாப்பர் வீக் !

கேள்வி மாதிரி - 2 :
லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?

' SEBI' யும் நானும்  ?!


பின் குறிப்பு : இது போன்று பல நகைச்சுவைகளை (!) நான் எழுதியதுண்டு. இனி வரும் காலங்களில் எனது இடுகைகளை அவை அலங்கரிக்கும்  என்பதை , மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் 'கொல்'கிறேன் !

Friday, June 11, 2010

தலைப்பில்லா இடுகைகள்... 06.06.2010

ஒரு அட !
கொஞ்ச நாட்களுக்கு  முன்னாடி என் தந்தை ஒரு விஷயம் சொன்னார்..
ஒரு மாதத்தின் நான்கு வாரங்களை எப்படி அழைக்கலாம் ?!



முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?

முடிந்தால் யூகித்துப் பாருங்களேன் ! விடை ( !) அப்புறம் .....

ஒரு ஒப்பீடு...
கடந்த மூன்றாம் தேதி, தமிழக முதல்வரின் 87 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது ! திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் மாபெரும் விழா எடுத்தார்கள். கிட்டத் தட்ட ஒரு வாரத்திற்கு அந்த வழியையே அடைத்து விட்டிருந்தார்கள் !
இந்த இடத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட நினைக்கிறேன் !

முதல் புகைப்படம்...
இந்த பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அடையார் இந்திரா நகர் பகுதியில் எடுத்த புகைப்படம் இது. நேரம் : இரவு  9 .30 மணி.


இரண்டாம் புகைப்படம்...
விழா முடிந்து , அரை மணி நேரம் கழித்து, திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் எடுத்த புகைப்படம் இது! நேரம் : 10 .00 மணி.



இது எப்படி இருக்கு ?! நோ கமெண்ட்ஸ்...

ஒரு நகைச்சுவை அல்லது கேள்வி ...



லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?
(டிஸ்கி : இந்த நகைச்சுவையை (!) கடந்த 2009  ஆம் ஆண்டு எழுதியது. இப்போது, "ரீமிக்ஸ் " செய்து  வெளியிடுகிறேன்.)

ஒரு தகவல்...
என்னுடைய வலைப்பதிவின் முதல் வாசகன் ( அடிக்கடி போன் பண்ணி , " BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா, BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா" னு  டார்ச்சர் பண்ணிதான் படிக்க வெச்சேன் !) , என் நண்பன் வேலை விஷயமாக வெளி நாடு சென்றிருக்கிறான் !  "அதுக்கு என்னா இப்போ ? " ன்னு கேக்கறீங்களா ?! இனி என் தளத்திற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகன் இருக்கிறான் !

ஒரு பொன்மொழி(யாமாம்!)..

ஒரு  விஷயம் உன் பெற்றோருக்கு தெரியக் கூடாதென்று  நீ நினைக்கிறாய் என்றால், நீ தப்பு செய்து கொண்டிருக்கிறாய் என்று  அர்த்தம்! 


ஒரு எதிர்பார்ப்பு...



சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது, தமிழக அரசியல் களம். அடிக்கடி, கண்டனக் கூட்டங்களும், பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. எனக்கு அரசியல் விவரம் தெரிந்து  (!) , நான் சந்திக்கும் முதல் சட்டப் பேரவை தேர்தல் வருகிற 2011  தேர்தல் தான் ! அதற்குள் எப்படியாவது, வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிட வேண்டும்!

 *************************************************************************************************

முதலில் எழுதிய "அட"  விற்கான விடையையும், நகைச்சுவைக்கான விடையையும் அடுத்த இடுகையில் வெளியிடலாம் என நினைக்கிறேன். தங்களின் விடைகள் வரவேற்கப் படுகின்றன ! நான் நினைத்த விடைகளை சரியாக கணிப்பவர்களுக்கு,


















எந்த பரிசும் தர இயலாது ! மன்னிக்கவும்.
(சங்கமே அபராதத்துலதான் போய்கிட்டிருக்கு !!) 
;)

Sunday, May 30, 2010

இப்போ உங்களுக்கு வயசு 13... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?

நிறைய தமிழ் படங்களில் பார்த்திருப்பீர்கள் ! கதாநாயகனையோ அல்லது வில்லனையோ சூழ்ந்து கொண்டு  ஒரு மன நல மருத்துவர்  தன் கையால்  காற்றில் வட்டமிட்டுக் கொண்டே, "இப்போ உங்களுக்கு வயசு 13 . இப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க ? " என்பது மாதிரியான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பார் ! அவ்வாறு , எனது  பால்யத்தை திடீரென்று ஞாபகப் படுத்திய ஒரு மின்னஞ்சல் இது. வெறும் புகைப் படங்களாகத்தான் வந்தது . அங்கங்கே , என்னுடைய 'கை வண்ணம்' ( வசனங்கள் தான் !)  கோர்த்து ( டேய் !) இங்கு வடித்துள்ளேன் ! (டேய் டேய் !!)

மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றிகள் !

 ******************************************************************************************************************

சில விஷயங்கள் , ஒரு புகைப்படம் போல மனதில் பதிந்து விடுகின்றன இல்லையா? அதுபோன்று நம்முடைய பால்யத்தில் நம் மனதில் பதிந்து, இப்போது புதைந்து போன சில விஷயங்களை ஞாபகப் படுத்தும் ஒரு முயற்சியாக இந்த இடுகை... (சூப்பர் பில்ட் அப்பு ! )

1 . மூன்றாம் வகுப்பு வரை ,என் பள்ளிக் கூட வாழ்கையின் முக்கிய குறிக்கோளே , ஒரு INK பேனா வாங்க வேண்டுமென்பதுதான் ! இதற்காக, பள்ளியில் கட்டாயப் படுத்துகிறார்கள் என்று பொய் கூட சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், எல்லோர் வீட்டிலும் INK பாட்டில் இருக்காது. நாங்களெல்லாம் , எங்கள் பள்ளிக் கூடத்திற்கு முன்னாடி இருக்கும் 'செல்லா ஸ்டோர்ஸ்' இல் , 10 பைசாவிற்கு BRIL INK நிரப்பிக் கொள்வோம். புதியதாக பேனா வாங்குபவர்களுக்கு INK இலவசம் !



2 . பள்ளிக் கூட ஆரம்ப  நாட்களில், புதியதாக வாங்கிய நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போட்டு, LABEL ஓட்டுவது ஒரு கலை ! எங்களூரில், 'ஜெயந்தி ஸ்டூடியோஸ்' இல் தரும் இலவச லேபில்களே என்னுடைய பெரும்பான்மையான அட்டைகளை ஆக்கிரமித்திருக்கும் ! எல்லாவற்றையும் ஓட்டுவது இந்த CAMEL GUM மூலம்தான் !



3 . CHEAP அண்ட் BEST என்றால், அந்த வயதில் ரெனால்ட்ஸ் பேனாதான் ! ஒரு பேனா வாங்கினால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாங்கும் ! (அப்போதெல்லாம், நான் இந்த அளவிற்கு 'எழுத்தாளன்' (!) இல்லீங்க ! ). அப்பிடி காலியானாலும், ரீபில்  மட்டும்தான் வாங்குவோம் ! பழைய BODY யை , அது  விரிசல் விட்டிருந்தாலும் , செல்லோ டேப் போட்டு ஒட்டி உபயோகிப்போம் !



4 . BALL POINT பேனாவிலிருந்து , INK பேனாவிற்கு மாறுவது ஒரு சந்தோஷமென்றால் , INK பேனாவிலிருந்து HERO பேனாவிற்கு மாறுவது அதைவிட சந்தோசம் ! உண்மையில், என் வகுப்பில் யார் HERO பேனா வைத்திருக்கிறானோ , அவன்தான் HERO !


5 .எங்கள் வீட்டில், வருடத்திற்கு ஒரு GEOMENTRY  BOX எல்லாம் வாங்கித் தர முடியாது !
ஒன்று வாங்கினால், அது அப்படியே 'அடுத்த வாரிசுக்கு' தரப் படும் ! எப்படியும் கணிதப் பாடத்திற்கு மட்டும் தான் தேவை என்பதால், இண்டர்வல்களிலும், உணவு இடைவேளைகளிலும் , மாற்றி மாற்றி உபயோகம் செய்வதும் நடக்கும். இப்போதும், ஏதாவது GEOMENTRY பாக்ஸ் பார்த்தால், அதை , 'கடித்துத்' திறந்தது ஞாபகத்திற்கு வருகிறது , அல்லது, கடித்துத்   திறந்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது !
மேலும் GEOMNTRY BOX என்றாலே அப்போது (இப்போதும் ?!)  NATRAJ தான் !



6 . நாம் பள்ளி வாழ்க்கையில் , பேனாவிற்கு நிகராக அல்லது அதிகமாக பயன் படுத்தியது  பென்சிலாகதான் இருக்க வேண்டும் ! என்னுடைய பால்யத்தில் , 1 ரூபாய்க்கு NATRAJ பென்சில் கிடைக்கும் ! NATRAJ பென்சில் சிகப்பும் கருப்பும் கலந்து இருக்கும் ! SHARPNER மூலம் சீவிய பிறகு இருக்கும் குப்பையை (?) எங்கள் புத்தகத்தில் சேமித்து வைப்போம் !


7 . என் பதின் வயதுகளில் , பள்ளிக் கூடமற்ற நேரங்களில் , என்னுடன் எப்போதும் இருப்பது  பக்கத்துக்கு வீட்டின் TAPE RECORDER தான்.எப்போதும், MGR தத்துவப் பாடல்களும், சிவாஜி சோகப் பாடல்களும் , 80 களில் வந்த இளைய ராஜா பாடல்களனைத்தும் ஒலித்துக் கொண்டிருக்கும்! நமக்கு தேவையான பாடல்களை கடைகளுக்கு எழுதிக் கொடுத்தால், பக்கத்திற்கு 6 பாடல்கள் என்று 12 பாடல்கள் பதிந்து தருவார்கள் !


8 . இதே போன்று VIDEO கேசெட். சுருக்கமாக 'டெக்' என்று சொல்வோம் ! பணக்கார கல்யாண வீடுகளில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு பொருள் !எங்கள் ஊரில், ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி 'மாட்டுக் கார வேலன்' உம், 'கவுரவம்' உம் , VIDEO வாடகைக்கு எடுத்து பார்த்தோம் !


9 . கணினி துறை சம்பந்தமான பொருட்களில் , கணினிக்கும் முன்பே , எனக்கு பரிச்சயமானது FLOPPY தான். இதற்குள் எப்படி தகவலை சேமிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகத் தோன்றும் ! 10 வருடங்களுக்கு முன்பு, ஆச்சர்யமளித்த ஒரு பொருள் ,இப்போது  OUT OF FASHION அல்லது OUT OF PASSION ஆகி விட்டது !




10 . புகைப் படங்கள் எப்போதும் ஆச்சர்யமளிப்பவை ! கூடவே , கேமராவும் ! நம் கண்களில் காணும் உலகத்திற்கும் , கேமரா வழியே காணும் உலகத்திற்கும் வித்தியாசங்கள் அதிகமிருப்பதாக உணர்கிறேன் நான் ! அதன் வழியே காணும் உலகம் அழகானதைத் தோன்றும் எனக்கு ! உங்களுக்கு ?!



11 . அப்போதெல்லாம்,  வீடுகளின் பொருளாதாரத்தை, அந்த வீட்டில் தொலைபேசி இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே தீர்மானிக்கப் படுவதாக நினைத்திருக்கிறேன் ! எங்கள் வீட்டிற்கு தொலை பேசி இணைப்பு கொடுத்ததை , ஒரு பண்டிகையைப் போல கொண்டாடியிருக்கிறோம் ! ஏதேனும் அழைப்பு வந்தால், அதை எடுப்பதில் எங்களுக்குள் சண்டையே நடக்கும் ! ஆனால், இப்போது செல்லிடப் பேசி ( CELL PHONE ) இல்லாத வாழ்க்கையை நினைத்துப்  பார்க்கவே பயமாக இருக்கிறது !



12 . தொலை பேசி இல்லாத காலங்களில் ,தபால் காரரின் வருகைக்கு காத்திருப்பது சுகமான ஒரு விஷயம் ! இன்றும் பண்டிகை தவறாமல் அஞ்சல் அட்டையில் வாழ்த்து அனுப்பும் பெரியப்பா , அப்போது மாதமொருமுறை கடிதம் எழுதுவார் ! பிறகு, முழு ஆண்டு தேர்வு முடிந்து , தேர்வு முடிவுகளும் POST CARD மூலமாகத்தான் ! 'தேர்ச்சி பெற்றுள்ளான் ' என்று , எங்கள் தமிழ் ஆசிரியை எழுதி அனுப்பிய கடிதத்தை பார்த்தவுடன் , நம் பதிவிற்கு 1000 பின்னூட்டங்கள் வந்தது போன்று ஒரு மகிழ்ச்சியிருக்கும் !அப்போது  தபால் காரர் , குடும்பத்தில் ஒருவரை போன்று நெருக்கமானவரை இருந்தார்! இன்று, கடிதங்களையோ அல்லது தபால்காரர்களையோ பார்க்க முடிவதில்லை , அல்லது நாம் கடிதங்கள் எழுதுவதில்லை ! நீங்கள் கடைசியாய் யாருக்கு , எப்பொழுது கடிதம் எழுதி அதை POST செய்தீர்கள் என்று நினைவிருக்கிறதா ?!



 மேலும்  சில  புகைப்படங்கள் , பால்யத்தில் நான் உபயோகிக்காத , எனக்கு பரிச்சயமில்லாத பொருட்கள். இவை தொடர்பான உங்களின் , ஆட்டோ கிராப் கள் வரவேற்கப் படுகின்றன .







சிறந்த ஆட்டோகிராப்புகளுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த BIKE பரிசாக வழங்கப் படும். மாதிரி BIKE கீழே !







 



போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! படத்தை பெரிதாக்க , CLICK பண்ணி பாருங்கள் ! நன்றி !!
 
(குறிப்பு : ஒருவேளை உங்களுக்கு பரிசு கிடைத்தால் , உங்களின் DRIVING லைசென்சையும் கொண்டு வரவும் !)

Sunday, May 23, 2010

இப்படியும் இப்படியும்தான்.....



என்றாவது வரும் பின்னூட்டம்...
தினமும் மெயில் செக் பண்ணும் புது பதிவர்...


*****************************************************************

நெருப்பாய் டிக்கெட் பரிசோதகர் - அடுத்த நிறுத்தத்தில் ....
குளிர்ச்சியாய் திடீர் வேகத் தடை...



*****************************************************************

கலப்படக்காரன் கடையில்
ஐநூறு ருபாய் சில்லறை மாற்றும்
தாடிக் காரன் மேல் சந்தேகப் பார்வை...

*****************************************************************

ரொம்ப நேரம் யோசிச்சும் நாலாவது எழுத முடியலங்க...
யாரவது எழுதிப் போடுங்க...

*****************************************************************
'ஒரிஜினல்'  இங்கேயும் ,
'ஒரிஜினல் ஒரிஜினல்' இங்கேயும் ....

வானம்பாடிகள் ஐயாவும், ஈரோடு கதிர்  அண்ணனும் மன்னிக்கவும்.
சும்மாதான்....

Saturday, May 22, 2010

தலைப்பில்லாப் பதிவுகள்... 22 .05 .2010

ஒரு கேள்வி...


வரும் கல்வி ஆண்டு முதல் , பொறியியல் படிப்புகளை தமிழில் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது தமிழக அரசு. ஏற்கனவே , தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை படித்து விட்டு, பிறகு பொறியியல் பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் தொடர்வதற்கு கிராமப் புற மாணவர்கள் படும் பாடு , பெரும்பாடு. அப்படி தட்டுத் தடுமாறி B .E முடித்து விட்டாலும் கூட, பிறகு வேலைதேடும் போது, போதிய ஆங்கில அறிவு (COMMUNICATION SKILLS) இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில பல லட்சங்களைத் தொடும் ! இப்போது, B .E கூட தமிழில் என்றால் , பின்பு வேலைக்கு என்ன செய்வது ?! ஏற்கனவே , ஆங்கில வழி கல்வி ஆனாலும் , முழு  நேரமாக பட்டப் படிப்பு படித்திருந்தால் மட்டுமே வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கின்றன பல நிறுவனங்கள். "நான் B .E தமிழ் மீடியம் " என்று சொன்னால், வேலை யார் தருவார்கள் ? ஒருவேளை, அவ்வாறு தமிழ் வழியில் பொறியியல் படிப்பவர்களுக்கு வேலை பெற்றுத் தருவதில் , தமிழக அரசு உதவி புரியும் என்று சொன்னால் யாராவது சேருவார்கள்.இல்லையேல் , இவ்வாறான படிப்புகளில் சேர்வதற்கு எந்த மாணவனும் முன்வர மாட்டான் !  உண்மையிலேயே தமிழை வளர்க்க வேண்டுமென்று விருப்பப்பட்டால், தமிழை ஒரு பாடமாக  வேண்டுமானால்,அறிமுகம் செய்யலாம் ! மாறாக, தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை! தானாக வளரும் !அதை விடுத்து .....!  இன்றளவும், நான் தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தேன் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் !

ஒரு கவிதை (யாமாம் !)......



உன் அக்கா கல்யாண ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்..
என் அப்பாவைக் காட்டி 'அப்பா' என்றேன்...
நீ 'மாமா' என்றாய்....
ஏன் அம்மாவைக் காட்டி 'அம்மா' என்றேன்...
நீ 'அத்தை' என்றேன்...
என்னைக் காட்டி 'நான்' என்றேன்...
நீயும் 'நான்' என்றாய் !

ஒரு ஜோக்...

"ச்சே... இந்த முறையும் போரில் தோற்று விட்டோமே மந்திரி..."
"பரவாயில்லை விடுங்கள் மன்னா , 2011  ல பாத்துக்கலாம் "


 ( "சரி, ஜோக் சொல்றேன்னு சொன்னியே ?! எங்க" ன்னு கேக்கப் படாது ! இந்த ஜோக்குக்கு சிரிக்காமல் செல்பவர்களின் பதிவுகளில் , இதையே பின்னூட்டமாக போடப் படும் !)



பின் குறிப்பு : மேலே உள்ள படத்திற்கும் ஜோக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை !

ஒரு உறுத்தல்....



நடந்து முடிந்த IPL 3 இல், பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடி , சென்னை அணியை அரை இறுதிக்கு அழைத்து சென்றார் தோனி . அந்த ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில் , " ஒவ்வொரு அணி முதலாளியும் , தங்கள் அணிகளை நம்பி பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்கள் . அதற்காகவாவது, நாங்கள் அரையிறுதி வரியிலாவது முன்னேற வேண்டும் " என்று சொன்னார். ஆனால், நடந்து முடிந்த மூன்றாவது 20 - 20  உலகக்கோப்பையில் , என்ன செய்தீர்கள் தோனி  ?! அணியில் ஒற்றுமை இல்லாத வரை எந்த ஒரு அணியும் வெற்றியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது !

Saturday, May 15, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.... 50 வது இடுகை

என்னுடைய 10    மாத கால பதிவுலக வாழ்க்கையில் ( ! ) , இது 50 இடுகை. எப்படியோ GOOGLE புண்ணியத்தில், இலவச வலைத்தளம் ஆரம்பித்து விட்டு, இனி என்னத்தை எழுதப் போகிறோம் என்று முழித்துக் கொண்டு இருந்த நான், என்ன என்னத்தையோ எழுதி இருக்கிறேன். பிரபல பதிவரின் , 50  இடுகையில் பங்கு பெறும் பாக்கியம்  தேடிக் கொள்கிறது  'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் '  ! வாழ்த்துக்கள் !



50 வது இடுகைன்னு நெனச்சி நான் போட்ட 49 இடுகை , '"நான் ஏன் பதிவரானேன்? ".... 49 வது இடுகை ....!' . இதையும் , என்னுடைய முதல் இடுகை -முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ).

இதையும் ஒரு முறை படித்து விட்டு வந்துருங்களேன் !


 கடந்த ஞாயிற்றுக் கிழமை செகண்ட் ஷோவிற்கு
அடையார் கணபதிராம் தியேட்டரில் IKMS (IRUMBU KOTTAI MURATTU SINGAM ) படம் பார்க்க போனோம்.மொத்தம் 8 பேர். நான்தான் முதலில் டிக்கட் கவுன்ட்டரில் நின்று கொண்டிருந்தேன்.போகப் போக கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. டிக்கெட் கிடைப்பதே கஷ்டம் என்றாகிப்  போனது. நான் வழக்கமாக, எந்த படத்திற்கும் அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்க மாட்டேன். இந்த வாரம் இல்லைனா , அடுத்த வாரம் .அவ்வளவுதான் ! ஆனால், என்னையும் நம்பி ,' நீ டிக்கெட் எடுத்து வைடா, நாங்க வந்துகிட்டே இருக்கோம் ' னு சொன்ன , நம்ப பசங்களுக்காக கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன்.

இனியும், ' காந்தி ' யா இருந்தா டிக்கெட் கிடைக்காது என்பதையறிந்து , ' சுபாஷ் சந்திர போஸ் ' ஆக மாறி ( நன்றி - வல்லரசு மகாராஜன் ) நான் நாலு டிக்கெட்டும் , நண்பன் நாலு டிக்கேட்டுமாக   வாங்கி உள்ளே சென்றமர்ந்தோம் ! எனக்கு , மன்னன் படத்தில் வரும் ரஜினி- கவுண்டமணி சீன் ஞாபகம் வந்தது! நல்ல வேளை , நாங்கள் போகும் வரை படம் ஆரம்பிக்க வில்லை ! நான் இதுவரை சிம்பு தேவனின் 'இம்சை அரசன் 23 ம் புலிகேசி ' படம் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். 'அறை எண் 305 இல் கடவுள் ' படம் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.புலிகேசி படம் கூட ஏதோ லொள்ளு சபா பார்த்த பீலிங் தான் கொடுத்தது. ஆனால், லொள்ளு சபா  எனக்கு பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதைப் பார்ப்பதற்காகவே , கல்லூரி  விடுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உள்ள ஒரு மெஸ் க்கு கும்பலாக போவோம்.



முதலில் , கல்பாத்தி S அகோரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! ஒரு புதிய (பழைய ?) முயற்சிக்கு, தாராளமாக முதலீடு செய்திருப்பதே பெரிய விஷயம் தான்! அடுத்து , 'மதராசப் பட்டிணம் ' படம் கூட அவரது தயாரிப்புதான் என நினைக்கிறேன். கல்பாத்திகளுக்கு வாழ்த்துக்கள் ! படத்தின் ஆரம்பத்திலேயே சிம்பு தேவனின் கிளிஷேக்கள் நம்மை வரவேற்கின்றன.படத்தின் ஆகப் பெரும் பலம் , கலை இயக்குனர் தான். செட் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதில் இருந்து, நிகழ் காலத்தின் எந்த ஒரு பாதிப்பும் எங்கும் பட்டு விடாமல் காப்பாற்றியிருக்கிறார். அடுத்து , ஒளிப்பதிவாளர் N .அழகப்பன் அவர்கள்.கலை இயக்குனர் பட்ட கஷ்டத்தை  எல்லாம் , திரையில் கொண்டுவந்து அதற்கான பலனை உண்டாக்கி விடுகிறார். அதுவும், கடைசி அரை மணி நேர காட்சிகளுக்கான காமிரா கோணங்கள் அருமை.

 சின்ன சின்ன நகைச்சுவைகளை தன் பாணியில் கோர்த்து திரைக்கதையை  'பின்னி ' எடுத்திருக்கிறார் சிம்பு தேவன்.சில காட்சிகள், திரை அரங்கமே அதிரும் அளவிற்கு கைத் தட்டல்களை உண்டாக்கி விடுகின்றன. லாரன்ஸ், பத்மப்ரியா, லக்ஷ்மிராய்,சந்தியா,மனோரமா,V .S ராகவன்,M .S பாஸ்கர், நாசர்,இளவரசு,வையாபுரி,மௌலி,சாம், என ஒரு மாபெரும் கூட்டத்தை கொண்டுவந்து , சற்றும் போரடிக்காமல் , கதை சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் சிம்பு தேவன். கௌபாய்களுக்கே உரிய ஸ்டைல் - ஐ கொஞ்சம் கரெக்டாகவே செய்திருக்கிறார்  லாரன்ஸ். அவர் செய்யும் சில 'சாகசங்களுக்கு' நல்ல ரெஸ்பான்ஸ் ! மூன்று கதாநாயகிகளும் , 'வந்தார்கள் ,சென்றார்கள் ' ! படத்தின், முக்கிய கதா பாத்திரம் என்று சொன்னால், அது ,  செவ்விந்தியராக வரும்  MS பாஸ்கர் தாங்க ! மனுஷன் என்னமா, PERFORM பண்ணியிருக்கார் ?! உண்மையில், 'சின்ன பாப்பா , பெரிய பாப்பா ' விலிருந்து நான், MS பாஸ்கரின் ரசிகன். நிகழ் கால அரசியல் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது .



குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை, படத்தின் எந்த பாடல்களும். காட்சிகளை DISTURB பண்ணாமல்  ஒலித்துக் கொண்டிருக்கிறது பின்னணி இசை.அந்த ட்ரைலர் பாடல் ( ஒரு நல்லவன் , ஒரு கேட்டவன் , ஒரு வினோதன் ) சூப்பர் ! ஆனால், அந்த அளவுக்கு படத்தில் இல்லையே ?! ஏன் GV ? சரி விடுங்க, மதராசப் பட்டினத்துல பாத்துக்கலாம்.

SO , IKMS -  சிம்பு தேவன் வெச்ச குறி தப்பாது மாமு !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...